எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, டிச.18 - தலைமை செயலகத்தில் நேற்று முன்தினம் கூடிய நிதி கமிஷன் கூட்டத்தில் சாதுர்யமாக பேசி அனைவரையும் வியக்கவைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா.
சென்னையில் நேற்று முன்தினம் நடந்த 14_வது நிதிக் குழு மாநாட்டில் கலந்து கொண்டு பேசிய முதல்வர் ஜெயலலிதா தமிழகத்தின் மின் நிலைமை குறித்து 10 நிமிடங்களுக்கு புள்ளிவிவரங்களை அடுத்தடுத்து எடுத்து வைத்து விரிவாகப் பேசி அனைவரையும் கவர்ந்து விட்டார்.
இத்தனைக்கும் எந்தவிதமான குறிப்பையும் அவர் கைவசம் வைத்துக் கொள்ளாமல் பேசி அசத்தியுள்ளார். இந்த பத்து நிமிடத்திற்குள்ளாகவே தமிழகத்தின் மின்சார நிலைமை, மின் பற்றாக்குறை, உற்பத்தி நிலவரம், எதிர்காலத் திட்டங்கள் உள்ளிட்டவற்றை அவர் விளக்கி முடித்து விட்டார். இந்தப் பேச்சின்போது தமிழகத்தில் மத்திய அரசு திட்டமிட்டே மின் தடைகளை ஏற்படுத்துவதாக குற்றம் சாட்டினார் அவர்.
கூட்டத்தில் நிதிக்குழு அதிகாரிகள் பேசியபோது அவ்வப்போது குறுக்கிட்ட முதல்வர் ஜெயலலிதா, தமிழகத்தின் தேவைகள் பற்றிய கோரிக்கைகளையும் மீண்டும் அழுத்தம் திருத்தமாக எடுத்துரைத்து தனது விளக்கத்தையும், கோரிக்கையையும் அவர் எடுத்து வைத்தபோது எந்தவித குறிப்பையும் கையில் வைத்துக் கொள்ளாமல் மனதிலிருந்ததை அப்படியே விளக்கி விரிவாகப் பேசியது குழுவின் தலைவர் ரெட்டி உள்ளிட்ட அனைத்து மத்திய அதிகாரிகளையும் ஆச்சரியப்படுத்தியது.
மேலும் மின் நிலைமை, மின் பற்றாக்குறை, தேவை, உற்பத்தி உள்ளிட்டவை குறித்து அவர் புள்ளி விவரங்களை அப்படியே அழகாக எடுத்து வைத்தவிதமும் அனைவரையும் கவர்ந்தது.
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இன்னும் ஆறு மாதங்களில் தீரும்:
தமிழகத்தில் மின்சார பற்றாக்குறை இன்னும் ஆறு மாதங்களில் தீரும் என்று நிதிக் கமிஷனிடம் முதல்_அமைச்சர் ஜெயலலிதா உறுதி அளித்தார்.
சென்னையில் தலைமைச் செயலகத்தில் நேற்று முன்தினம் நடந்த 14_வது நிதிக்கமிஷன் கூட்டத்தில் முதல்_அமைச்சர் ஜெயலலிதா பேசியதாவது:_மின்சார சப்ளை மற்றும் தேவையின் நிலை குறித்து நிதிக்குழு உறுப்பினர் முண்டல் கேள்வி எழுப்பினார். இது குறித்து சில உண்மைகளை விளக்க வேண்டியதுள்ளது. மின்சார நிலையில், இந்த அரசு உண்மையிலேயே மிகப்பெரிய பிரச்சினையை சந்தித்து அதை கையாண்டு வருகிறது. ஆனால் இந்த நிலை இந்த அரசால் ஏற்பட்டதல்ல.
