எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை : தமிழகத்தில், பாலியல் வழக்குகளை விசாரிக்க விரைவில் தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும் என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
சேலம், எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் திறப்பு விழாவில், முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி எடப்பாடி மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் எடப்பாடி, பூலாம்பட்டி மற்றும் கொங்கணாபுரம் ஆகிய மூன்று காவல் நிலையங்களின் எல்லைகளை கொண்டதாக இருக்கும். சங்ககிரி முன்சீப் நீதிமன்றத்தில் இருந்து 531 வழக்குகளும், சங்ககிரி குற்றவியல் நீதிமன்றங்கள் இரண்டிலிருந்தும் 377 வழக்குகளும் மொத்தம் 908 வழக்குகள் எடப்பாடி நீதிமன்றத்திற்கு மாற்றம் செய்யப்பட உள்ளன. இதன் மூலம் இப்பகுதியில் வழக்கு தொடுத்தோருக்கு குறித்த காலத்தில் நீதி கிடைக்கும். மாநிலத்தின் உயரிய நீதி அமைப்பு சென்னை உயர் நீதிமன்றம் ஆகும். இதன் கிளை மதுரையில் அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் மொத்தம் 1149 நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில் சென்னையில் 126 நீதிமன்றங்களும், இதர மாவட்டங்களில் 1023 நீதிமன்றங்களும் இயங்கி வருகின்றன. நீதிமன்றங்களுக்கான கட்டடங்கள் கட்டுதல், பராமரித்தல், நீதிபதிகளுக்காக குடியிருப்புகள் கட்டுதல் போன்ற நீதித்துறைக்கான மேம்பாட்டு பணிகளுக்காக கடந்த 8 ஆண்டுகளில் சுமார் 1000 கோடி ரூபாயை தமிழ்நாடு அரசு வழங்கியுள்ளது.
2011-12 முதல் 2018-19ஆம் ஆண்டுகள் வரை 456 புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்த அரசு ஒப்புதல் வழங்கியுள்ளது. சென்னையில் சிறப்பு நீதிமன்றம் உட்பட 33 புதிய நீதிமன்றங்களை 2018-19ஆம் ஆண்டில் அரசு அமைத்துள்ளது. நீதிமன்றங்களுக்கு 15 புதிய கட்டடங்களை கட்டுவதற்கு 2018-19ஆம் ஆண்டில், 101 கோடியே 89 லட்சம் ரூபாய் அம்மாவின் அரசால் ஒப்புதல் தரப்பட்டுள்ளது. 2019-2020 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்ட மதிப்பீடுகளில் நீதி நிர்வாகத்திற்காக 1 ஆயிரத்து 265 கோடியே 64 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. திருப்பூர், முசிறியில் கூடுதல் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், கள்ளக்குறிச்சியில் கூடுதல் சார்பு நீதிமன்றம், குழித்துறையில் ஒரு கூடுதல் மாவட்ட நீதிமன்றம், ஸ்ரீவைகுண்டத்தில் கூடுதலாக ஒரு குற்றவியல் நடுவர் நீதிமன்றம், நாங்குநேரி மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி ஆகிய இடங்களில் சார்பு நீதிமன்றம் சேந்தமங்கலம் மற்றும் குமாரபாளையம் வட்டங்களில் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள், காரியமங்கலம், விக்கிரவாண்டி, சிங்கம்புணரி, பல்லாவரம், மதுரவாயல் ஆகிய இடங்களில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் ஆகியவை வரும் ஆண்டுகளில் அமைக்கப்பட உள்ளன. வழக்குரைஞர்களின் நலனைக் கருத்தில் கொண்டு பணியில் இருக்கும் போது இறக்கும் வழக்குரைஞர்களின் வாரிசுதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்த சேமநலநிதி 7 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் தமிழ்நாடு வழக்குரைஞர்கள் நல நிதிக்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வந்த நிதியுதவியை 4 கோடி ரூபாயிலிருந்து 8 கோடி ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. 220 உரிமையியல் நீதிபதி பணியிடங்கள், நேரடி நியமனம் மூலம் தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தால் 2018-19ஆம் ஆண்டு நிரப்பப்பட்டுள்ளன.அரசின் இடையறா முயற்சியின் காரணமாக உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புகள் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டு வருகின்றன. உயர் நீதிமன்றத்தின் தமிழ் மொழியை வழக்காடு மொழியாக கொண்டு வரவேண்டும் என்று மத்திய அரசிடம் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
