முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் தற்கொலை படை தாக்குதல் நடத்திய தீவிரவாதியின் படம் வெளியீடு

வெள்ளிக்கிழமை, 15 பெப்ரவரி 2019      இந்தியா
Image Unavailable

புது டெல்லி, ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு திரும்பிக் கொண்டிருந்த 78 வாகனங்களில் மொத்தம் 2,500 பாதுகாப்புப் படை வீரர்கள் பயணித்தனர். புல்வாமா மாவட்டத்தில் உள்ள அவந்திபோரா பகுதியில், பாதுகாப்பு படை வீரர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைபடை தீவிரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இந்த வெடிகுண்டு தாக்குதலில் பாதுகாப்புப் படை வீரர்களின் பலி எண்ணிக்கை 44 ஆக உயர்ந்து உள்ளது.

தற்கொலை தாக்குதல் நடத்தியது ஆதில் அகமது தர் என்ற நபர் தான் என்பது தெரிய வந்த நிலையில், அவனை பற்றிய சில தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. ஆதில் அகமது தர் ஜம்மு காஷ்மீரின் கண்டிபா பகுதியைச் சேர்ந்தவன். கண்டிபா தாக்குதல் நடந்த பகுதியில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது. ஆதிலின் தந்தையின் பெயர் ரியாஸ் அகமது. அவர் அங்கு சிறிய கடை ஒன்றை நடத்தி வருகிறார். பன்னிரெண்டாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த ஆதில் இடையில் படிப்பை நிறுத்தி விட்டு, அருகிலிருக்கும் மில் ஒன்றிற்கு வேலை சென்று வந்துள்ளான். அப்போது இவனது உறவினர் ஒருவர் பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பாதுகாப்பு படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டதால், அதன் மூலம் இவனுக்கு பயங்கரவாத இயக்கத்துடன் தொடர்பு கிடைத்துள்ளது.

கடந்த 2016 மார்ச் மாதத்தில் இருந்து ஆதில் மற்றும் அவனது நண்பர்கள் தவுசீப் மற்றும் வாசிமை காணவில்லை. தவுசீப் மூத்த சகோதரர மன்சூர் தீவிரவாதி ஆவார். அவர் கடந்த 2016 ஆம் ஆண்டு கொல்லப்பட்டார்.  அதன் பின் அவனை பயங்கரவாத அமைப்பினர் தொடர்ந்து மூளைச்சலவை செய்து வந்துள்ளனர். இதையடுத்து கடந்த ஆண்டு திடீரென காணாமல் போன ஆதில், பாகிஸ்தானைச் சேர்ந்த ஜெய்ஷ் - இ- முகமது பயங்கரவாத அமைப்பில் சேர்ந்து பயிற்சிப் பெற்றுள்ளான். அங்கு இருந்த பயங்கரவாத அமைப்பினர் அவனை தற்கொலை தாக்குதலுக்கு தயார்படுத்தியுள்ளனர். தயாராகிக் கொண்டிருந்த போதே, அவன் பெரிய தாக்குதல் ஒன்றிற்காக காத்து கொண்டிருந்துள்ளான். அதன்படி இந்த தாக்குதலை நிறைவேற்றியுள்ளான். இவன், அந்த பயங்கரவாத அமைப்பின் சி பிரிவைச் சேர்ந்த பயங்கரவாதி என போலீசார் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து