முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள 8 லட்சம் பேர் ராணுவத்தில் சேர தயார் : வடகொரியா தகவல்

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2023      உலகம்
KIM 2023 03 15

Source: provided

பியாங்கியாங் : அமெரிக்காவை போரில் எதிர்கொள்ள மாணவர்கள், தொழிலாளர்கள் என 8 லட்சம் பேர் ராணுவத்தில் இணைய ஆர்வமுடன் உள்ளனர் என்று வடகொரியா தெரிவித்துள்ளது. 

அமெரிக்கா மற்றும் ஐ.நா. அமைப்பு உள்ளிட்டவற்றின் எதிர்ப்புகளையும் மீறி வடகொரியா அவ்வப்போது ஏவுகணை பரிசோதனைகளை நடத்தி வருகிறது. இந்த நிலையில், 5 ஆண்டுகளில் இல்லாத வகையில் அமெரிக்கா மற்றும் தென்கொரியா என இரு நாடுகளும் மிக பெரிய அளவில், கூட்டு ராணுவ பயிற்சியை தொடங்கி உள்ளது. இந்த பயிற்சியானது வரும் 23-ம் தேதி வரை நடைபெற உள்ளது. 

அமெரிக்கா மற்றும் தென்கொரியா இடையேயான கூட்டு ராணுவ பயிற்சியை தொடர்ந்து, அதனை படையெடுப்புக்கான ஒத்திகை என்று வடகொரியா கூறியுள்ளது. இதனை தொடர்ந்தே அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்த ஏவுகணை பரிசோதனையை வடகொரியா நடத்தி உள்ளது என பார்க்கப்படுகிறது. 

இந்நிலையில், அமெரிக்காவுக்கு எதிரான போரில் ஈடுபட, 8 லட்சம் மக்கள் வடகொரிய ராணுவத்தில் இணைவதற்கு ஆர்வமுடன் இருக்கின்றனர். அவர்களில் பலர் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களாக உள்ளனர் என வடகொரியாவின் ரோடங் சின்முன் என்ற செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து