Idhayam Matrimony

ஒடிசா மாநிலத்தில் 14 நாள் ஊரடங்கு அமலுக்கு வந்தது

புதன்கிழமை, 5 மே 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புதுடெல்லி : கொரோனா பெருந்தொற்று பரவல் அதிகரிப்பால் ஒடிசாவில் அறிவிக்கப்பட்ட 14 நாள் ஊரடங்கு நேற்று முதல் அமலுக்கு வந்தது. 

ஒடிசா மாநிலத்தில்  கொரோனா பெருந்தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த அம்மாநிலத்தில் 2-வாரங்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்பட இருப்பதாக அண்மையில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் தெரிவித்தார்.  

இதன்படி, நேற்று முதல் ஊரடங்கு அமலுக்கு வந்தது. இந்த ஊரடங்கானது வரும் 19-ம் தேதி வரை அமலில் இருக்கும்.  கடும் கட்டுப்பாடுகளுடன் வார நாட்களில் போக்குவரத்து சிலவற்றுக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது.  ஆனால், சனி, ஞாயிற்றுக் கிழமைகளில் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மளிகைக் கடைகள், இறைச்சிக் கடைகள் மட்டும் திறக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 week ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 1 month ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 1 month ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 3 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 3 months ago
View all comments

வாசகர் கருத்து