முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மறைந்த தலைவர்களுக்கு அ,தி.மு.க. பொதுக்குழு இரங்கல்

வியாழக்கிழமை, 19 டிசம்பர் 2013      அரசியல்
Image Unavailable

 

சென்னை, டிச.20 - சென்னை வானகரத்தில் அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் பொதுச்செயலாளரும், தமிழக முதல்_அமைச்சருமான ஜெயலலிதா தலைமையில்  நேற்று   நடந்தது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 16 தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டுள்ளது. 

கழக வளர்ச்சிக்காகத் தங்களை முழுமையாக <டுபடுத்திக் கொண்டு பணியாற்றிய போது, நம் அரசியல் எதிரிகளால் காழ்ப்புணர்ச்சி காரணமாக படுகொலை செய்யப்பட்ட கழக உடன்பிறப்புகள்; கழகப் பணியாற்றும் போது விபத்துக்குள்ளாகி மரணமடைந்த கழக உடன்பிறப்புகள்; சாலை விபத்துக்குள்ளாகி அகால மரணமடைந்த கழக உடன்பிறப்புகள்; உடல் நலக் குறைவால் மரணமடைந்த கழக உடன்பிறப்புகள்; மனித நேயப் பண்பாளராக நாட்டிற்காகப் பாடுபட்ட தலைவர் மற்றும் சமூகத்தில் முக்கியத்துவம் வாய்ந்த பிரமுகர்கள் ஆகியோரின் மறைவிற்கு இந்தப் பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது.

கழக அவைத் தலைவர் இ. மதுசதனன் முன்மொழிந்தார். நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவிற்கு இரங்கல் : தென்னாப்பிரிக்காவின் நிற வெறிக் கொள்கையை எதிர்த்துப் போராடி வெற்றி கண்டவரும், அந்த நாட்டின் முதல் கருப்பின அதிபராக பதவி வகித்தவரும், நோபல் அமைதிப் பரிசு பெற்றவரும், காந்தீய சிந்தனையாளருமான  திரு. நெல்சன் மண்டேலா அவர்களின் மறைவிற்கு இந்தப் பொதுக்குழு தனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறது. இது தவிர 195 மறைந்த அ.தி.மு.க. தலைவர்களுக்கு பொதுக்குழு இரங்கல் தெரிவித்தது. இதில்

 சி. பெருமாள், எம்.எல்.ஏ.,ஏற்காடு சட்டமன்றத் தொகுதிக் கழகச் செயலாளர், சேலம் புறநகர் மாவட்டம்

கே.ஆர்.பி. மணிமொழியன்,தூத்துக்குடி மாவட்டக் கழக அவைத் தலைவர்,  தலைமைக் கழகப் பேச்சாளர்

தென்பாண்டியன் , கழக அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி துணைச் செயலாளர்

கே. சின்னசாமி ,  நாமக்கல் மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் சேந்தமங்கலம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

ராஜாராம் ,திண்டிவனம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் விழுப்புரம் வடக்கு மாவட்டம்

ஆர்.எஸ். தங்கவேலு , வால்பாறை தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கோவை புறநகர் மாவட்டம்

மு.சு. கணபதி , சிதம்பரம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர், கடலூர் மேற்கு மாவட்டம்

எஸ்.வி. வருதராஜன் , சேலம்_1 தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்

ஆர். அய்யாசாமி , மகாராழடிர மாநில எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

சேது. சரவணன்,தமிழ் நாடு குடிசை மாற்று வாரிய அண்ணா பொதுத் தொழிலாளர்கள்   மற்றும் பணியாளர்கள் சங்கச் செயலாளர்

மணவை க. நெடுமாறன் , திருச்சி புறநகர் மாவட்டக் கழக அவைத் தலைவர்

சந்தனக்குமார்  தேனி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றச் செயலாளர்

 சாம்சன்  வட சென்னை தெற்கு மாவட்ட புரட்சித் தலைவி பேரவைச் செயலாளர்

கே. முத்தலிபா   தூத்துக்குடி மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளர்

ராஜேந்திரராவ்   கிருழணகிரி மாவட்ட வழக்கறிடர் பிரிவுச் செயலாளர்

மருத. அய்யாவு  திருவாரூர் மாவட்ட அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணிச் செயலாளர்

குழ. மைக்கேல்சாமி   தஞ்சாவூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற துணைத் தலைவர்

என். ஜெயசீலன் (எ) சீலன்   தென் சென்னை வடக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர்

ஏ. மணிவண்ணன்  மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா தொழிலாளர் சங்க துணைச் செயலாளர் திருவள்ளூர் தெற்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற இணைச் செயலாளர் உட்பட 195 பிரமுகர்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்