எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : வரும் டிசம்பர் மாதம் சென்னையில் நடைபெறும் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு நிறைவு விழாவில் பிரதமர் மோடி பங்கேற்க இருப்பதாக ஆர்.பி.உதயகுமார் மற்றும் கடம்பூர் ராஜூ கூட்டாக தெரிவித்தனர்.
எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா மலர் தயாரிப்புக்குழுவின் கூட்டம் சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. செய்தி விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்திற்கு பின்னர் செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
மறைந்த முதல்வர் ஜெயலலிதா எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு விழாவை சிறப்பாக கொண்டாட வேண்டும் என்று ஆசைப்பட்டார். அவரது ஆசைப்படி எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா சிறப்பாக நடத்தப்பட்டு வருகிறது. மதுரையில் தொடங்கிய இந்த விழா காஞ்சிபுரம், திருவள்ளூர், திருவண்ணாமலை, தஞ்சாவூர், நாமக்கல், என பல்வேறு மாவட்டங்களில் நடைபெற்றது. நாளை நாகப்பட்டினம் மாவட்டத்தில் நடைபெறுகிறது.எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் மாணவர்களுக்கான பல்வேறு போட்டிகள் நடத்தப்படுகின்றன. மாவட்டந்தோறும் நலத்திட்டங்களும் வழங்கப்பட்டு வருகின்றன. எம்.ஜிஆர் நூற்றாண்டு விழாவின் நிறைவு விழா வரும் டிசம்பர் மாதத்தில் சென்னையில் நடைபெறுகிறது. இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு சிறப்பிக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி டில்லியில் பலமுறை சந்தித்திருக்கிறார். அப்போதெல்லாம் எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார். வரும் டிசம்பரில் சென்னையில் நடைபெறும் நிறைவு எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி உறுதியாக பங்கேற்பார் என்று அமைச்சர் கடம்பூர் ராஜூ தெரிவித்தார்.
வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி வருமாறு:-
முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி, சகலை போன்றவர்கள் மீது பல வழக்குகள் இருக்கிறதென்றும், அதன் காரணமாக சிறையில் சசிகலாவை சந்திக்க பயந்ததாக தினகரன் கூறியிருக்கிறார். இது தவறான இட்டுக்கட்டிய கற்பனையாகும். எடப்பாடி பழனிசாமியின் சம்பந்தி கர்நாடகத்தில் மிகப்பெரிய ஒப்பந்ததாரராக பணியாற்றி வருகிறார். கர்நாடகத்தில் ரூ.2000 கோடி மதிப்புள்ள பணிகளை மேற்கொண்டு வருகிறார். அது குறித்து வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது எந்த வழக்கும் இல்லை.
பதவி பிரமாணம் மேற்கொண்ட பிறகு, தண்டனை பெற்ற ஒருவரை சிறையில் சென்று சந்திக்க கூடாது என்பது மரபு, அதன் அடிப்படையில் தான் சிறைக்கு சென்று சசிகலாவை முதல்வர் எடப்பாடி சந்திக்கவில்லை. இந்த நிலையில் பொய்யான தகவலை தினகரன் பரப்பி வருவது கண்டிக்கத்தக்கது. தனக்கு நேர்ந்த தோல்விகளால், கையாளாக தனத்தின் காரணமாக தினகரன் இது போன்ற கருத்துக்களை தெரிவித்து வருகிறார். இதேபோன்று பேசினால், நாங்களும் சில செய்திகளை வெளியிட வேண்டி வரும். முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீது உள்நோக்கத்தோடு அவதூறு பரப்பினால் நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
18 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்து சபாநாயகர் வெளியிட்ட தீர்ப்பு விமர்சனத்திற்கு அப்பாற்ப்பட்டது. அதன் மீது கருத்து சொல்வது சட்டவிரோதமாகும். சபாநாயகர் மேற்கொண்ட முடிவை விமர்சனம் செய்ய முடியாது. அதன் மீது கருத்து சொல்லவும் முடியாது. நாங்கள் தாயாய் கருதிய முதல்வர் ஜெயலலிதா மறைந்த நிலையில் அதிர்ச்சியில் இருந்த நாங்கள் கட்சியையும், ஆட்சியையும் காப்பாற்றுவதற்காக சசிகலாவை தற்காலிகமாக தேர்ந்தெடுத்தோம். இப்போது எங்கள் குடும்பத்தில் உள்ள உறுப்பினர்களில் ஒருவரான முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையை, தேர்ந்தெடுத்திருக்கிறோம். இரவல் தலைமையை தேர்ந்தெடுக்கவில்லை, முதல்வர் எடப்பாடி பழனிசாமி சிறப்பான ஆட்சியை நடத்தி வருகிறார். தினகரன் தான் 60 நாட்களில் கட்சியை இணைக்க வேண்டும் என்று கெடு விதித்திருந்தார். இப்போது நாங்கள் இணைந்து விட்டோம். தினகரன் இதில் என்ன குறை கண்டார். நாங்கள் ஒன்று சேர்ந்ததில் என்ன தவறு கண்டார் என்று அவர் கேட்டார்.
