எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
இந்தியா-இங்கிலாந்து மகளிர் அணிகள் மோதிய 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டி செஸ்டர் லீ ஸ்ட்ரீட் மைதானத்தில் பகல்-இரவு ஆட்டமாக நடைபெற்றது. முதலில் விளையாடிய இந்திய அணி 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 318 ரன் குவித்தது. கேப்டன் ஹர்மன்பிரீத் கவூர் சதம் அடித்தார். அவரது 7-வது (149-வது போட்டி) செஞ்சூரியாகும். அவர் 84 பந்தில் 102 ரன்னும் (14 பவுண்டரி), ஜெமீமா ரோட்ரிக்ஸ் 45 பந்தில் 50 ரன்னும் (7 பவுண்டரி), ஸ்மிருதி மந் தனா, ஹர்லீன் தியோல் தலா 45 ரன்னும் எடுத்தனர்.
பின்னர் ஆடிய இங்கிலாந்து 49.5 ஓவரில் 305 ரன் எடுத்து ஆல் அவுட் ஆனது. இதனால் பரபரப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 13 ரன் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றி மூலம் 3 போட்டி கொண்ட ஒருநாள் தொடரை இந்தியா 2-1 என்ற கணக்கில் கைப்பற்றியது. முதல் ஆட்டத்தில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருந்தது. 2-வது போட்டியில் இங்கிலாந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்று இருந்தது. இங்கிலாந்தில் இந்திய அணி 2-வது முறையாக ஒருநாள் தொடரை கைப்பற்றி சாதித்தது. இதற்கு முன்பு 2022-ம் ஆண்டு 3-0 என்ற கணக்கில் ஒருநாள் தொடரை வென்று இருந்தது.
________________________________________________________________________________________________
முதல் சுற்றில் பி.வி.சிந்து வெற்றி
சீன ஓபன் பேட்மிண்டன் போட்டி சீனாவின் சாங்சோ நகரில் தொடங்கியது. இந்தத் தொடரில் இந்தியாவின் முன்னணி வீரர், வீராங்கனைகள் களம் காண்கின்றனர். இந்நிலையில், பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் பி.வி.சிந்து, ஜப்பானின் டொமோகா மியாசகி உடன் மோதினார். இதில் முதல் செட்டை 21-15 என பி.வி.சிந்து கைப்பற்றினார். இதற்கு பதிலடியாக ஆடிய ஜப்பான் வீராங்கனை 21-8 என 2வது செட்டை வென்றார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் மூன்றாவது செட்டை 21-17 என பி.வி.சிந்து வென்று இரண்டாவது சுற்றுக்கு முன்னேறினார்.
________________________________________________________________________________________________
லாய்டு, பரூக் பெயரில் ஸ்டேண்ட்
இந்தியா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 4ஆவது டெஸ்ட் மான்செஸ்டர் ஓல்டு டிராஃபோர்டில் நேற்று தொடங்கியது. டாஸ் வென்ற இங்கிலாந்து பந்து வீச்சை தேர்வு செய்தது. இந்த போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரசிகர்கள் அமர்ந்து போட்டியை பார்வையிடும் கேலரியின் ஒரு பகுதிக்கு (Stand) பரூக் இன்ஜீனியர், கிளைவ் லாய்டு எனப் பெயரிடப்பட்டிருந்தது. அதை இருவரும் திறந்து வைத்தனர். மேலும், மணி அடித்து போட்டியை தொடங்கி வைத்தனர். பரூக் இன்ஜினீயர் இந்தியாவின் முன்னாள் வீரர் ஆவார். இவர் இந்திய அணிக்கான 46 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 2 சதம், 16 அரைசதங்களுடன் 2611 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 31.08 ஆகும். 121 அதிகபட்ச ஸ்கோராகும்.
கிளைவ் லாய்டு வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் ஆவார். இவர் 110 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 19 சதம், 39 அரைசதங்களுடன் 7515 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 46.67 ஆகும். அதிகபட்சமாக ஆட்டமிழக்காமல் 242 ரன்கள் அடித்துள்ளார். 87 ஒருநாள் போட்டியில் ஒரு சதம், 11 அரைசதங்களுடன் 1977 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 39.54 ஆகும். அதிகபட்ச ஸ்கோர் 102 ஆகும். டெஸ்ட் போட்டியில் 10 விக்கெட்டும், ஒருநாள் போட்டியில் 8 விக்கெட்டும் வீழ்த்தியுள்ளார்.
