எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் (ஐ.சி.சி.) முதலாவது தனிப்பட்ட தலைவராக இருந்த இந்தியாவை சேர்ந்த ஷசாங் மனோகரனின் பதவி காலம் முடிவடைந்ததை அடுத்து அவர் கடந்த ஜூன் மாதம் அந்த பதவியில் இருந்து விலகினார். இதைத்தொடர்ந்து இடைக்கால தலைவராக இம்ரான் கவாஜா இருந்து வந்தார்.
ஐ.சி.சி. புதிய தலைவர் தேர்தல் குறித்து பலமுறை ஆலோசனை நடத்தப்பட்டாலும் ஒருமித்த முடிவு எடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்டது. இந்த நிலையில் புதிய தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்ய கடந்த அக்டோபர் 18-ந் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டது. சிங்கப்பூர் கிரிக்கெட் சங்க தலைவரும், இடைக்கால தலைவராக இருந்த இம்ரான் கவாஜா, நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனர் கிரேக் பார்கிளே ஆகியோர் தலைவர் பதவிக்கு வேட்பு மனு தாக்கல் செய்து இருந்தனர்.
ஐ.சி.சி.யின் 16 உறுப்பினர்கள் (டெஸ்ட் அந்தஸ்து பெற்ற 12 நாடுகள், 3 அசோசியேட் உறுப்பு நாடுகள், தனிப்பட்ட ஒரு பெண் இயக்குனர்) வாக்களிக்க உரிமை படைத்தவர்கள். அதில் மூன்றில் இரண்டு பங்கு வாக்குகளை பெறுபவர் தான் புதிய தலைவராக தேர்வாக முடியும். மின்னணு முறையில் வாக்குப்பதிவு நடைபெற்றது. முதல் சுற்றில் கிரேக் பார்கிளே 10 வாக்குகளும், இம்ரான் கவாஜா 6 வாக்குகளும் பெற்றனர்.
தனிப்பெரும் மெஜாரிட்டி கிடைக்காததால் நடத்தப்பட்ட 2-வது சுற்று வாக்கெடுப்பில் கிரேக் பார்கிளே 11 வாக்குகளையும், இம்ரான் கவாஜா 5 வாக்குகளையும் தன்வசப்படுத்தினார்கள்.
இதையடுத்து ஐ.சி.சி.யின் புதிய தலைவராக நியூசிலாந்தை சேர்ந்த வக்கீலான கிரேக் பார்கிளே தேர்வானார். அவர் 2012-ம் ஆண்டு முதல் நியூசிலாந்து கிரிக்கெட் வாரியத்தின் இயக்குனராக உள்ளார். கிரேக் பார்கிளேவுக்கு இந்தியா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகிய நாடுகள் ஆதரவாக இருந்தன. 2-வது சுற்றில் தென்ஆப்பிரிக்கா அளித்த வாக்கு அவரது வெற்றியை உறுதி செய்தது. இம்ரான் கவாஜாவுக்கு பாகிஸ்தான் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு கரம் நீட்டின.
புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு கிரேக் பார்கிளே கூறியதாவது:-
ஐ.சி.சி.யின் தலைவராக தேர்வு செய்யப்பட்டதை கவுரவமாக கருதுகிறேன். எனக்கு ஆதரவு அளித்த சக டைரக்டர்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இந்த நெருக்கடியான கொரோனா காலத்தில் நாம் எல்லோரும் ஒன்றிணைந்து வலுவான வளர்ச்சியை நோக்கி கிரிக்கெட் ஆட்டத்தை கொண்டு செல்ல முடியும் என்று நம்புகிறேன். எனது பதவியை ஒரு பாதுகாவலராக கருதி 104 ஐ.சி.சி. உறுப்பு நாடுகளின் சார்பில் ஆட்டத்துக்கு நிலையான எதிர்காலத்தை ஏற்படுத்த கடினமாக உழைப்பேன்.
