முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தொண்டர்களால் நொறுக்கப்பட்ட அதிருப்தி எம்.எல்.ஏ. அலுவலகம் : மகாராஷ்டிராவில் தொடரும் பதற்றம்

சனிக்கிழமை, 25 ஜூன் 2022      இந்தியா
Maharashtra 2022-06-25

Source: provided

மும்பை : மகாராஷ்டிராவில் அதிருப்தி எம்.எல்.ஏ.வின் அலுவலகம் சிவசேனா தொண்டர்களால் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.  இதனால் அங்கு பதற்றம் நீடிக்கிறது.

மகாராஷ்டிராவில் சிவசேனா-காங்கிரஸ்-தேசியவாத காங்கிரஸ் கட்சிகளின் கூட்டணியில் மகாவிகாஸ் அகாடி என்ற கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டணி ஆட்சியில் சிவசேனா தலைவர் மராட்டிய முதல்-மந்திரியாக உத்தவ் தாக்கரே செயல்பட்டு வருகிறார். இதனிடையே, சிவசேனா கட்சியை மூத்த மந்திரி ஏக்நாத் ஷிண்டே மராட்டிய மகாவிகாஸ் அகாடி அரசுக்கு எதிராக திரும்பியுள்ளார். 

அவர் தனது ஆதரவாளர்களான 50 எம்.எல்.ஏ.க்களுடன் அசாம் மாநிலம் கவுகாத்தியில் உள்ள ஓரு ஓட்டலில் தங்கியுள்ளார். இதில், 40 எம்.எல்.ஏ.க்கள் சிவசேனாவை சேர்ந்தவர்கள் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே தலைமையிலான மகாவிகாஸ் அகாடி அரசு கவிழும் சூழ்நிலை உருவாகியுள்ளது. 

இந்நிலையில், உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக திரும்பியுள்ள எம்.எல்.ஏ.க்களை கண்டித்து சிவசேனா கட்சி தொண்டர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையி்ல் பாடண்டா தொகுதி சிவசேனா எம்.எல்.ஏ. தனஜி சாவந்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் நேற்று அடித்து நொறுக்கினர்.

சாவந்த் அசாம் தலைநகர் கவுகாத்தில் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் உள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுடன் உள்ளார். பாலாஜி நகரில் உள்ள சாவத்தின் கட்சி அலுவலகத்தை சிவசேனா தொண்டர்கள் நேற்று அடித்து நொறுக்கினர். அதேபோன்று பல பகுதிகளும் அதிருப்தி எம்.எல்.ஏ.க்களுக்கு எதிராக கோஷங்களும் போராட்டங்களும் சிவசேனா தொண்டர்களால் நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து