அமைச்சர்கள் மீது தினகரன் ஊழல் குற்றச்சாட்டுக்களை கூறுகிறார். ஊழல் குற்றச்சாட்டுகளில் ஆதாரம் இருந்தால் சொல்லவேண்டும். கட்சியிலும் ஆட்சியிலும் இல்லை என்பதால் பொத்தாம் பொதுவாக ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமத்தக்கூடாது. சசிகலாவின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானதாக தினகரன் கூறுகிறார். அது தவறு, மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தியாகத்தால் அவரது தலைமையை ஏற்ற ஒன்றரை கோடி தொண்டர்களின் தியாகத்தால் நாங்கள் அமைச்சர்களானோம். அதற்கு முழுக்க முழுக்க பொறுப்பானவர் ஜெயலலிதா தான். அமைச்சரவையில் சிறு சிறு மாற்றங்கள் ஏற்பட்டிருக்கலாம். ஆனால் இந்த ஆட்சிக்கு முழு பொறுப்பாளர் ஜெயலலிதா தான். அவர் தான் மாவட்டவாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு தேர்தல் பிரசாரம் செய்து இந்த ஆட்சியை வரவழைத்தவர். அ.தி.மு.க.வுக்காக எந்த இடத்திலும் தினகரன் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபடவில்லை. எனவே அ.தி.மு.க.வுக்கு சொந்தம் கொண்டாட தினகரனுக்கு தார்மீக உரிமையில்லை.
இது அம்மாவின் வழிவந்த அரசல்ல என்று தினகரன் கூறுகிறார். அவர் கடந்த பத்தாண்டுகாலமாக அரசியல் துறவறம் மேற்கொண்டிருந்தார். வனவாசம் போயிருந்தார். எனவே அவருக்கு அம்மாவின் அரசை புரிந்து கொள்ள கால அவகாசம் தேவை. அ.தி.மு.க.வின் பொதுக்குழுவில் இரட்டை இலையை மீட்க தீர்மானம் போடப்பட்டிருக்கிறது. இது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் கட்சியின் நிர்வாகிகள் தேர்தல் கமிஷனுக்கு கொண்டு சென்றிருக்கிறார்கள். ஒரே நாளில் தீர்ப்பு வந்து விடாது. இது குறித்து சட்டநிபுணர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல்வர் எடப்பாடி பழனிசாமியும், துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் இரட்டை இலையை மீட்டெடுப்போம் என்று கூறியிருக்கிறார்கள் அது சத்திய வாக்கு, அந்த வாக்கை கண்டிப்பாக இருவரும் நிறைவேற்றுவார்கள். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஜூசி சிக்கன்கட்லட்18 hours 36 sec ago |
ஜூசி க்ரீன் சிக்கன்3 days 14 hours ago |
கத்திரிக்காய் ரோஸ்ட்1 week 20 hours ago |
-
நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது
15 Jun 2024நெல்லை, நெல்லையில் மார்க்சிஸ்ட் அலுவலகம் அடித்து நொறுக்கப்பட்ட விவகாரத்தில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
-
பணத்தை திருப்பி தாருங்கள்: முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ்
15 Jun 2024வாஷிங்டன் : தவறுதலாக அதிக பணம் கொடுக்கப்பட்டு விட்டதாகவும், அதனை திருப்பி தர வேண்டும் என முன்னாள் ஊழியர்களுக்கு டுவிட்டர் நிறுவனம் நோட்டீஸ் அனுப்பி உள்ளது என ஆஸ்திரேலிய
-
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சி செய்யும்: தேர்தல் புறக்கணிப்பு குறித்து ஜெயக்குமார் விளக்கம்