மூன்றாம் முறையாக நான் 2011_ம் ஆண்டில் ஆட்சிக்கு வந்தபோது, தமிழகம் படுபாதாள இருளுக்குள் மூழ்கிக்கொண்டிருக்கும் மாநிலமாக இருந்தது.மின்சார உற்பத்திக்காக 2001_06_ம் ஆண்டுகளில் எனது அரசு பல திட்டங்களைத் தீட்டி இருந்தது. அந்த திட்டங்களை தொடர்ந்து நிறைவேற்றி முடித்திருந்தால், தற்போது தமிழகம் மின்மிகை மாநிலமாகத்தான் இருந்திருக்கும்.ஆனால் கடந்த ஆட்சியாளர்கள், அந்த திட்டங்களை அமல்படுத்துவதற்கு எந்தவொரு முனைப்பும் காட்டாமல் அப்படியே விட்டுவிட்டனர். இதனால் 2007_ம் ஆண்டில் இருந்து தமிழ்நாட்டுக்கு நிலையான மின்பற்றாக்குறை நிலவத்தொடங்கி, 2011_ம் ஆண்டு மே மாதம் வரை நீடித்தது.
அப்போது மின்சாரத்தை வாங்க வேண்டிய சூழ்நிலை எழுந்தது. மின்சார வாங்குவதற்கு பல வகைகள் இருந்தன. அதில் நீண்டகால ஒப்பந்தம் என்ற முறை உண்டு. மற்ற மாநிலங்களுடன் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டால், மின்சாரத்தின் விலை குறையும். அதிக ஆண்டுகளுக்கு மின்சாரம் பெறலாம் என்ற உத்தரவாதம் கிடைக்கும்.
அதோடு, மின் பகிர்மானப் பாதை (காரிடார்) அமைப்பதில் எங்களுக்கு மத்திய அரசால் முன்னுரிமை கிடைக்கும் என்ற நன்மைகள் இருந்தன. ஆனால் கடந்த கால அரசு, வேண்டுமென்றே, மின்சாரம் வாங்குவதற்கு குறுகிய கால முறையை தேர்வு செய்தது. இதனால்தான் எனது அரசு, இருண்ட சூழ்நிலையை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று.
அப்போது நான்காயிரம் மெகாவாட் மின்சாரம் மின்பற்றாக்குறை இருந்தது. இது எங்களால் ஆனதல்ல. இந்த சூழ்நிலைக்குள் சிக்கி அதை எதிர்கொள்ளும் அவல நிலைக்கு ஆளானோம். எனவே நாங்களும் மின்சாரம் வாங்கினோம். இதற்கு காலம் ஆகும் என்பது உங்களுக்கு தெரியும்.எனவே மின்மிகை மாநிலங்களுடன் பேச்சுவார்த்தையை வெற்றிகரமாக நடத்தி முடித்தோம். ஆனாலும் மின்சார பகிர்மானப் பாதை அமைப்பதற்கு தமிழகத்துக்கு முன்னுரிமை கிடைக்கவில்லை. ஏனென்றால், மற்ற மாநிலங்கள், ஏற்கனவே நீண்டகால ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டிருந்தன.
இதனால்தான், குஜராத் மாநிலத்தில் இருந்து 500 மெகாவாட் மின்சாரம் கொண்டு வருவதற்கு ஒப்பந்தம் செய்திருந்தாலும், 150 மெகாவாட் மின்சாரத்தை மட்டுமே கொண்டு வர முடிந்தது. இதுதான் இங்குள்ள நிலை.இது அரசியல் களமல்ல, ஆனால் உண்மையை கூறுகிறேன். நாங்கள் பல்வேறு புதிய மின் திட்டங்களை தொடங்கினோம். அவை தொடங்கி இந்த நேரத்தில் பயனளித்துக்கொண்டிருந்திருக்க வேண்டும். ஆனால் வேண்டுமென்றே அவற்றுக்கான ஒப்புதலை மத்திய அரசு தாமதப்படுத்தியது.
