எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
தமிழக வெற்றிக் கழகத்தின் 2-வது மாநில மாநாடு மதுரையில் அடுத்த மாதம் 25-ம் தேதி நடைபெறுகிறது. இதற்காக மதுரை பெருங்குடி அருகே பாரைப் பத்தி பகுதியில் சுமார் 506 ஏக்கர் நிலப்பரப்பில் மாநாட்டு பந்தல் மற்றும் மேடை அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக கடந்த 16-ம் தேதி கால்கோள் விழா நடைபெற்றது. கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்சி என்.ஆனந்த் மற்றும் மாநில நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை நடத்தினர்.
இதனைத் தொடர்ந்து மாநாட்டு பந்தல் அமைப்பதற்காக ஆரம்ப கட்ட பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இதற்காக ஜே.சி.பி. உள்ளிட்ட வாகனங்கள் மூலம் மாநாட்டு பகுதிகள் சீரமைக்கப்பட்டு வருகின்றன. அனைத்து பகுதிகளும் சரி செய்யப்பட்டு பந்தல் அமைப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்கு தேவையான ராட்சத குழாய்கள், இரும்பு தடுப்புகள், ஷீட்டுகள் போன்றவை அந்த பகுதிக்கு கனரக வாகனங்களில் வந்து இறங்கிய வண்ணம் உள்ளது.
தினந்தோறும் கனரக வாகனங்களில் மாநாட்டு பந்தலுக்கு தேவையான இரும்பு கம்பிகள் மற்றும் சீட்டுகள் வருகிறது. இதனை 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பாதுகாப்புடன் ஆங்காங்கே இறக்கி வருகின்றனர். தற்போது முதல் கட்ட பணிகள் தொடங்கியுள்ள நிலையில் அடுத்த வாரம் முதல் பந்தல் அமைப்பு பணிகள் தீவிரப்படுத்தப்படும் என்று தெரியவந்துள்ளது. இதற்காக த.வெ.க. மாநில பொதுச் செயலாளர் மற்றும் தலைமைக் கழக நிர்வாகிகள் அடுத்த வாரம் முதல் மதுரையில் முகாமிட்டு மாநாட்டு பணிகளை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
இதுவரை எந்த அரசியல் கட்சியும் நடத்திடாத அளவிற்கு இந்த மாநாட்டை சிறப்பாக நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாநாட்டு மேடை நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்துடன் அமைய உள்ளது. இதற்கான அதில் தனித்துவம் மிக்க வல்லுனர்கள் நியமிக்கப்பட்டு மேடை உருவாக்குவதற்கு தேவையான வரைபடம் மற்றும் தொழில் நுட்பங்களை செய்து வருகிறார்கள்.
மேலும் அந்த பகுதியில் சுமார் 10 லட்சம் பேர் அமரும் வகையில் மாநாட்டு பந்தல் அமைக்கப்பட உள்ளது. இதற்காக இரும்பு போஸ்டுகள், ராட்சத கிரேன் மூலம் நடப்படுகிறது. மற்றும் அதற்கான வெல்டிங் பணிகளும் விரைவில் தொடங்க உள்ளது. மாநாட்டு பந்தலில் சுமார் 10 லட்சம் நாற்காலிகள் போடுவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர சிறப்பு அழைப்பாளர்கள், முக்கிய நிர்வாகிகளும் அமருவதற்கான தனியாக இருக்கை வசதியும் செய்யப்படுகிறது.
மாநாட்டில் பங்கேற்பவர்களுக்கு சுடச்சுட அறுசுவை உணவு மற்றும் குடிநீர் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்ய தேவையான அனைத்து பணிகளும் விரைவில் தொடங்கப்பட உள்ளன. உணவு தயாரிக்க சிறப்பு குழுவினர் பணியமர்த்தப்படுகிறார்கள். இதுதவிர சாப்பாடு கூடம், குடிநீர், கழிப்பிட வசதி உள்ளிட்ட அனைத்து ஏற்பாடுகளும் செய்வதற்கு தனித் தனி குழுக்கள் அமைக்கப்பட்டு அந்த குழுவினர் பணிகளை தொடங்கியுள்ளனர்.
மாநாட்டில் தமிழ்நாடு முழுவதும் இருந்து சுமார் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாகனங்கள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக வாகன நிறுத்துமிடம் பல ஏக்கர் பரப்பளவில் செம்மைப்படுத்தி தயார் செய்யப்பட்டு வருகின்றது. முக்கிய நிர்வாகிகளின் வாகனம் நிறுத்துவதற்கு மேடை அருகே இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள், பொதுமக்கள் வரும் வாகனங்களை மாநாட்டு திடல் உள்ளிட்ட 6 இடங்களில் வாகன நிறுத்துமிடம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. மதுரையில் நடைபெறும் த.வெ.க. மாநாடு தமிழக அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தவேண்டும் என்பது தான் த.வெ.க. நிர்வாகிகளின் ஒட்டுமொத்த எதிர்பார்ப்பாக உள்ளது.
