முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சென்னையில் தினமும் 1 மணி நேரம் மின்வெட்டு

வியாழக்கிழமை, 21 ஏப்ரல் 2011      தமிழகம்
Image Unavailable

சென்னை,ஏப்.22 - சென்னையில் தினமும் ஒரு மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.  இப்போது இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களில் மின் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த மாநிலங்களில் இருந்து தமிழகத்துக்கு தேவையான மின்சாரத்தை பெற முடியாதநிலை ஏற்பட்டுள்ளது. இந்த மின்பற்றாக்குறை மேலும் சில வாரங்களுக்கு நீடிக்கும் என்று தெரிகிறது. வேறு மாநிலங்களில் இருந்து தினமும் ரூ.50 கோடிக்கு மின்சாரம் வாங்கியும், நிலைமையைசரி செய்ய முடியவில்லை. எனவே வேறு வழியின்றி, வீட்டு உபயோகத்திற்கான மின்சாரத்தில் இரண்டுமணி நேரம் மின்வெட்டு என்பதற்கு பதிலாக, மூன்று மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படும். சென்னை நகரில் இதுவரை எந்தவிதமான மின்வெட்டும் செய்யப்படாமல் இருந்தது. இனி மேல்தினமும் ஒரு மணி நேரம் மின் சப்ளை நிறுத்தப்படும். பகல் நேரத்தில் மட்டுமே மின்வெட்டு இருக்கும். இன்னும் ஒரு சில வாரங்களில் காற்றாலைகள் மூலமாக கிடைக்கும் மின்சாரம் அதிகமாகக்கூடும். அதுவரை பொறுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்