நீதித்துறையில் மின்னணு ஆளுமை முறைகளை புகுத்துவதன் அவசியத்தையும். அதனால் மக்களுக்கு ஏற்படும் நன்மைகளையும் கருத்தில் கொண்டும், இத்துறையில் முழுமையாக மின்னணு ஆளுமை முறைகளைக் கொண்டு வர ஏதுவாக நீதிமன்றங்களில் நீதிமன்றங்களில் நீதிசார்ந்த மின்னணு முத்திரைத்தாள் முறையினை புகுத்திட வேண்டுமென்ற உயர்நீதிமன்றத்தின் கோரிக்கையை ஏற்று, அரசால் இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையில் கணினிமயமாக்கல் நடவடிக்கைகளுக்கு தமிழ்நாடு அரசு போதுமான நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. மாநிலத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைவில் முடிவுக்கு கொண்டுவர ஏதுவாக பல்வேறு பதவிகளுக்கு 1188 பணியிடங்கள் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டுள்ளன. அருங்காட்சியகம் மற்றும் கலையரங்கம் அமைப்பதற்கு 10 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.
எடப்பாடி பகுதி ஒரு பின்தங்கிய பகுதி. வழக்குகள் எல்லாம் சங்ககிரிக்கு சென்று கொண்டிருந்த நிலையை மாற்றி, ஏழைகளுக்கு குறுகிய காலத்திலேயே நீதி கிடைக்கவேண்டும் என்பதற்காக இந்த நீதிமன்றம் திறக்கப்பட்டிருக்கின்றது. நம்முடைய தலைமை நீதிபதியும், உயர்நீதிமன்ற நீதியரசர்களும், மற்ற நீதிபதிகளும், வழக்கறிஞர்களும் நம்முடைய தொகுதிக்கு வந்து நேரடியாக இந்த நீதிமன்றத்தை திறந்து வைத்ததற்கு, தொகுதி சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையிலே அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதே போல பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. அதன் அடிப்படையிலே, விரைவில் தமிழகத்தில், பாலியல் வழக்குகளை விசாரிக்க தனி சிறப்பு நீதிமன்றம் அமைக்க அரசு, தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்யும். விரைவாக நீதி கிடைக்கச் செய்வதைக் கருத்தில் கொண்டு, உள்கட்டமைப்பு வசதிகள் மற்றும் பணியாளர் உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் நீதிமன்றங்களின் தேவைகளுக்கு ஏற்ப உடனுக்குடன் நிறைவேற்றுகின்ற அரசாக என்னுடைய அரசு திகழும் என்று தெரிவித்துக் கொள்கிறேன். அதுமட்டுமல்ல, நமது சட்டத்துறை அமைச்சர் தலைமை நீதியரசர் என்ன சொல்கின்றார்களோ, அடுத்த விநாடியே அதை நிறைவேற்றுவதற்கு நேரடியாக என்னிடத்தில் வந்து கையொப்பம் பெற்றுச் செல்வார். ஆகவே, நீதிபதிகளுக்கு தேவையான அனைத்து வசதிகளும் எங்களுடைய அரசு செய்து கொடுக்கும் என்பதை இந்த நேரத்தில் தெரிவித்துக் கொள்கிறேன். நாங்கள் ஆசிரியர்களையும், நீதிபதிகளையும் மிகவும் மதிக்கின்றோம். நீதியரசர்களையும், ஆசிரியர்களையும், கடவுளுக்கு சமமானவர் என்று குறிப்பிடுவார்கள். ஆகவே, நீதியரசர்களையும், ஆசிரியர்களையும் இறைவனுக்கு சமமாக கருதுவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன். இந்த நிகழ்ச்சிக்கு தலைமை நீதிபதி நேரடியாக வந்து எடப்பாடி நீதிமன்றத்தை திறந்து வைத்தமைக்கு அவரோடு வருகை தந்த உயர்நீதிமன்ற நீதியரசர்களுக்கும், வழக்கறிஞர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 1 month ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 1 month ago |
-
புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் இன்று இயங்கும்
24 Oct 2025புதுச்சேரி: புதுச்சேரியில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் பள்ளி, கல்லூரிகள் இயங்கும் என்று அரசு தெரிவித்துள்ளது.
