முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எம்.பி.பி.எஸ் படிப்புகளில் சேருவதற்கு கடும் கட்-ஆப் போட்டி

புதன்கிழமை, 11 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை,மே.11 - தமிழகத்தில் பிளஸ் 2 முடித்த மாணவர்களிடையே பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேர எந்த ஆண்டும் இல்லாத அளவிற்கு இந்த ஆண்டு கடும் கட் - ஆப் போட்டி ஏற்பட்டுள்ளது. பி.இ., எம்.பி.பி.எஸ். படிப்புக்கு உரிய முக்கிய பாடங்களாகிய கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகியவற்றில் கடந்த ஆண்டுகளை காட்டிலும் மிக அதிகமாக மாணவர்கள் ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண் (கட் ஆப்) 200 க்கு 200 ஐ பெற்றுள்ளனர். பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய கணிதம், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 120 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இதே போன்று எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்கு உரிய உயிரியல், இயற்பியல், வேதியியல் ஆகிய பாடங்களில் 65 மாணவர்கள் 200 க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். 

பி.இ. படிப்பில் சேருவதற்கு உரிய மூன்று முக்கிய பாடங்களில் கடந்த கல்வி ஆண்டில் மொத்தம் 31 பேர் மட்டுமே 200 க்கு 200 மதிப்பெண் பெற்றனர். இந்த ஆண்டு இந்த எண்ணிக்கை நான்கு மடங்கு அதிகரித்துள்ளது. 

எம்.பி.பி.எஸ். படிப்பில் சேருவதற்குரிய மூன்று முக்கிய பாடங்களில் கடந்த கல்வி ஆண்டில் மொத்தம் 14 மாணவர்கள் மட்டுமே 200 க்கு 200 பெற்றிருந்தனர். இந்த ஆண்டு இநத எண்ணிக்கையும் 4 மடங்குக்கு மேல் அதாவது 65 மாணவர்கள் 200 க்கு 200 பெற்றுள்ளனர். கடந்த ஆண்டு கணிதத்தில் 200 க்கு 200 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 1,762 ஆகும். இந்த ஆண்டு கணிதத்தில் 2,720 மாணவர்கள் 200 க்கு 200 வாங்கியுள்ளனர். இந்த ஆண்டு இயற்பியல் பாடத்தில் 646 மாணவர்களும், வேதியியல் பாடத்தில் 1,243 மாணவர்களும், உயிரியல் பாடத்தில் 615 மாணவர்களும் 200 க்கு 200 பெற்றுள்ளனர். 

எனவே கடந்த கல்வி ஆண்டை காட்டிலும் இந்த ஆண்டு கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல் ஆகிய பாடங்களில் 200 க்கு 200 பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை அதிகம் என்பதால் பி.இ. எம்.பி.பி.எஸ். படிப்புகளில் சேருவதற்கு ஒட்டுமொத்த கூட்டு மதிப்பெண்ணுக்கு கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்