________________________________________________________________________________________________
ஆஸி.க்கு 2-வது வெற்றி
மேற்கிந்தியத் தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி, 3 டெஸ்ட் மற்றும் 5 டி20 போட்டிகளில் விளையாடி வருகிறது. 3 டெஸ்ட் போட்டி தொடரை முழுமையாக வென்ற ஆஸ்திரேலிய அணி டி20 முதல் போட்டியில் வெற்றி பெற்றது. இந்த நிலையில், இவ்விரு அணிகள் மோதிய 2 வது போட்டி கிங்ஸ்டன் கிரிக்கெட் திடலில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி கேப்டன் மிட்செல் மார்ஷ், மேற்கிந்தியத் தீவுகள் அணியை பேட்டிங் செய்ய அழைத்தார். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 8 விக்கெட் இழப்புக்கு 172 ரன்கள் எடுத்தது.
ஆஸ்திரேலிய அணித் தரப்பில் ஸாம்பா 3 விக்கெட்டுகளும், நாதன் எல்லீஸ், மேக்ஸ்வெல் தலா 2 விக்கெட்டுகளும், துவார்ஷியஸ் ஒரு விக்கெட்டும் வீழ்த்தினர். பின்னர், 173 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தொடக்க ஆட்டக்காரர்கள் மேக்ஸ்வெல் 12 ரன்களில் (ஒரு பவுண்டரி - ஒரு சிக்ஸர்) ஹோல்டரிடமும், கேப்டன் மிட்செல் மார்ஷ் 21 ரன்களில் (ஒரு பவுண்டரி - 2 சிக்ஸர்) அல்ஜாரி ஜோசப்பிடமும் வீழ்ந்தனர். இறுதியில் 15.2 ஓவர்களில் 2 விக்கெட்டுகள் இழப்புக்கு ஆஸ்திரேலிய அணி, 173 ரன்கள் குவித்து அபார வெற்றி பெற்றது. இதன் மூலம், 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் ஆஸ்திரேலிய அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 1 day ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 1 week ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 23-07-2025.
23 Jul 2025 -
மதுரையில் த.வெ.க. மாநாடு: பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணி தீவிரம்
23 Jul 2025மதுரை : மதுரையில் த.வெ.க. மாநாட்டிற்கான பிரமாண்ட பந்தல் அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
சவரன் ரூ.75,000-ஐ தாண்டி தங்கம் விலை புதிய உச்சம் : கடந்த 5 நாட்களில் ரூ.2,160 உயர்வு
23 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று (புதன்கிழமை) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை ஒரு பவுன் ரூ.75,000-ஐ தாண்டி புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.
-
ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தில் காலாவதியான 278 கிலோ பேரீச்சம் பழம் பறிமுதல்
23 Jul 2025கோவை : ஆன்லைன் வர்த்தக நிறுவனத்தின் சேமிப்பு கிடங்குகளில் காலாவதியான 278 கிலோ பேரீச்சை பழம் பறிமுதல் செய்யப்பட்டது.
-
90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது : தமிழக நீர்வளத்துறை தகவல்
23 Jul 2025சென்னை : தமிழகத்தில் 90 அணைகளில் 185 டி.எம்.சி. தண்ணீர் கையிருப்பு உள்ளதாக நீர்வளத்துறை தெரிவித்துள்ளது.
-
குஜராத் மாநிலத்தில் பயங்கரவாதிகள் 4 பேர் கைது
23 Jul 2025அகமதாபாத் : அல்கொய்தா பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நான்கு பேரை குஜராத் பயங்கரவாத தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர்.
-
போரை முடிவுக்கு கொண்டுவர ரஷ்யா அதிபர் புதினுடன் பேச தயார்: ஜெலன்ஸ்கி
23 Jul 2025கீவ் : போரை முடிவுக்கு கொண்டு வர, ரஷ்ய அதிபர் புதினை நேரில் சந்தித்து பேச தயாராக இருக்கிறேன் என்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
-
ஜூன் மாதத்திற்கு பிறகு குறைந்தது கொரோனா தொற்று: மத்திய அரசு
23 Jul 2025புதுடெல்லி : ஜூன் மாதத்திற்கு பிறகு கொரோனா தொற்று குறைந்து விட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
28 கோடி இந்தியர்கள் கடனாளிகள் : பார்லி.யில் மத்திய அரசு தகவல்
23 Jul 2025புதுடெல்லி : இந்தியாவில் சுமார் 28 கோடி தனிப்பட்ட கடனாளிகள் உள்ளனர் என்று பாராளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
அயர்லாந்தில் ஆடைகளை களைந்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல்
23 Jul 2025டப்ளின் : அயர்லாந்தில் ஆடைகளை களைத்து இந்தியர் மீது இனவெறி தாக்குதல் நடைபெற்றது.
-
வங்காளதேச விமான விபத்து: உயிரிழப்பு 31 ஆக அதிகரிப்பு
23 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் இதுவரை 31 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
காலநிலை மாற்றத்தால் அதிகம் பாதிக்கப்படும் இந்திய நகரங்கள் : உலக வங்கி அதிர்ச்சி அறிக்கை
23 Jul 2025ஜெனீவா : இந்திய நகரங்கள் வெள்ளம், வெப்ப அலைகள் போன்ற காலநிலை ஆபத்துகளால் அதிக பாதிக்கப்படும் சூழலில் உள்ளன என உலக வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது.
