முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சீனாவில் இருந்து வந்த வைரசை எப்போதும் மறக்க மாட்டோம்: அதிபர் டிரம்ப் சொல்கிறார்

ஞாயிற்றுக்கிழமை, 27 செப்டம்பர் 2020      உலகம்
Image Unavailable

Source: provided

வாஷிங்டன் : சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம் என அதிபர் டிரம்ப் கூறியுள்ளார்

கொரோனா வைரஸ் விவகாரத்தில் அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே தொடர்ந்து மோதல் நீடித்து வருகிறது. கொரோனா வைரசை சீனா வேண்டுமென்றே உலக நாடுகளுக்கு பரப்பியதாகவும், இந்த விவகாரத்தில் உலக சுகாதார அமைப்பு சீனாவின் கைப்பாவையாக இருப்பதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

ஆனால் இந்தக் குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுக்கும் சீனா கொரோனா வைரஸ் விவகாரத்தில் மிகவும் வெளிப்படையாக நடந்து கொள்வதாகவும் கூறுகிறது. 

இந்த நிலையில் அமெரிக்காவில் அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தின் போது கொரோனா வைரஸ் குறித்து பேசிய டிரம்ப், சீனாவை கடுமையாக விமர்சித்தார். இதுபற்றி அவர் கூறியதாவது:- 

சீனாவிலிருந்து வந்த வைரசை நாங்கள் எப்போதும் மறக்க மாட்டோம். அவர்கள் அதை ஒருபோதும் அனுமதித்திருக்கக் கூடாது. சீன வைரஸ் நம் நாட்டை தாக்குவதற்கு முன் எனது நிர்வாகம் மிகப்பெரிய பொருளாதாரத்தை உருவாக்கி இருந்தது.

அதை நாம் மீண்டும் உருவாக்குவோம். தேர்தலில் என்னை வெற்றி பெறச் செய்தால் சீனா மீதான நம்பகத்தன்மையை முடிவுக்கு கொண்டு வருவேன். அடுத்த 4 ஆண்டுகளில் அமெரிக்காவை உலகின் உற்பத்தி வல்லரசாக மாற்றுவேன். இவ்வாறு அவர் கூறினார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து