முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை

திங்கட்கிழமை, 5 டிசம்பர் 2022      தமிழகம்
OPS 2022 12 05

Source: provided

சென்னை : முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினாவில் உள்ள அவரது நினைவிடத்தில் ஓ.பன்னீர்செல்வம் மரியாதை செலுத்தினார். 

முன்னாள் முதல்வர்  ஜெயலலிதாவின் 6-வது ஆண்டு நினைவு தினத்தையொட்டி சென்னை மெரினா கடற்கரையில் எம்.ஜி.ஆர். நினைவிடம் அருகில் அமைந்துள்ள ஜெயலலிதா நினைவிடம் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் நேற்று காலை 10.30 மணியளவில் ஓ.பன்னீர் செல்வம் தனது ஆதரவாளர்களுடன் பேரணியாக வந்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். 

அதைத் தொடர்ந்து ஜெயலலிதா நினைவிடத்தில் அருங்காட்சியகம் அருகில் அமைக்கப்பட்டிருந்த மேடையில் நின்றபடி ஓ. பன்னீர் செல்வம் உறுதி மொழி எடுத்துக் கொண்டார். இதில் வைத்தியலிங்கம், மனோஜ்பாண்டியன், ஜே.சி.டி.பிரபாகர், மாவட்ட தலைவர்கள் சைதை எம்.எம்.பாபு, ரெட்சன் அம்பிகாபதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து