முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஆடி முதல் வெள்ளி: அம்மன் கோவில்களில் திரண்ட பக்தர்கள்

வெள்ளிக்கிழமை, 23 ஜூலை 2021      தமிழகம்
Image Unavailable

Source: provided

மதுரை: ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உட்பட தமிழகத்தில் உள்ள அம்மன் கோவில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி காணப்பட்டது.

சிறப்புமிக்க ஆடி மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையான (ஜூலை 23) நேற்று தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோயில்களிலும் அதிகாலையே நடை திறக்கப்பட்டு இரவு வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. அந்த வகையில் உலக புகழ்பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ஆடி மாதம் முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு ஆயிரக்கணக்கில் பக்தர்கள் அதிகாலை முதல் சுவாமி தரிசனத்திற்காக வருகை தந்திருந்தனர்.  நீண்ட வரிசையில் காத்திருந்து மதுரை மீனாட்சி அம்மனை பக்தர்கள் தரிசனம் செய்து சென்றனர்.

தரிசனத்திற்காக தடுப்புகள் அமைக்கப்பட்டு சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. கொரோனா கட்டுப்பாடுகளால் சமூக இடைவெளியுடனும், முகக் கவசம் அணிந்து பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல் தமிழகத்தில் உள்ள அனைத்து அம்மன் கோவில்களிலும் நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் தரிசனம் செய்தனர். ஆடி முதல் வெள்ளி என்பதால் அனைத்து அம்மன் கோவில்களிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து