முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

காஷ்மீரில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரி வீடு உட்பட 22 இடங்களில் சி.பி.ஐ. சோதனை

சனிக்கிழமை, 24 ஜூலை 2021      இந்தியா
Image Unavailable

Source: provided

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் மூத்த ஐஏஎஸ் அதிகாரியின் இல்லம் உள்பட 22 இடங்களில் சி.பி.ஐ. சோதனை நடத்தியது. 

ஜம்மு காஷ்மீரில் நேற்று  காலை முதல் 22 இடங்களில் சி.பி.ஐ. அதிரடி சோதனை மேற்கொண்டது.  சோதனை நடைபெற்ற இடங்களில் மூத்த ஐ.ஏ.எஸ். அதிகாரியின் இல்லமும் அடங்கும். சட்ட விரோதமாக துப்பாக்கி உரிமங்களை விற்றதாக எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது இல்லத்திலும் சி.பி.ஐ. சோதனை நடத்தியதாக செய்திகள் வெளியாகியுள்ளன. 

ஐ.ஏ.ஏஸ். அதிகாரியான ஷாகித் இக்பால் சவுத்ரி, பழங்குடியின விவகாரங்களுக்கான துறையின் செயலாளராக பணிபுரிந்து வருகிறார்.  முன்னதாக, கதுவா, ரேசாய், ராஜோரி மற்றும் உதாம்பூர் மாவட்டங்களில் துணை ஆணையராக பணியாற்றினார். அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான துப்பாக்கி உரிமங்களை போலி பெயர்களில் வழங்கியதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து