முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜப்பானில் கடும் பனிப்பொழிவு: 600 விமானங்கள் ரத்து

ஞாயிற்றுக்கிழமை, 9 பெப்ரவரி 2014      உலகம்
Image Unavailable

 

டோக்கியோ, பிப். 10 - ஜப்பானில் நிலவி வரும் கடும் பனிப்       பொழிவு காரணமாக சனிக் கிழமை 600 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன. பல்வேறு விபத்துக்களால் 90 பேர் காயமடைந்துள்ளனர். 

ஜப்பானில் 13 ஆண்டுகளுக்குப் பிறகு நிலவும் கடும் பனிப்பொழிவால் சாலை களில் 12 செ.மீ. அளவுக்கு பனி படர்ந்துள்ளது. 

இது பிற்பகலுக்குள் 20 செ.மீ. அளவை எட்டும் என எதிர்பார்க்கப்படுவதாக அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  

அந்நாட்டின் மத்தியப் பகுதியான இஷாகாவா பகுதியில் நடைபெற்ற கார் விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். சாலைக ளில் வழுக்கும் தன்மை காரணமாக 90 பேர் வரை காயமடைந்துள்ளனர். 

எனவே மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என்று ஜப்பான் அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. 

ஹிரோஷிமா மற்றும் காகாவாவேரே ஆகிய விமான நிலையங்கள் விமான சேவையை நிறுத்தி விட்டு ஓடு தளத்தில் உள்ள பனிக்கட்டிகளை அகற்றும் வேலையை தொடங்கி உள்ளன. 

இதன் காரணமாக நூற்றுக் கணக்கான பயணிகள், விமான நிலையங்களில் தவித்து வருகின்றனர். மேற்கு ஜப்பானிலுள்ள ஷிங்கன் சென் புல்லட் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 

மேலும் தலைநகர் டோக்கியோ மற்றும் அதனைச் சுற்றியுள்ள 3,400 வீடுகளில் மின்சாரம் தடைபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்