முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

திங்கட்கிழமை, 29 நவம்பர் 2021      தமிழகம்
Image Unavailable

இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். மேலும், தமிழகத்தில் இதுவரை செலுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி டோஸ்களின் எண்ணிக்கை 7 கோடியை தாண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

கனமழைக்கு மத்தியில் நடைபெற்ற 12-வது மெகா முகாம் மூலம்16லட்சத்து 5ஆயிரத்து 293 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார். இனி வாரந்தோறும் சனிக்கிழமையன்று மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்படும் என கூறிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், வீடுதேடி சென்று தடுப்பூசி செலுத்தும் பணியும் நடைபெற உள்ளதாக தெரிவித்தார்.  தமிழகத்தில் இதுவரை ஒமைக்ரான் வகை கொரோனா தொற்று கண்டறியப்படவில்லை என தெளிவுபடுத்திய அமைச்சர், மழைக்காலம் என்பதால் காய்ச்சி வடிகட்டிய நீரை அனைவரும் பருக வேண்டும் என அறிவுறுத்தினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து