15 Jun 2024சென்னை, விக்கிரவாண்டியில் போலி வெற்றியை பெற தி.மு.க. முயற்சிக்கும் என்று தெரிவித்துள்ள அ.தி.மு.க.
-
வீடியோ பதிவை நீக்குங்கள்: கெஜ்ரிவால் மனைவிக்கு டெல்லி ஐகோர்ட் உத்தரவு
15 Jun 2024புது டெல்லி, மதுபான கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் பேசியதை பதிவு செய்து சமூக வலைதளத்தில் வெளியிட்ட வீடியோவை, உடனடியாக நீக்
-
விக்கிரவாண்டி இடைத்தேர்தலை புறக்கணிக்கிறது அ.இ.அ.தி.மு.க.: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
15 Jun 2024சென்னை, தி.மு.க.
-
பக்ரீத் பண்டிகை முன்னிட்டு பாக்.கில் பெட்ரோல், டீசல் விலை குறைப்பு
15 Jun 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானில் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு பெட்ரோல் மற்றும் அதிவேக டீசல் விலையை லிட்டருக்கு ரூ.
-
தற்கொலைப்படை ட்ரோன்: நாகாஸ்திரா-1 இந்திய ராணுவத்தில் சேர்ப்பு
15 Jun 2024புதுடெல்லி, தற்கொலைப்படை ட்ரோன் எனப்படும் நாகாஸ்திரா-1 ட்ரோன் இந்திய ராணுவத்தில் முறைப்படி சேர்க்கப்பட்டுள்ளது.
-
யூமா வாசுகிக்கு பால சாகித்ய புரஸ்கார், லோகேஷ் ரகுராமனுக்கு யுவ புரஸ்கார் விருது அறிவிப்பு
15 Jun 2024சென்னை, இந்த ஆண்டின் குழந்தை இலக்கியத்துக்கான பால சாகித்ய புரஸ்கார் எழுத்தாளர் யூமா வாசுகிக்கும், யுவ புரஸ்கார் விருது எழுத்தாளர் லோகேஷ் ரகுராமனுக்கும் அறிவிக்கப்பட்டுள
-
மதுரைக்கு இன்று வருகை தரும் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சார்பில் வரவேற்பு : முன்னாள் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ எம்.எல்.ஏ. அறிக்கை
15 Jun 2024மதுரை : மதுரைக்கு இன்று வருகை தரும் அ.தி.மு.க.பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு மாநகர் மாவட்ட அ.தி.மு.க.சார்பில் விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படும் என்
-
தமிழிசை குறித்து அவதூறு பேச்சு: சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு நடிகை குஷ்பு கண்டனம்
15 Jun 2024சென்னை, தமிழிசை குறித்து அவதூறாக பேசிய தி.மு.க. பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்திக்கு குஷ்பு கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாட்டம்: தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோர்
15 Jun 2024எட்டயபுரம், நாளை பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளதை முன்னிட்டு தமிழகத்தில் ஆடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்று வருகிறது.
-
ஸ்வாதி மாலிவால் வழக்கு: பிபவ் குமாரின் காவல் நீட்டிப்பு
15 Jun 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் உதவியாளர் பிபவ் குமாரின் நீதிமன்ற காவலை ஜூன் 22ஆம் தேதி வரை நீட்டித்து டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு ஆஸ்பத்திரியில் ஒரே ஆண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை: அமைச்சர் தகவல்
15 Jun 2024சென்னை, கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் ஓராண்டில் இரண்டரை லட்சம் பேருக்கு சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதாக அமைச்சர் மா.