-
தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் பள்ளிகளில் மாணவர் இடைநிற்றல் விகிதம் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவித்துள்ளது.
-
ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன்..? மலேசியா பிரதமர் அன்வர் விளக்கம்
24 Oct 2025கோலாலம்பூர், ஆசியான் உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்காதது ஏன் என்பது குறித்து மலேசியா பிரதமர் அன்வர் விளக்கமளித்துள்ளார்.
-
5 டி-20 போட்டிகள் தொடர்: ஆஸ்திரேலியா சென்றடைந்த இந்திய இளம் வீரர்கள் அணி
24 Oct 2025பெர்த்: 5 டி-20 போட்டிகள் தொடரில் பங்கேற்க இந்திய இளம் வீரர்கள் அணி ஆஸ்திரேலியா சென்றடைந்தது.
வருகிற 29-ந் தேதி....
-
கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்கிறார் விஜய்
24 Oct 2025சென்னை: கரூர் நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சென்னைக்கு வரவழைத்து சந்திக்க விஜய் திட்டமிட்டுள்ளார்.
-
மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை
24 Oct 2025சென்னை: மழை, முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் தலைமை செயலாளர் மற்றும் துறைசார் உயர் அதிகாரிகள் பங்கேற்றனர்.
-
வரும் 28-ம் தேதி மாமல்லபுரத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தி.மு.க. நிர்வாகிகளுக்கு பயிற்சி கூட்டம்
24 Oct 2025சென்னை, 'என் வாக்குச்சாவடி' 'வெற்றி வாக்குச்சாவடி' என்ற பெயரில் தி.மு.க.
-
துபாயில் இந்திய மாணவர் உயிரிழப்பு
24 Oct 2025துபாய்: துபாய் பல்கலைக்கழகத்தில் இந்திய மாணவர் உயிரிழந்தார்.
-
வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தப் பணிகள் அடுத்த வாரம் முதல் தமிழகத்தில் துவக்கம் தலைமை தேர்தல் ஆணையம் தகவல்
24 Oct 2025சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த வாரம் முதல் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் தொடங்கும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு சம்மன்
24 Oct 2025சென்னை: போதைப் பொருள் வழக்கு: நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா வுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
-
குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால் பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை
24 Oct 2025பாகிஸ்தான், குனார் நதியில் அணை கட்ட தாலிபான்கள் எடுத்த முடிவால்பாகிஸ்தானுக்கு புது பிரச்சினை ஏற்பட்டுள்ளது.
-
ஆசிய இளையோர் கபடி இறுதிப்போட்டி: ஈரான் அணியை வீழ்த்திய இந்திய ஆடவர்-மகளிர் அணிக்கு தங்கம்
24 Oct 2025மனாமா: ஆசிய இளையோர் விளையாட்டுப் போட்டி 2025 தற்போது பஹ்ரைனில் மனாமா நடைபெற்று வருகிறது.
-
சேலம் அருகே விபத்தில் 3 பேர் பலி
24 Oct 2025உளுந்தூர்பேட்டை: சேலம் அருகே டேங்கர் லாரி மீது கார் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர்.
-
பீகாரில் 10 சட்டசபை தொகுதிகளில் இன்டியா கூட்டணிக்குள் போட்டி
24 Oct 2025பாட்னா: பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் இன்டியா கூட்டணிக் கட்சியினர் 10 தொகுதிகளில் ஒருவரை ஒருவர் எதிர்த்துப் போட்டியிடுவது உறுதியாகியுள்ளது.
