முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆந்திரா நோக்கி நகரும் நிவர் புயல்: வங்கக் கடலில் உருவாகும் புதிய புயல்

வியாழக்கிழமை, 26 நவம்பர் 2020      தமிழகம்
Image Unavailable

சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவில் நிலவிய நிவர் புயல் தொடர்ந்து வடமேற்குத் திசைநோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வுத் துறை தெரிவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவான நிவர் புயல் நேற்று முன் தினம் கரையைக் கடந்தது. அப்போது பலத்த சூறைக்காற்று வீசியதுடன் மிகக் கனமழையும் பெய்தது. 

புயலின் தாக்கத்தால் நேற்று காலை எட்டரை மணியுடன் முடிந்த 24 மணி நேரத்தில் மிக அதிக அளவாகத் தாம்பரத்தில் 31 சென்டிமீட்டரும், புதுச்சேரியில் 30 சென்டிமீட்டரும் மழை பதிவாகியுள்ளது. 

நேற்று காலை எட்டரை மணி நிலவரப்படி நிவர் புயல் புதுச்சேரிக்கு வடமேற்கே 85 கிலோமீட்டர் தொலைவிலும், சென்னைக்குத் தென்மேற்கே 95 கிலோமீட்டர் தொலைவிலும் நிலவியதாகக் குறிப்பிட்டுள்ளது. 

வடமேற்குத் திசையில் மணிக்கு 13 கிலோமீட்டர் வேகத்தில் நகர்ந்து வரும் புயல் அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக மாறி ஆந்திர மாநிலப் பகுதிக்குள் செல்லும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் வடதமிழகத்தில் நேற்று பரவலாக மழை பெய்யவும், ஒருசில இடங்களில் கனமழை பெய்யவும் வாய்ப்புள்ளதாக ஆய்வு மையம் குறிப்பிட்டுள்ளது. 

இதனிடையே வரும் 29-ஆம் தேதி தென்கிழக்கு வங்கக் கடலில் புதிய காற்றழுத்தத் தாழ்வு நிலை உருவாக வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதனால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து