மதுரையில் நடைபெறும் இந்த மாநாட்டில் மதுரையில் உள்ள ஒவ்வொரு வார்டுகளிலும் இருந்து சுமார் 5,000 பேர் மாநாட்டில் பங்கேற்க முடிவு செய்துள்ளனர். எனவே மதுரை மற்றும் சுற்று வட்டார பகுதியில் இருந்து மட்டும் சுமார் 5 லட்சம் பேர் மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான ஏற்பாடுகளை கட்சி நிர்வாகிகள் செய்துள்ளனர். எனவே தமிழகம் முழுவதும் இருந்து நிர்வாகிகளும், தொண்டர்களும் மிகுந்த எதிர்பார்ப்புடனும், உற்சாகத்துடனும் மதுரை மாநாட்டில் பங்கேற்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்து வருகிறார்கள்.
மாநாட்டில் கலந்து கொள்வதற்காக த.வெ.க. தலைவர் விஜய் ஒரு நாள் முன்னதாக ஆகஸ்ட் 24-ம் தேதியே மதுரை வர திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர் வரும் நேரம் மற்றும் தங்குமிடம் ரகசியமாக வைக்கப் பட்டுள்ளது. மாநாடு தொடங்குவதற்கு முன்னதாகவே 25-ம் தேதி அதிகாலையில் மாநாட்டு பகுதிக்கு விஜய் வந்து விடுவார். எனவே தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மாநாட் டில் கலந்து கொள்வதற்கு எந்தவிதமான போக்குவரத்து நெரிசல் மற்றும் பயண கால தாமதம் ஏற்படாது என்றும் கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.
த.வெ.க. இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் நடைபெறுவதால் அது அரசியல் ரீதியிலும், மக்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-07-2025.
23 Jul 2025 -
மதுரையில் த.வெ.க. மாநாடு: பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
23 Jul 2025மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
23 Jul 2025கோவை : ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது : தமிழக நீர்வளத்துறை தகவல்
23 Jul 2025சென்னை : தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி
23 Jul 2025கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
23 Jul 2025டப்ளின் : அயர்லாந்தில் ஆடைகளை களைத்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது.
-
வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு
23 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்தது கொரோனா தொற்று: மத்திய அரசு
23 Jul 2025புதுடெல்லி : ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
23 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை
-
28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
23 Jul 2025நியூயார்க் : ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
நடமாடும் வீடுகளுக்கு தடை
23 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
தமிழகம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Jul 2025சென்னை : திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என்றும்
-
ராசேந்திர சோழனின் பிறந்த நாள்: கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
23 Jul 2025சென்னை : ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் வ
-
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
23 Jul 2025ரோம் : இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க ஆகஸ்ட் 24 வரை தடை
23 Jul 2025புதுடெல்லி : இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
-
பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : தேர்தல் கமிஷன் நடவடிக்கை
23 Jul 2025பாட்னா : பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது
23 Jul 2025அகமதாபாத் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை
23 Jul 2025ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
லண்டன் சால்போர்ட் நகரில் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம்
23 Jul 2025லண்டன் : லண்டன் சால்போர்ட் நகரி் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி : ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு
23 Jul 2025சென்னை : புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்
-
5 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சீனர்களுக்கான சுற்றுலா விசா சேவையை துவங்கும் இந்தியா
23 Jul 2025புதுடெல்லி : சீன நாட்டவர்கள் இந்தியாவுக்கு சுற்றுலா வருவதற்கான விசா சேவையை, 5 ஆண்டுகளுக்கு பிறகு இந்தியா மீண்டும் இன்று முதல் தொடங்குகிறது.
-
எனக்கு பாதுகாப்பில்லை: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்
23 Jul 2025டெல்லி : என் வீட்டுக்குள்ளேயே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிக்கை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் வீடியோ சமுகவரையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
-
விமான விபத்து எதிரொலி: இந்திய மருத்துவர்கள் குழு வங்காளதேசம் விரைந்தது
23 Jul 2025வங்காளதேசம் : வங்காளதேசத்தில் நடந்த விமான விபத்துக்கு மருத்துவ குழுவை இந்தியா அனுப்பி உள்ளது.
-
அயர்லாந்தில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி
23 Jul 2025லண்டன் : வடக்கு அயர்லாந்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.