முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பொது நுழைவு தேர்வை ரத்து செய்ய தமிழக அரசு புதிய மனு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,ஏப்.22 - இந்தியா முழுவதும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என இந்திய மருத்துவ கவுன்சில் அறிவித்தது. இதை ரத்து செய்யக் கோரி தமிழக அரசின் சுகாதார துறை செயலாளர் சுப்புராஜ், திருவள்ளூரில் உள்ள டி.டி. மருத்துவக் கல்லூரி தலைவர் நாயுடு ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். இதை விசாரித்த ஐகோர்ட் பொது நுழைவுத் தேர்வுக்கு இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்தது. 

இந்த தடையை நீக்கக் கோரி இந்திய மருத்துவ கவுன்சில் பதில் மனு தாக்கல் செய்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னை ஐகோர்ட்டில் சுப்புராஜ் புதிய மனு தாக்கல் செய்துள்ளார். அதில் கூறியிருப்பதாவது, 

மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு தேவையில்லை என தமிழக அரசு நியமித்த நிபுணர் குழு பரிந்துரை செய்துள்ளது. இதை தொடர்ந்து கடந்த 2007 ம் ஆண்டு முதல் தமிழகத்தில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.இ. படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்படவில்லை. இதற்கான சட்டத்தையும் தமிழக அரசு இயற்றியுள்ளது. பொது நுழைவு தேர்வு நடத்துவது குறித்து அறிவிப்பு வெளியிடுவதற்கு முன் மாநில அரசுகளிடம் இந்திய மருத்துவ கவுன்சில் கலந்தாலோசிக்கவில்லை. இந்திய மருத்துவ கவுன்சிலின் அறிவிப்பு மாணவர்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளுக்கு பொது நுழைவு தேர்வு நடத்தப்படும் என மருத்துவ கவுன்சில் வெளியிட்ட அறிவிப்பை ரத்து செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இந்த மனு மீது அடுத்த வாரம் விசாரணை நடத்தப்படுகிறது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்