முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

குறிக்கோளை அடையும் வரை தாக்குதல்: இஸ்ரேல் பிரதமர்

திங்கட்கிழமை, 25 ஆகஸ்ட் 2014      உலகம்
Image Unavailable

 

ஜெருசலேம், ஆக 26 - அனைத்து குறிக்கோள்களும் நிறைவேறும் வரை காஸா பகுதி மீதான தாக்குதல் தொடரும் என்று இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூ கூறினார்.

இஸ்ரேல் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது நெதன்யாஹூ கூறுகையில், இஸ்ரேல் மீது வெடிகுண்டு தாக்குதல் நடத்துபவர்களுக்கு  மன்னிப்பே கிடையாது. தற்போது நடைபெற்று வரும் இஸ்ரேலின் ராணுவ நடவடிக்கை அதன் குறிக்கோள்கள் அடையும் வரை தொடரும். நமது எதிரிகள் நம்மை சோர்வடைய செய்ய முடியாது. பயங்கரவாத அமைப்பான இஸ்லாமிய தேசமும், ஹமாஸூம் ஒன்றே. தங்கள் இயக்கத்தை சேர்ந்தவர்களையே கொல்லவும், சிறார்களை கொல்லவும் அவர்கள் தயங்குவதில்லை. இவர்களின் உண்மையான சொரூபத்தை உலகம் அறிந்து கொண்டுள்ளது என்று அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்