-
முதல்வரின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை
23 Jul 2025சென்னை : முதல்வர் மு.க.ஸ்டாலின் உடல்நிலை குறித்து வதந்தி பரப்பினால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அப்போலோ மருத்துவமனை தரப்பு அறிக்கையை தவிர மற்ற தகவல்கள் உண்மை
-
தயாரிப்பு நிறுவனம் தொடர்ந்த வழக்கில் நடிகர் ரவி மோகனுக்கு ஐகோர்ட் கிடுக்கிப்பிடி : ரூ.5.9 கோடி சொத்து ஆவணம் தாக்கல் செய்ய உத்தரவு
23 Jul 2025சென்னை : புதிய படத்தில் நடிக்க வாங்கிய அட்வான்ஸ் திருப்பித்தராத விவகாரத்தில், நடிகர் ரவி மோகன், 5.90 கோடிக்கான சொத்து ஆவணங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்
-
அமெரிக்கா-ஜப்பான் இடையே மிகப்பெரிய வர்த்தக ஒப்பந்தம் : அதிபர் ட்ரம்ப் அறிவிப்பு
23 Jul 2025நியூயார்க் : ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டு உள்ளது என்று அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
-
தமிழகம் திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயரும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்
23 Jul 2025சென்னை : திமுக ஆட்சியில் இரு மடங்கு வளர்ச்சி என்று பெருமிதம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அடுத்து வர உள்ள திராவிட மாடல் 2.0-ல் முதல் மாநிலமாக உயருவோம் என்றும்
-
மீண்டும் விபத்தில் சிக்கிய அஜித்
23 Jul 2025ரோம் : இத்தாலியில் ஜிடி 4 கார் பந்தயம் நடைபெற்றது. இதில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார்.
-
நடமாடும் வீடுகளுக்கு தடை
23 Jul 2025வாஷிங்டன் : அமெரிக்காவில் நடமாடும் வீடுகளுக்கு உள்ளூர் நிர்வாகம் தடை விதித்துள்ளது.
-
ராசேந்திர சோழனின் பிறந்த நாள்: கங்கை கொண்ட சோழபுரத்தில் அருங்காட்சியகம் அமைக்கப்படும் : முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு
23 Jul 2025சென்னை : ராசேந்திர சோழனின் பிறந்த நாளில் சுற்றுலா மேம்பாட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கங்கை கொண்ட சோழபுரத்தில் சோழ பேரரசின் வ
-
லண்டன் சால்போர்ட் நகரில் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் உரசியதில் 20 பேர் படுகாயம்
23 Jul 2025லண்டன் : லண்டன் சால்போர்ட் நகரி் பஸ்சின் மேற்பகுதி பாலத்தில் மோதியதில் 20 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
ராகுல்காந்தி தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் 2-வது நாளாக போராட்டம்
23 Jul 2025புதுடெல்லி : பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளுக்கு எதிராக பாராளுமன்றத்தில் எதிர்க்கட்சி எம்பிக்கள் நேற்று 2-வது நாளாக போராட்டம் நடத்தினர்.
-
பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கம் : தேர்தல் கமிஷன் நடவடிக்கை
23 Jul 2025பாட்னா : பீகாரில் 52 லட்சம் வாக்காளர்கள் நீக்கி தேர்தல் கமிஷன் நடவடிக்கை எடுத்துள்ளது.
-
இந்திய வான்வெளியில் பாக். விமானங்கள் பறக்க ஆகஸ்ட் 24 வரை தடை
23 Jul 2025புதுடெல்லி : இந்திய வான்வெளியில் பாகிஸ்தான் விமானங்கள் பறப்பதற்கான தடையை ஆகஸ்ட் 24 வரை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
-
ஏர் இந்தியா விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு : அவசர அவசரமாக தரையிறக்கம்
23 Jul 2025திருவனந்தபுரம் : கத்தார் புறப்பட்ட ஏர் இந்தியா விமானத்தில் தொழில் நுட்க கோளாறு ஏற்பட்டது. இதனால் அவசர அவசரமாக விமானத்தை தரையிறக்கப்பட்டது.
-
எனக்கு பாதுகாப்பில்லை: நடிகை தனுஸ்ரீ தத்தா கண்ணீர்
23 Jul 2025டெல்லி : என் வீட்டுக்குள்ளேயே எனக்கு பாதுகாப்பு இல்லை என்று நடிக்கை தனுஸ்ரீ தத்தா கண்ணீர் வீடியோ சமுகவரையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.