முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மதுரையில் விடிய விடிய போலீசார் சோதனை

வெள்ளிக்கிழமை, 20 மே 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மே.20 - மதுரையில் நேற்றுமுன்தினம் இரவு விடிய விடிய நடந்த சோதனையில் வாகன விதிமீறல்கள் தொடர்பாக ரூ.1,12,400 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

மதுரை நகருக்குள்10 இடங்களில் சட்டம் ஒழுங்கு, குற்றப்பிரிவு மற்றும் போக்குவரத்து போலீசார் இணைந்து திடீர் சோதனை நடத்தினர். இதில் சந்தேகத்திற்கு உரிய நபர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது தலைமறைவு குற்றவாளிகள் 8 பேர் கைது செய்யப்பட்டனர். சந்தேக நபர்கள் 244 பேரை போலீசார் பிடித்து விசாரணை நடத்துகின்றனர். இரவில் குடிபோதையில் அதிவேகமாக வாகனம் ஓட்டிய 79 பேர் மீதும், முறையான ஆவணங்கள் இல்லாதது உட்பட பல்வேறு விதிமீறல்கள் தொடர்பாக 66 பேர் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. பல்வேறு குற்றச்செயல்களில் தொடர்புடையதாக போலீசார் தேடி வந்த 10 பேர் சிக்கினர்.

வாகன விதிமீறல்கள் தொடர்பாக மொத்தம் ரூ.1 லட்சத்து12 ஆயிரத்து 400 அபராதம் வசூலானது. மதுரை நகரில் உள்ள 85 லாட்ஜ்களிலும் அதிரடி சோதனை நடந்தது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்