முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

8 பேர் கும்பலால் சுவிட்சர்லாந்து பெண் பாலியல் பலாத்காரம்

ஞாயிற்றுக்கிழமை, 17 மார்ச் 2013      இந்தியா
Image Unavailable

 

போபால், மார்ச். 17 - சுவிட்சர்லாந்து நாட்டுப் பெண் 8 பேர் கும்பலால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இவர் தனது  கணவருடன் இந்தியா வந்துள்ளார். மத்தியபிரதேச மாநிலத்தில் பல சுற்றுலாதலங்களுக்கு சென்றார். ஆக்ராவில் உள்ள தாஜ்மஹாலை பார்க்க இவர் சைக்கிளில் சென்றார். அவரது கணவரும் அவருடன் மற்றொரு சைக்கிளில் சென்றார்.மத்தியபிரதேச மாநிலத்தில் உள்ள ஜாதியா கிராமத்தில் 

சென்றபோது அவர்கள் சைக்கிளை நிறுத்திவிட்டு ஓய்வு எடுத்தனர். அப்போது அங்கு வந்த 8 பேர் கும்பல் அவர்களை மிரட்டி பணத்தை பறித்தனர். அப்போது அந்த பெண்ணுக்கும்,கும்பலில் வந்தவர்களுக்கும் தகராறு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் அந்த பெண்ணின் கணவரை உதைத்தனர். பின்னர் அந்த பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.

இதுகுறித்து அந்த பெண் டாடியா சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸார் அவர்களை கைது செய்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்