மிகவும் குறைந்த அளவு மின்சாரத்தையே தமிழகம் பெற்றது. மத்திய அரசு தர வேண்டிய ஒப்புதல்கள் மறுக்கப்படுகின்றன. உதாரணமாக, குண்டா மின் திட்டம், சில்லகல்லா மின் திட்டம் ஆகியவற்றை தொடங்க நாங்கள் தயாராக இருக்கிறோம். ஆனால் மத்திய அரசின் ஒப்புதல் இன்னும் கிடைக்கவில்லை.நான் இரண்டாம் முறையாக முதல்_அமைச்சராக இருந்தபோது கொண்டு வந்த மின் திட்டத்துக்கு மத்திய அரசின் ஒப்புதல் தேவைப்பட்டது. வனப்பகுதியில் 14 கி.மீ. நீளத்துக்கு பகிர்மான கேபிளை அமைக்க வேண்டும் என்பதற்கான ஒப்புதல் அது.
மத்திய வனத்துறைதான் அந்த ஒப்புதலை வழங்க வேண்டும். அரசியல் காரணங்களுக்காக அது தாமதப்படுத்தப்பட்டது. நாங்கள் தொடர்ந்து மத்திய அரசுக்கு நினைவூட்டினோம். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. ஒன்றரை ஆண்டுகள் காத்திருந்தோம். இதெல்லாம் மக்களுக்கான தேவைகள் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.இறுதியில் சுப்ரீம் கோர்ட்டை அணுகினோம். சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவின் பேரில் மத்திய அரசின் அனுமதி கிடைத்தது. இதுபோன்ற பிரச்சினைகளையும் நாங்கள் சந்தித்து வருகிறோம்.
மின்சார தேவை எவ்வளவு, இருப்பு எவ்வளவு என்பதில் முன்னெச்சரிக்கையாக இருக்கிறோம். எங்களுக்கு மின்சார சப்ளை செய்ய முடியும். முன்பு சில இடையூறுகளால் கட்டப்பட்டு இருந்தோம். இப்போது நான் சொல்கிறேன், மின்சார தேவைக்கும் சப்ளைக்கும் இடையே உள்ள இடைவெளி அடைக்கப்பட்டுவிட்டது.
இந்த ஆண்டு ஜூலையில் இருந்து அக்டோபர் வரை தமிழகத்தில் மின்வெட்டு இருந்ததில்லை. அந்த இடைவெளியை இரண்டு ஆண்டுகளில் அடைப்பதற்கு ராட்சச முயற்சியை எனது அரசு மேற்கொண்டது. இதுகுறித்து சட்டசபையில் நான் பேசினேன்.உடனே எதிர்பாராத விதமாக, தமிழகத்தில் உள்ள பல மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் செயலற்றுப்போயின. இன்றுவரை தமிழக அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனல் மின்நிலையங்கள், மின் உற்பத்தி நிலையங்கள் அனைத்தும் முழு வீச்சில் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. தற்போது மீண்டும் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
இதற்கு காரணம், மத்திய மின் உற்பத்தி நிலையங்கள் செயல்படாமல் போனதால்தான். அனைத்திலும் ஒரே நேரத்தில் இது நிகழ்ந்தது. இருந்தாலும், எங்களால் முடிந்த அளவில் முயற்சி செய்கிறோம். இன்னும் 6 மாதங்களில் தமிழகம் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மட்டுமல்ல, மின்மிகை மாநிலமாக இருக்கும் என்பதை உங்களிடம் உறுதிபட கூறிக்கொள்கிறேன்.
இவ்வாறு முதல்வர் ஜெயலலிதா பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 1 month ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 2 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 2 months ago |
-
அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு; தமிழக அரசாணை வெளியீடு
19 Nov 2025சென்னை, அரசு ஊழியர்களுககு அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது குறித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
-
வருங்கால வளர்ச்சிக்கு தேவையானதும், அவசியமான மெட்ரோ ரயில் திட்டத்தை கோவை, மதுரை நகரங்களுக்கு நிச்சயம் கொண்டு வருவோம் : மத்திய அரசு நிராகரித்த நிலையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
19 Nov 2025சென்னை : கோவை, மதுரை மெட்ரோ திட்ட மத்திய அரசு நிராகரித்துள்ளதற்கு கண்டனம் தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கூட்டாட்சிக் கருத்தியலை சிதைப்பதை சுயமரியாதைமிக்க மண்ணான
-
மராட்டிய அரசியலில் பரபரப்பு: பா.ஜனதா- சிவசேனா திடீர் மோதல்
19 Nov 2025மும்பை : பா.ஜனதா- சிவசேனா இடையே திடீர் மோதலில் அமைச்சரவை கூட்டத்தை சிவசேனா மந்திரிகள் புறக்கணித்து பரபரப்பை ஏற்படுத்தினர்.
