முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சவுதியில் கனமழைக்கு இரண்டு பேர் உயிரிழப்பு

வெள்ளிக்கிழமை, 25 நவம்பர் 2022      உலகம்
Saudi-rain 2022 11 25

சவுதியில் பெய்த கனமழைக்கு 2 பேர் உயிரிழந்தனர். 

மேற்கு சவுதி அரேபியாவின் கடலோர நகரமான ஜித்தா மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் பலத்த மழை பெய்தது. மழை காரணமாக இரண்டு பேர் உயிரிழந்தனர். மேலும், மழையால் விமானங்கள் தாமதமானது. பள்ளிகளையும் மூட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  

அவசியமின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று அரசாங்கம் தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. யாத்ரீகர்கள் மெக்காவை அடைவதற்கு பயன்படுத்தும் சாலை, மழை தொடங்கியவுடன் மூடப்பட்டது. ஜெட்டாவில் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஆண்டும் குளிர்கால மழை மற்றும் வெள்ளம் ஏற்படுகிறது. 2009-ம் ஆண்டு வெள்ளத்தில் 123 பேரும், இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு 10 பேரும் பலியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து