முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு: அ.தி.மு.க. கொறடாவாக எஸ்.பி.வேலுமணி தேர்வு

திங்கட்கிழமை, 14 ஜூன் 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி துணை தலைவராக ஓ.பன்னீர் செல்வமும், அ.தி.மு.க. கொறடாவாக எஸ்.பி.வேலுமணியும் அக்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டனர். 

கடந்த சில வாரங்களுக்கு முன்பு அ.தி.மு.க. தலைமை கழகத்தில் நடந்த எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில்  எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார். அதேநேரத்தில் எதிர்க்கட்சி துணைத்தலைவர், கொறடா ஆகிய பதவிகளுக்கு யாரும் தேர்வு செய்யப்படாமல் அந்த கூட்டம் முடிவடைந்தது.

இந்த கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் தனித்தனியே அறிக்கைகளை வெளியிட தொடங்கினர்.   

இந்த நிலையில் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. அதன்படி அ.தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் கூட்டம் நேற்று நண்பகல் 12 மணிக்கு கட்சித் தலைமையகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் சட்டசபையின் எதிர்க்கட்சி துணைத் தலைவர் மற்றும் கட்சியின் கொறடா உள்ளிட்டோர் தேர்வு செய்யப்பட்டனர்.

 

சட்டசபை எதிர்க்கட்சியின் துணைத்தலைவராக கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டார். எஸ்.பி.வேலுமணி கொறடாவாகத் தேர்வு செய்யப்பட்டார்.  மேலும் துணை கொறடாவாக அரக்கோணம் எம்.எல்.ஏ. ரவியும்,  பொருளாளராக கடம்பூர் சி.ராஜூவும், செயலாளராக கே.பி. அன்பழகனும், துணைச் செயலாளராக பி.எச். மனோஜ் பாண்டியனும்  தேர்வு செய்யப்பட்டனர்.  

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து