முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

68 நாட்களில் 38-வது முறையாக பெட்ரோல் விலை உயர்வு

சனிக்கிழமை, 10 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

புது டெல்லி: சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை, டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலையை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன.  கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டதை அடுத்து, ஒரு சில மாதங்கள் வரை பெட்ரோல், டீசல் விலை எவ்வித மாற்றமும் இன்றி விற்பனை செய்யப்பட்டு வந்தது. அதன் பின், கடந்த ஜனவரி மாதம் முதல் மீண்டும் எண்ணெய் நிறுவனங்கள் படிப்படியாக விலையை உயர்த்தி வருகின்றன. மே 4-ம் தேதியிலிருந்து கடந்த 68 நாட்களில் 38-வது முறையாக நேற்று பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டு உள்ளது. குறிப்பாக, கடந்த ஒரு மாதத்தில் மட்டும் 7 முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது.

சென்னையில் நேற்று முன்தினம் பெட்ரோல், லிட்டர் 101.37 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 94.15 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், நேற்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் அதிகரித்து ரூ 101.67 ஆகவும், டீசல் லிட்டருக்கு 24 காசுகள் அதிகரித்து ரூ 94.39 ஆகவும் இருந்தது. டெல்லியில்  பெட்ரோல், லிட்டர் 100.91 ரூபாய், டீசல் லிட்டர் 89.88 ரூபாய்க்கும்; மும்பையில் பெட்ரோல், லிட்டர் 106.93 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 97.46 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து