-
ஆலங்குளம், கன்னியாகுமரி உள்ளிட்ட 3 மாவட்ட தி.மு.க. நிர்வாகிகள் முதல்வர் ஸ்டாலினுடன் சந்திப்பு
19 Nov 2025சென்னை : ஒட்டப்பிடாரம், ஆலங்குளம், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி தி.மு.க. நிர்வாகிகளை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசினார்.
-
தனியார் வாகனங்களில் சிவப்பு, நீல நிற விளக்குகள் பயன்படுத்த கூடாது: தூத்துக்குடி எஸ்.பி. எச்சரிக்கை
19 Nov 2025தூத்துக்குடி, உச்சநீதிமன்றம் உத்தரவுப்படி சிவப்பு, நீல நிற ஸ்ட்ரோப் விளக்குகளை தனியார் வாகனங்களில் பயன்படுத்த கூடாது என்று எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் தெரிவித்துள்ளார்.
-
விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம்: அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை?
19 Nov 2025சென்னை : விஜய் நிலைப்பாட்டில் திடீர் மனமாற்றம் ஏற்படும் என்று அ.தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.
-
பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு கோவையில் கருப்புக்கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம்
19 Nov 2025கோவை : பிரதமர் மோடியின் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்புக் கொடி ஏந்தி விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.
-
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு: சி.பி.ஐ. விசாரணைக்கு இடைக்கால தடை
19 Nov 2025புதுடெல்லி : ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு சுப்ரீம்கோர்ட் இடைக்கால தடையை விதித்துள்ளது.
-
காசா அமைதி திட்டத்திற்காக ட்ரம்ப் வரைவு தீர்மானத்திற்கு ஐக்கிய நாடுகள் சபை ஒப்புதல்
19 Nov 2025நியூயார்க் : காசா அமைதி திட்டத்திற்கு ஐ.நா. அமைப்பு ஒப்புதல் வழங்கியுள்ளது.
-
திருவண்ணாமலையில் மலையேற பக்தர்களுக்கு அனுமதி தரப்படுமா? அமைச்சர் எ.வ.வேலு விளக்கம்
19 Nov 2025தி.மலை, தீபத்தின் போது ஈரப்பதத்தை பொறுத்து மலையேற பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்களா இல்லையா என முடிவு செய்யப்படும் என அமைச்சர் எ.வ.வேலு கூறியுள்ளார்.
-
கோவையில் இயற்கை வேளாண் மாநாடு: விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார் பிரதமர் மோடி
19 Nov 2025கோவை கோவையில் நடைபெற்ற இயற்கை வேளாண் மாநாட்டில் பங்கேற்ற பிரதமர் மோடி விவசாயிகளுக்கு ரூ.18 ஆயிரம் கோடி நிதியை விடுவித்தார்.
-
சிங்கள ஆட்சியாளர்களுக்கு திருமாவளவன் கண்டனம்
19 Nov 2025சென்னை : இலங்கையின் ஒற்றை ஆட்சி முறைமையின்கீழ் தமிழ் மக்கள் ஒருபோதும் நிம்மதியாக வாழமுடியாது என்று தெரிவித்துள் வி.சி.க.