-
தமிழகத்தில் 10,020 பழைய பஸ்கள் இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் : அமைச்சர் சிவசங்கர் தகவல்
15 Jun 2024திருச்சி : தமிழகம் முழுவதும் தற்போது இயக்கத்தில் இருக்கும் 20,116 பழைய பேருந்துகளில் 10,020 பேருந்துகள் அடையாளம் காணப்பட்டு, இந்த ஆண்டுக்குள் அகற்றப்படும் என்று போக்குவ
-
தமிழகத்தில் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
15 Jun 2024சென்னை : தமிழகத்தின் ஒருசில இடங்களில் வரும் 21-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
-
தமிழக எம்.பி.க்களின் குரல் இனி பார்லி.யில் வலுவாக இருக்கும் : கோவை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
15 Jun 2024கோவை : பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல் இனி வலுவாக இருக்கும் என்று கோவையில் நடைபெற்ற தி.மு.க.
-
புடினின் போர் நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது: உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி
15 Jun 2024கீவ் : புடினின் போர்நிறுத்த ஒப்பந்தத்தை நம்ப முடியாது என்று உக்ரைன் அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
இந்தியாவுக்கு முதல் பதக்கம்
15 Jun 2024பிரேசில், ரஷியா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா ஆகிய 5 நாடுகளின் கூட்டமைப்பான பிரிக்ஸ் அமைப்பால் ஆண்டுதோறும் பிரிக்ஸ் விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன.ரஷியாவின்
-
குவைத் தீவிபத்தில் உயிரிழந்த 7 தமிழர்களின் உடல்கள் அடக்கம்
15 Jun 2024சென்னை, குவைத் தீவிபத்தில் பலியான தமிழகத்தைச் சேர்ந்த 7 தமிழர்களின் உடல்கள் சொந்த ஊர்களுக்கு கொண்டுவரப்பட்டு அடக்கம் செய்யப்பட்டன.
-
ஜி 7 உச்சி மாநாடு: இத்தாலி சென்ற பிரதமர் மோடி நாடு திரும்பினார்
15 Jun 2024புதுடெல்லி : ஜி7 மாநாட்டில் பங்கேற்க இத்தாலி சென்றிருந்த, பிரதமர் மோடி நேற்று நாடு திரும்பினார்.
-
தென் ஆப்பிரிக்க அதிபராக ரமபோசா மீண்டும் தேர்வு
15 Jun 2024கேப் டவுன் : தென் ஆப்பிரிக்காவின் அதிபராக சிறில் ரமபோசா மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
-
குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடு: 5 பேர் கைது - ரூ.7 லட்சம் பறிமுதல்
15 Jun 2024கோத்ரா, குஜராத்தில் நடைபெற்ற நீட் தேர்வில் மிகப்பெரிய முறைகேடு தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது. முறைகேட்டில் ஈடுபட்ட இடைதரகர் உள்ளிட்ட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
-
ஜெகன்மோகன் ரெட்டியின் வீட்டில் ஆக்கிரமிப்பு கட்டிடம் இடிப்பு
15 Jun 2024அமராவதி, ஆந்திர முன்னாள் முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் வீட்டில் நடைபாதையை ஆக்கிரமித்து கட்டப்பட்ட கட்டிடங்கள் புல்டோசர் மூலம் இடித்து அகற்றப்பட்டது.
-
இத்தாலியில் ஜி 7 மாநாட்டின்போது பிரதமர் மோடியை ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்திய போப் பிரான்சிஸ்
15 Jun 2024ரோம் : இத்தாலியில் நடந்த ஜி 7 மாநாட்டின் போது போப் பிரான்சிசும், பிரதமர் மோடியும் ஆரத்தழுவி அன்பை வெளிப்படுத்தினர்.
-
திருப்பதி கோவிலில் மத்திய அமைச்சர் குமாரசாமி தரிசனம் : பெரிய பொறுப்பை பிரதமர் அளித்துள்ளதாக பேட்டி
15 Jun 2024திருப்பதி : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் மத்திய அமைச்சரும், கர்நாடக முன்னாள் முதல்வருமான குமாரசாமி நேற்று தரிசனம் செய்தார்.