2020-ம் ஆண்டில் ஆஸ்திரேலியாவில் நடக்க இருந்த ஆண்கள் 20 ஓவர் உலக கோப்பை மற்றும் 2021-ம் ஆண்டில் நியூசிலாந்தில் நடக்க இருந்த பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி ஆகியவை 2022-ம் ஆண்டுக்கு தள்ளிவைக்கப்பட்டுள்ளது. இதேபோல் 2023-ம் ஆண்டில் இந்தியாவில் நடைபெற வேண்டிய ஒருநாள் உலக கோப்பை போட்டி சில மாதங்கள் பின்னுக்கு தள்ளப்பட்டு இருக்கிறது. இந்த போட்டிகளை எல்லாம் டெலிவிஷன் ஒளிபரப்பு நிறுவனத்துடன் செய்து கொண்ட ஒப்பந்த காலத்துக்குள் நடத்தப்பட வேண்டும். இதற்காக முயற்சிகள் மேற்கொள்ளப்படும். இல்லையெனில் ஒளிபரப்பு நிறுவனங்கள் நமக்கு அபராதம் விதிக்கக்கூடும். இதன் மூலம் வருவாய் இழப்பை சந்திக்க நேரிடும். இந்த போட்டிகள் மூலம் கிடைக்கும் வருவாயை தான் உறுப்பு நாடுகளின் திட்டங்களுக்கு பகிர்ந்து அளிக்க வேண்டும். அதனை தான் பல நாடுகள் அதிகம் நம்பி இருக்கின்றன.
உலக போட்டிகளை விட இரு நாடுகளுக்கு இடையிலான போட்டி தொடருக்கு தான் நான் ஆதரவானவன் என்று கூறுவது தவறானதாகும். இருநாடுகள் இடையிலான போட்டி தொடர் என்பது எல்லா நாட்டு கிரிக்கெட்டுக்கும் உயிரோட்டம் போன்றதாகும். தொடர்ந்து நடைபெறும் இரு நாடுகள் இடையிலான போட்டி தொடர் கிரிக்கெட் வளர்ச்சியில் முக்கிய பங்காற்றுவதாகும். அதற்காக உலக போட்டிகள் முக்கியத்துவம் வாய்ந்தது இல்லை என்று அர்த்தம் கிடையாது. உலக கோப்பை போட்டிகள் அனைத்தும் அருமையானது. அதில் எந்தவித சந்தேகமும் கிடையாது. இரு நாட்டு தொடர்களும், உலக போட்டியும் ஒன்றுடன் ஒன்று இணைந்து செயல்பட வேண்டியது அவசியமானதாகும். ஒன்று, மற்றொன்றை தனிமைப்படுத்தக்கூடாது. அதிக அளவில் போட்டிகள் நடந்தால் அது வீரர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். ஆண்டு முழுவதும் வீரர்களால் சிறப்பாக செயல்பட முடியாது. வீரர்களின் நலனுக்கும், பாதுகாப்புக்கும் முன்னுரிமை அளிக்க வேண்டும். மூன்று பெரிய நாடுகளுக்கு (இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து) கூடுதல் முக்கியத்துவம் அளிக்கும் திட்டத்தில் எனக்கு நம்பிக்கை கிடையாது. எல்லா உறுப்பினர்களும் முக்கியமானவர்கள். எல்லோரையும் சமமாக நடத்த வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 month 2 weeks ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 month 2 weeks ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 1 month 2 weeks ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 4 months 1 week ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 8 months 4 hours ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 3 weeks ago |
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு சிக்கன் ப்ரை3 days 6 hours ago |
ஆனியன்ப்ரை6 days 5 hours ago |
உருளைக்கிழங்கு பிரெட்1 week 3 days ago |
-
மகளிர் இலவச பேருந்து பயணத்தால் தெலங்கானாவில் மெட்ரோ ரெயில் சேவை கடும் பாதிப்பு
13 May 2024ஐதராபாத், தெலங்கானாவில் மகளிர் இலவச பேருந்து பயணத் திட்டத்தால் மெட்ரோ ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளதாக எல் & டி நிறுவன இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
விரைவில் திருமணம் செய்து கொள்வேன்: பிரச்சாரத்தில் ராகுல்காந்தி கலகல பேச்சு
13 May 2024ரேபரேலி, உத்தர பிரதேசத்தில் நடைபெற்ற தேர்தல் பிரச்சாரத்தின் போது, விரைவில் திருமணம் செய்வேன் என ராகுல் பேசியது அங்கு கலகலப்பான சூழலை ஏற்படுத்தியது.
