எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

காரைக்குடி:-காரைக்குடி, அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத் துறையின் சார்பில், தமிழ்நாடு வரலாற்றுப் பேரவையின் 24-வது ஆண்டு அமர்வின் மூன்று நாள் மாநாட்டின் நிறைவு விழா பல்கலைக்கழக லெ.சித.லெ. பழனியப்பச் செட்டியார் நினைவு கலையரங்கில் நடைபெற்றது.
அழகப்பா பல்கலைகழக துணைவேந்தர் பேரா. சொ.சுப்பையா அவர்கள் நிறைவு நாள் நிகழ்ச்சியில் பங்கேற்று தலைமையுரையாற்றினார். அவர் தமது உரையில் ஒவ்வொருவரும் வரலாற்று உணர்வை வளர்த்துக்கொள்வதன் மூலம் மனித பண்பாட்டு வரலாற்றை நல்ல முறையில் அறிந்துகொள்ளவதுடன் நமது ஜனநாயகத்தை பாதுகாக்க முடியும் என்றார். பல்வேறு மாநிலங்கள், தேசங்கள், மற்றும் உலக வரலாறுகளை படிப்பதன்; மூலம் மன்னர்கள் எவ்வாறு ஆட்சி செய்தார்கள் என்பதையும் அவர்கள் எதிர்கொண்ட பிரச்சினைகள் பற்றியும் அதற்கு எவ்வாறு தீர்வு கண்டார்கள் என்பதையும் அறிந்துகொள்ளவதோடு மக்களுiடைய நலனுக்கு என்னவெல்லாம் செய்தார்கள் பற்றியும் அறிந்து கொள்ள முடியும் என்றார்.
இன்றைய இளைய சமூதாயத்தினர் வரலாற்றை முறையாக படிப்பதன் மூலம் அவர்கள் ஒரு சிக்கலான சூழலில் சரியான மற்றும் தைரியமான முடிவுகளை எடுப்பதற்கு வரலாற்று அறிவு பெரிதும் உதவும் என்றார். இன்றைய சூழலில் மாணவர்கள் தேசிய மற்றும் உலக வரலாறு பற்றிய தெளிவான அறிவை பெற்றிருந்த போதிலும் தத்தம் பகுதியைச் சேர்ந்த வரலாற்று முக்கியத்துவங்களை அவர்கள் சரிவர தெரிந்திருக்கவில்லை. எனவே ஆசிரியர்கள் மாணவர்களுக்கு தத்தம் பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவம் பற்றி மாணவர்களுக்கு முதலில் கற்றுத்தர வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு வரலாற்று பாடத்தின் முக்கியத்துவம் பற்றியும் வரலாற்றில் சிறப்பு பெற்றவர்களின் வாழ்க்கை வரலாற்றை கோடிட்டு காட்டி அவர்களை முன்மாதிரியாகக் கொண்டு மாணவர்கள் செயல்பட ஆசிரியர்கள் வழிகாட்ட வேண்டும் எனக் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்ச்சியில் திரு. எஸ்.முத்தையா, வரலாற்று அறிஞர் மற்றும் எழுத்தாளர், நிறைவு விழா பேருரையாற்றினார். அவர்தம் பேருரையில் வரலாறு என்பது அனைவரும் ஆர்வத்துடன் படிக்கக் கூடிய பாடமாகும். வரலாறு படிக்கும் மாணவர்களிடம் வரலாற்றை பாடப்புத்தகங்களில் உள்ள செய்தியாக மட்டும கற்பிக்காமல் அதனை ஒரு கதை வடிவில் கற்பிப்பதன் மூலம் அவர்களிடையே ஒரு ஆர்வத்தை உருவாக்க முடியும் என்றார். அவர் மேலும் பேசுகையில் வரலாறு, புவியியல், குடிமையியல், சுற்றுப்புறவியல் இவை நான்கும் தனித்தனிப் பாடங்களாக 3ஆம் வகுப்பு முதல் கற்றுத் தரவேண்டும். அதோடு அந்தந்த பகுதியைச் சார்ந்த வரலாற்று முக்கியத்துவத்துவத்தையும் கற்றுத்தருவதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என்றார். ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கையும் ஒரு வரலாறு எனவே ஒரு மனிதன் குறைந்தது ஆயிரம் வார்த்தைகளைக் கொண்டு தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி தினந்தோறும் எழுத வேண்டும். அது வெளியீட்டிற்காக அல்ல. அது தன்னுடைய குழந்தைகள், மற்றும் சந்ததியினர் தங்களது முன்னோர்கள் எந்த சூழ்நிலைகளில் எவ்வாறு வாழ்ந்தார்கள் என்பதை அறிய உதவும் என்றார்.
அழகப்பா பல்கலைக்கழக பதிவாளர் முனைவர் வி.பாலச்சந்திரன் தனது வாழ்த்துரையில் வரலாற்றை படிக்கும் மாணவர்களுக்கு எந்தெந்த துறைகளிலெல்லாம் வேலைவாய்ப்புகள் நிறைய உள்ளன என்பதை விளக்கமாக விவரித்தார். குறிப்பாக அருங்காட்சியகத் துறை, தொல்லியல் துறை, புராதான சின்னங்களைப் பாதுகாக்கும் துறை, இதுபோன்ற துறைகளில் வேலை வாய்ப்புகள் அதிகமாக உள்ளன என்றார். எனவே வரலாறுபடிக்கும் மாணவர்கள் சீரிய முறையிலும் ஆர்வத்துடனும் ஆழமாகவும் வரலாற்றைப் படிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
கொடைக்கானல் மதர்தெரசா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் ஜானகி, முனைவர் என்.ராஜேந்திரன், பொதுச்செயலாளர்,தமிழ்நாடு வரலாற்றுப் பேரவை ஆகியோரும் வாழ்த்துரை வழங்கினர். முனைவர் கருணாநந்தம், தலைவர், வரலாற்றுப் பேரவை, மற்றும் திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் பி.ஜெகதீசன், ஆகியோர் விழாவில் கலந்து கொண்டு சிறப்பித்தனர். முன்னதாக வரலாற்றுத் துறை பேராசிரியர் (பொ) முனைவர் கே.கிரு~;ணமூர்த்தி வரவேற்புரையாற்றினார். முனைவர் ஜி.பரந்தாமன் உதவிப் பேராசிரியர் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
புரூக்குக்கு ரிஷப் பதிலடி
06 Jul 2025இந்தியா-இங்கிலாந்து கிரிக்கெட் அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி பர்மிங்காமில் நடந்தது.
-
குற்றச்சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி: ராகுல் காந்தி
06 Jul 2025பாட்னா: குற்றச் சம்பவங்களை தடுப்பதில் பீகார் அரசு தோல்வி அடைந்து விட்டதாக ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
அடுத்த போட்டியில் 200 ரன்கள் குவிப்பேன்: வைபவ் சூர்யவன்ஷி
06 Jul 2025லண்டன்: அடுத்தப் போட்டியில் 200 ரன்கள் குவிக்க முயற்சி செய்வேன் என்று இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி தெரிவித்தார்.
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன எக்ஸ் கணக்கு முடக்கம்: மத்திய அரசு விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின் எக்ஸ் கணக்கு இந்தியாவில் முடக்கபட்டது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
'அமெரிக்கா கட்சி' என்ற பெயரில் புதிய அரசியல் கட்சியை தொடங்கினார் எலான் மஸ்க்
06 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்புடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ள நிலையில், அமெரிக்கா கட்சி என்ற புதிய கட்சியை எலான் மஸ்க் தொடங்கியுள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.