முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்

செவ்வாய்க்கிழமை, 24 மே 2022      தமிழகம்
Tamil-Nadu-Assembly-2022-01-22

Source: provided

சென்னை : துணிவு மற்றும் வீர சாகச செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருதுக்கு வரும் 30-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. 

இது குறித்து அரசின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, 

துணிவு மற்றும் வீர சாகசச் செயல்களுக்கான கல்பனா சாவ்லா விருது ஒவ்வொரு ஆண்டும் தமிழக முதல்வரால் சுதந்திரதின விழாவின்போது வழங்கப்படுகிறது. இந்த விருதில், ரூ.5.00 லட்சத்திற்கான வரைவு காசோலை,  சான்றிதழ் மற்றும் பதக்கம் அடங்கும்.  தமிழகத்தை சேர்ந்த,  துணிச்சலான மற்றும் வீர சாகசச் செயல் புரிந்த  பெண் விண்ணப்பதாரர் மட்டுமே  இவ்விருதினைப்  பெறத்  தகுதியுள்ளவர்.

2022-ஆம் ஆண்டு வழங்கப்படவுள்ள விருதிற்கான விண்ணப்பங்கள், விரிவான தன்விவரக் குறிப்பு, உரிய விவரங்கள் மற்றும் அதற்குரிய ஆவணங்களுடன், அரசு செயலாளர், பொதுத்துறை, தலைமைச் செயலகம், சென்னை-600009 என்ற முகவரிக்கோ அல்லது https://awards.tn.gov.in/  என்ற இணைய தளம் மூலமாக வரும் 30.06.2022-க்கு முன்பாக அனுப்பி வைக்கப்பட வேண்டும்.

உரிய காலத்திற்குள் பெறப்படாத விண்ணப்பங்கள் கண்டிப்பாக நிராகரிக்கப்படும்.  விருதுபெறத் தகுதியுள்ளவர்,  இதற்கென அரசால் நியமிக்கப்பட்ட  தேர்வுக் குழுவால்  தெரிவு செய்யப்படுவர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

 

 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து