-
இ.பி.எஸ். தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது எப்படி? தலைமை தேர்தல் ஆணையம் விளக்கம்
13 May 2024புதுடெல்லி, பாராளுமன்ற தேர்தலில் இபிஎஸ் தரப்பினருக்கு இரட்டை இலை சின்னம் ஒதுக்கியது தொடர்பாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலமாக கேட்கப்பட்ட கேள்விக்கு தேர்தல் ஆணையம
-
இடைக்கால ஜாமின் கோரிய ஹேமந்த் சோரன்: அமலாக்கத்துறைக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவு
13 May 2024புதுடெல்லி, ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வரும், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைவருமான ஹேமந்த் சோரன், தற்போது நடைபெற்று வரும் பாராளுமன்றத் தேர்தலில் பிரச்சாரம் செய்ய வாய்ப
-
4-ம் கட்ட பார்லி. தேர்தல்: 62.84 சதவீத வாக்குப்பதிவு
13 May 2024புதுடெல்லி : 4-ம் கட்ட பாராளுமன்ற தேர்தலில் 62.84 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
-
சென்னையில் 50-வது வெற்றி: ரசிகர்களுடன் கொண்டாட்டம்
13 May 2024சென்னை : சென்னையில் 50-வது வெற்றியை ரசிகர்களுடன் கொண்டாடியது சி.எஸ்.கே. வீரர்கள்.
சென்னை வெற்றி...
-
டெல்லியை வீழ்த்தியது பெங்களூரு
13 May 2024பெங்களூரு : டெல்லி அணிக்கு எதிராக பவுலிங்கில் மிரட்டிய பெங்களூரு அணி 47 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிப்பெற்று பிளேஆப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது.
-
பெண்ணை கடத்திய வழக்கு: ரேவண்ணாவுக்கு ஜாமின் வழங்கியது பெங்களூரு கோர்ட்
13 May 2024பெங்களூரு, பெண்ணை கடத்திய வழக்கில் கர்நாடக எம்.எல்.ஏ ரேவண்ணாவுக்கு பெங்களூரு நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது.
-
அடுத்த சுற்றில் போபண்ணா ஜோடி
13 May 2024களிமண் தரை போட்டியான இத்தாலி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் ரோமில் நடந்து வருகிறது.
-
வெறுப்புணர்வை தூண்டியதாக புகார்: பிரதமர் மோடிக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்தது டெல்லி ஐகோர்ட்
13 May 2024புதுடெல்லி, தேர்தல் பிரசாரத்தின் போது மத வெறு்புணர்வை தூண்டும் வகையில் பேசியதாக பிரதமர் மோடி மீது வழக்கு பதிவு செய்யக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய
-
பிளே ஆப் சுற்று வாய்ப்பில் நீடிக்குமா டெல்லி அணி? - லக்னோவை இன்று எதிர்கொள்கிறது
13 May 2024புதுடெல்லி : 'பிளே ஆப்' சுற்று வாய்ப்பில் டெல்லி அணி நீடிக்குமா? என்ற நிலையில் இன்று லக்னோ அணியை எதிர்கொள்கிறது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 14-05-2024.
14 May 2024 -
நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி
14 May 2024புதுடெல்லி : நடிகர் கவுண்டமணிக்கு எதிரான கட்டுமான நிறுவனத்தின் மனு சுப்ரீம் கோர்ட்டில் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது..
