முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொன்முடி பதவியேற்பு விவகாரம்: கவர்னருக்கு எதிராக தமிழக அரசு சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு

திங்கட்கிழமை, 18 மார்ச் 2024      இந்தியா
Ponmudi 2023 04 05

Source: provided

புதுடெல்லி : பொன்முடிக்கு அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு அவசர வழக்காக இன்று விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

தமிழக முதல்வருக்கு கவர்னர் எழுதிய கடிதத்தில், பொன்முடிக்கான தண்டனைதான் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் விடுவிக்கப்படவில்லை என்பதால் அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது.

இந்தநிலையில் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க மறுப்பு தெரிவிப்பதாக கவர்னர் ஆர்.என். ரவிக்கு எதிராக சுப்ரீம்  கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது. 

அந்த மனுவில், தமிழக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுக்கு இணையாக ஆட்சி நடத்த கவர்னர் ஆர்.என். ரவி முயற்சிக்கிறார். அரசியல் சாசனத்தில் 164 (1) பிரிவை கவர்னர் அப்பட்டமாக மீறுகிறார்.

முதல்வர் பரிந்துரைந்த பின்பும் பொன்முடிக்கு அமைச்சராக பதவிப் பிரமாணம் செய்து வைக்க கவர்னர் மறுத்து வருகிறார். கவர்னரின் இந்த நடவடிக்கை தவறானது. சட்டத்துக்கு புறம்பானது. 

சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி பொன்முடிக்கு எம்எல்ஏ பதவி மீண்டும் வழங்கப்பட்டுள்ளது. அவருக்கு அமைச்சரவை பதவி வழங்க அரசு பரிந்துரைத்தும் கவர்னர் அதை செயல்படுத்த மறுக்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

இதனை அவசர வழக்காக விசாரிக்கை வேண்டும் என தமிழக அரசு சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. தமிழக அரசின் கோரிக்கையை ஏற்றுக் கொண்ட தலைமை நீதிபதி அமர்வு அவசர வழக்காக இன்று விசாரிக்க ஒப்புதல் அளித்துள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

View all comments

வாசகர் கருத்து