முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கார் பருவ சாகுபடிக்காக பாபநாசம் உள்பட 3 அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு

செவ்வாய்க்கிழமை, 1 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

நெல்லை : நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் கார் பருவ சாகுபடிக்காக ஜூன் மாதம் 1-ந்தேதி அணைகளில் இருந்து தண்ணீர் திறக்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்து இருந்தனர். பல்வேறு அரசியல் கட்சிகள் சார்பாகவும் கலெக்டரிடம் மனு கொடுத்திருந்தனர்.

இதைத்தொடர்ந்து கார் சாகுபடிக்காக ஜூன் 1-ந்தேதியான நேற்று நெல்லை மாவட்டத்தில் உள்ள பாபநாசம், மணிமுத்தாறு, வடக்கு பச்சையாறு ஆகிய 3 அணைகளையும் திறக்க அரசு உத்தரவிட்டது. நேற்று காலை பாபநாசம் காரையாறு பகுதியில் உள்ள அணையை கார் சாகுபடிக்காக சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் கலெக்டர் விஷ்ணு, ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., முன்னாள் சபாநாயகர் ஆவுடையப்பன் மற்றும் பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள், அதிகாரிகள் கலந்து கொண்டனர். பாபநாசம் அணையில் இருந்து நேற்று முதல் வருகிற 15.10.2021-ந்தேதி வரை 137 நாட்களுக்கு இந்த தண்ணீர் திறக்கப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து