-
பிளஸ்-1 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியீடு: தமிழ்நாட்டில் தேர்ச்சி விகிதம் 91.17 சதவீதம் : கோவை மாவட்டம் முதலிடம்
14 May 2024சென்னை : தமிழகத்தில் பிளஸ் -1 தேர்வு முடிவுகள் வெளியாகின. அதில் தமிழகத்தில் 91.17 சதவீதம் பேர் தேர்ச்சி அடைந்தனர்.
-
வேலூர் வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு மற்றொரு டாக்டர் பட்டம்
14 May 2024வேலூர் : வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழக நிறுவனர் மற்றும் வேந்தர் டாக்டர் கோ.விசுவநாதனுக்கு அமெரிக்க நாட்டில் உள்ள நியூயார்க் மாநில பல்கலைக்கழகம் (பிங்ஹாம்டன் பல்கலைக்கழகம்)
-
தயாநிதி தொடர்ந்த அவதூறு வழக்கில் எடப்பாடி ஆஜர் : விசாரணை ஜூன் 27-ம் தேதிக்கு ஒத்திவைப்பு
14 May 2024சென்னை : தயாநிதி மாறன் தொடர்ந்து அவதூறு வழக்கில் சென்னை எழும்பூர் கோர்ட்டில் அ.தி.மு.க. பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று நேரில் ஆஜரானார்.
-
மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமல்
14 May 2024சென்னை : சென்னையில் மாநகர பேருந்து, புறநகர் ரெயில், மெட்ரோ ரெயில் என்று அனைத்திலும் பயணம் செய்ய ஒரே டிக்கெட் முறை ஜூன் மாதம் அமலுக்கு வரவுள்ளது.
-
அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
14 May 2024சென்னை : அரசு பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார்.
-
நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம்
14 May 2024சென்னை : நாகை எம்.பி. செல்வராஜின் உடல் அரசு மரியாதையுடன் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டது.
-
அரசு மருத்துவமனையில் செலுத்தும் மஞ்சள் காய்ச்சலுக்கான தடுப்பூசி சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும்: அமைச்சர் மா.சுப்ரமணியன்
14 May 2024சென்னை : மஞ்சள் காய்ச்சலுக்கு அரசு மருத்துவமனையில் செலுத்தும் தடுப்பூசிக்கான சான்றுதான் விமான நிலையத்தில் ஏற்கப்படும் என்று அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.&nb
-
ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம்: இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை
14 May 2024வாஷிங்டன் : ஈரானுடன் சபஹர் துறைமுக ஒப்பந்தம் மேற்கொண்டுள்ள இந்தியாவுக்கு அமெரிக்கா மறைமுக எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
தனிச்செயலரின் தந்தை மறைவு: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் ஆறுதல்
14 May 2024நாமக்கல் : தமிழக முதல்வரின் தனிச்செயலாளர் தந்தை உடல் நல குறைவால் உயிரிழந்தார்.
-
சுவாதி மாலிவால் விவகாரம்: டெல்லி மாநகராட்சி கூட்டத்தில் பா.ஜ.க. கவுன்சிலர்கள் ஆர்ப்பாட்டம்
14 May 2024புதுடெல்லி : டெல்லி மாநகராட்சி கூட்டம் நேற்று நடந்தது. அப்போது ஆம் ஆத்மி எம்.பி.
-
சிவப்பு நிற உதட்டுச்சாயம் பூசும் பெண்களுக்கு அபராதம்: அதிபர் கிம்
14 May 2024பியாங்கியாங் : தங்கள் நாட்டு பெண்கள் சிவப்பு நிற உதட்டு சாயத்தை பூசிக்கொள்ள கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ள வடகொரிய அரசு இந்த தடையை மீறினால் கடும் நடவடிக்கை எ
-
பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கு: கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார்? - என்.ஐ.ஏ. தீவிர விசாரணை
14 May 2024சென்னை : பெங்களூரு குண்டு வெடிப்பு வழக்கில் கைதான 2 பேருக்கு சென்னையில் அடைக்கலம் கொடுத்தவர்கள் யார் என்று என்.ஐ.ஏ. அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.