-
மகளிர் உலகக் கோப்பை: அரையிறுதிக்குள் நுழைந்தது இந்தியா
24 Oct 2025மும்பை: மகளிர் உலகக் கோப்பை போட்டி லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி இந்திய அணி அரையிறுதிக்குள் நுழைந்தது.
-
குண்டு வைக்க சதி: டெல்லியில் 2 பயங்கரவாதிகள் கைது
24 Oct 2025புதுடெல்லி: டெல்லியில் குண்டு வைக்க சதி திட்டம் தீட்டிய ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
கனமழையால் நெற்பயிர்கள் பாதிப்பு: அமைச்சர் பன்னீர்செல்வம் ஆய்வு
24 Oct 2025நாகப்பட்டினம்: வடகிழக்கு மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை அமைச்சர் பன்னீர் செல்வம் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
-
தி.மலை நீர் நிலைகளிலும், மலைப்பகுதிகளிலும் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற ஐகோர்ட் உத்தரவு
24 Oct 2025சென்னை: மலைப் பகுதி ஆக்கிரமிப்புகளை அகற்ற உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
-
பீகாரில் என்.டி.ஏ. ஆட்சிக்கு வந்தால் நிதிஷ் குமாரால் முதல்வராக முடியாது தேஜஸ்வி யாதவ் பிரச்சாரம்
24 Oct 2025பாட்னா: என்.டி.ஏ.
-
ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தகவல்
24 Oct 2025வாஷிங்டன்: ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைத்துள்ளது என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
வருகிற 30-ம் தேதி தென் கொரியாவில் சீன அதிபர் ஜின் பிங்கை சந்திக்கிறார் ட்ரம்ப்
24 Oct 2025வாஷிங்டன், தென்கொரியாவில் வருகிற 30-ம் தேதி சீன அதிபருடன் அமெரிக்க அதிபர் டிரம்ப் சந்தித்து பேசுகிறார்.
-
என்றும் மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் நினைவு நாளில் முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
24 Oct 2025சென்னை: மருது சகோதரர்கள் நினைவை போற்றுவோம் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.
-
ஆந்திரா, கர்னூல் மாவட்டத்தில் பயங்கரம்: ஆம்னி பேருந்து தீ விபத்தில் 23 பேர் உடல் கருகி உயிரிழப்பு 18 பேர் படுகாயம் - மாவட்ட ஆட்சியர் தகவல்
24 Oct 2025கர்னூல்: ஆந்திரம் மாநிலம், கர்னூல் மாவட்டத்தில் ஐதராபாத்-பெங்களூரு தனியார் ஆம்னி பேருந்து தீப்பிடித்து எரிந்ததில் 23 பேர் பலியானதாகவும், 18 பேர் மருத்துவமனையில் சிகிச்ச
-
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு பீகாரில் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கினார் பிரதமர் மோடி ஆர்.ஜே.டி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் மீது கடும் தாக்கு
24 Oct 2025பாட்னா: பீகார் மாநிலத்தில் சட்டசபை தேர்தல் பிரச்சாரத்தை பிரதமர் மோடி நேற்று தொடங்கினார்.
-
ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து மேலும் அதிகரிப்பு
24 Oct 2025ஒகேனக்கல்: ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 57 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டதை அடுத்து அங்கு தொடர்ந்து சுற்றுலா பயணிகள் குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை விதிக்க


