முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

முழு ஊரடங்கு அமல் எதிரொலி: தமிழகம் முழுவதும் இன்று டாஸ்மாக் கடைகள் அடைப்பு

சனிக்கிழமை, 22 ஜனவரி 2022      தமிழகம்
Image Unavailable

Source: provided

சென்னை : முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், தமிழகத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) அனைத்து டாஸ்மாக் கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜனவரி மாதத்தில் கடந்த 9-ஆம் தேதியில் இருந்து ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த 9 மற்றும் 16 ஆகிய தேதிகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மூன்றாவது வாரமாக இன்று ஞாயிற்றுக்கிழமையும் (ஜன. 23) முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட உள்ளது. கொரோனா நோய்த் தொற்றை கட்டுப்படுத்த வரும் 30-ம் தேதி வரை இரவு நேர ஊரடங்குடன் சில கட்டுப்பாடுகள் நடைமுறையில் இருக்கும் என தமிழக அரசு ஏற்கெனவே அறிவித்துள்ளது. 

இந்த நிலையில், முழு ஊரடங்கை முன்னிட்டு, தமிழகத்தில் இன்று டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்ரமணியன் அறிவித்துள்ளார். அவர் வெளியிட்டிருக்கும் அறிவிப்பில், தமிழகத்தில் இன்று முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டிருப்பதால், டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் மதுபான பார்கள் மூடப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து