-
சபரிமலை: கூட்ட நெரிசலில் பெண் பலி
19 Nov 2025சபரிமலை : சபரிமலை கூட்ட நெரிசலில் சிக்கி பெண் உயிரிழந்தார்.
-
பாரதிய ஜனதாவில் இணைந்த பிரபல நடிகை ஊர்மிளா உன்னி
19 Nov 2025திருவனந்தபுரம் : பிரபல மலையாள நடிகை ஊர்மிளா உன்னி பா.ஜனதாவில் இணைந்தார்.
-
மதுரையில் நிகழந்த சோகம்: நாய் குறுக்கே பாய்ந்ததால் சாலையில் விழுந்த தம்பதி, பேருந்து மோதி பலி
19 Nov 2025மதுரை : மதுரையில் நாய் குறுக்கே பாய்ந்ததில் மோட்டார் சைக்கிளில் இருந்து கணவனும், மனைவியும் தூக்கி வீசப்பட்டு சாலையில் விழுந்தனர்.
-
ஆடம்பரம் அல்ல; அவசியமானது: மதுரை, கோவை நகரங்களுக்கு மெட்ரோ ரயில் சேவை தேவை : அமைச்சர் தங்கம் தென்னரசு தகவல்
19 Nov 2025சென்னை : மெட்ரோ ரயில் என்பது ஆடம்பரம் அல்ல அவசியமானது என்று தெரிவித்துள்ள அமைச்சர் தங்கம் தென்னரசு மதுரை, கோவை நகரங்களுக்கு இது அவசியமான உள்கட்டமைப்புத் தேவை என்றும் அவ
-
தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தல்
19 Nov 2025ஜோகன்னஸ்பெர்க் : தனி விமானம் மூலம் சட்டவிரோதமாக தென்னாப்பிரிக்காவுக்கு 150 பாலஸ்தீனியர்கள் நாடு கடத்தப்பட்டனர்.
-
கூகுள் மேப்பில் 10 புதிய அம்சங்கள் அறிமுகம்
19 Nov 2025வாஷிங்டன் : கூகுள் மேப்பில் 10 புதிய அப்டேட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
-
ரஷ்ய அதிபருடன் ஜெய்சங்கர் சந்திப்பு: முக்கிய விசயங்கள் பற்றி ஆலோசனை
19 Nov 2025மாஸ்கோ : ரஷ்ய அதிபருடன் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை இந்தியா வருகை
19 Nov 2025டெல்லி : ஆஸ்திரேலியா வெளியுறவுத்துறை அமைச்சர் பென்னி வோங் இந்தியா வந்துள்ளார்.
-
வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பு: தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிப்பு
19 Nov 2025சென்னை : வருவாய் துறை ஊழியர்கள் புறக்கணிப்பால் தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளது.
-
கோவை பயணம் குறித்து தமிழில் பதிவிட்ட பிரதமர்
19 Nov 2025புதுடெல்லி : கோவையில் நடைபெற்ற இயற்கை விவசாயிகள் மாநாட்டில் பங்கேற்றது குறித்து பிரதமர் மோடி தமிழில் பதிவிட்டுள்ளார்.
-
கனமழை எதிரொலி; குற்றாலம் மெயின் அருவியில் 2-வது நாளாக தடை நீட்டிப்பு
19 Nov 2025தென்காசி : கனமழை எதிரொலி காரணமாக குற்றாலத்தில் வெள்ளபெறுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் சுற்றுலா பயணிகளுக்கு 2-வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது.
-
பாட்னா, காந்தி மைதானத்தில் விழா: பீகார் முதல்வராக இன்று நிதிஷ்குமார் பதவியேற்பு : பிரதமர் மோடி உள்ளிட்டோர் பங்கேற்பு
19 Nov 2025பாட்னா : தலைநகர் பாட்னாவில் உள்ள காந்தி மைதானத்தில் நடைபெறும் விழாவில் பீகாரின் முதல்வராக நிதிஷ்குமார்10-வது முறையாக இன்று பதவியேற்கவுள்ளார்.
-
ஏ.ஐ.யை நம்பாதீர்கள்: சுந்தர் பிச்சை
19 Nov 2025வாஷிங்டன் : ஏ.ஐ. தரும் அனைத்து தகவல்களும் சரியானதாக இருக்கும் என கூற முடியாது என்று சுந்தர் பிச்சை கூறியுள்ளார்.


