எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கென்சிங்டன் ஓவல், ஜூன் 27 - இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான வீரர்கள் தேர்விலும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி பேட்ஸ்மேன் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இந்திய கிரிக்கெட் அணி மேற்கு இந்திய தீவுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு அந்நாட்டு அணிக்கு எதிராக போட்டிகளில் விளையாடி வருகிறது. இந்த தொடரில் ஒரு டுவெண்டி -20 மற்றும் 5 ஒருநாள் போட்டிகள், 3 டெஸ்ட் போட்டிகள் இடம்பெற்றிருந்தன. இதில் டுவெண்டி - 20 போட்டியில் வெற்றிபெற்ற இளம் இந்திய அணி, ஒரு நாள் போட்டித் தொடரையும் 3 - 2 என்ற கணக்கில் வென்றது. தொடர்ந்து நடைபெற்ற டெஸ்ட் தொடரில் வழக்கமான கேப்டன் மகேந்திரசிங் தோனி தலைமையில் களமிறங்கிய இந்திய அணி முதல் டெஸ்ட் போட்டியிலும் 63 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த போட்டியில் இந்திய வீரர் ராகுல் டிராவிட் சதமடித்து இந்திய அணியின் வெற்றிக்கு உதவினார். இந்த முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியில் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் சேர்க்கப்படவில்லை. கிறிஸ்கெய்ல் இந்தியாவில் சமீபத்தில் நடைபெற்ற ஐ.பி.எல். தொடரில் அதிரடியாக விளையாடி ரன்களை குவித்து தொடர் நாயகன் பரிசை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திற்கு எதிராக சில கருத்துக்களை வெளியிட்டதால் கிறிஸ் கெய்ல் ஒரு நாள் போட்டித் தொடரிலேயே சேர்க்கப்படவில்லை. இதையடுத்து வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்துடன், அந்நாட்டு கிரிக்கெட் வீரர்கள் நல அமைப்பைச் சேர்ந்தவர்கள் கிறிஸ்கெயிலை இந்திய தொடரில் சேர்ப்பது குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இருந்தாலும் முதல் டெஸ்ட் போட்டியில் கிறிஸ்கெய்ல் சேர்க்கப்படவில்லை. தற்போது டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்று முன்னலைபெற்ற நிலையில், வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் இரண்டாவது டெஸ்டிற்கான வீரர்கள் பெயரை அறிவித்துள்ளது. இந்த இரண்டாவது டெஸ்ட்டிலும் கிறிஸ்கெய்ல் புறக்கணிக்கப்பட்டிருக்கிறார். இதுதொடர்பாக வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நல சங்கத்தினர் பலமுறை பேச்சுவார்த்தை நடத்தியும் தேர்வுக்குழுவினர் கிறிஸ்கெய்ல் விஷயத்தை கவனத்தில் எடுத்துக்கொள்ளவேயில்லை.
முன்னதாக நடந்த வீரர்கள் தேர்வுக்குழு கூட்டத்தில் தேர்வுக் குழு தலைவர் எர்னஸ்ட் ஹில்லையர் தெரிவிக்கையில், கடந்த சில வாரங்களுக்கு முன் கிறிஸ்கெய்ல் கிரிக்கெட் வாரியம் குறித்து மரியாதைக்குறைவான வார்த்தைகளையும், வாரியத்தை பயமுறுத்துவது போன்ற வார்த்தைகளையும் பயன்படுத்தி கருத்து தெரிவித்திருக்கிறார். அதனால் அவரை மீண்டும் அணியில் சேர்ப்பது குறித்து எந்தவிதமான முடிவும் எடுக்க முடியாது என்று தெரிவித்தார்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியத்திற்கும், வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் நலனுக்கான அசோஸியேசனுக்கும் இடையிலான மோதல் போக்கு இன்னும் ஒரு முடிவுக்கு வராமலேயே தொடர்கிறது. இதற்கிடையில் நாளை கென்சிங்டன் ஓவலில் இந்தியாவிற்கு எதிராக விளையாட இருக்கும் மேற்கிந்திய தீவுகள் அணி வீரர்களின் பெயர்களை மேற்கிந்திய தீவுகள் அணியின் மேலாளர் ரிச்சி ரிச்சர்ட்சனும், அணியின் பயிற்சியாளர் ஓடிஸ் கிப்ஸனும் அறிவித்தனர். இந்தியாவிற்கு எதிரான முதலாவது டெஸ்ட்டில் விளையாடிய அணியில் ஒரே ஒரு மாற்றம் மட்டும் செய்யப்பட்டுள்ளது. அந்த அணியின் உதவி கேப்டன் பிரண்டன் நாஷ் இரண்டாவது டெஸ்ட்டில் நீக்கப்பட்டுள்ளார். இவர் இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட்டில் முதல் இன்னிங்சில் 1 ரன்னையும், இரண்டாவது இன்னிங்சில் 9 ரன்களையும் மட்டுமே எடுத்திருந்தார். இவருக்கு பதிலாக பார்படாஸ் தீவுகளைச் சேர்ந்த பேட்ஸ்மேன் எட்வர்ட்ஸ் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
நாளை இந்தியாவிற்கு எதிரான போட்டியில் விளையாட உள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்களின் பெயர்கள்:
டேரன் ஷம்மி(கேப்டன்), அட்ரியன் பரத், லெண்டில் சிம்மன்ஸ், டேரன் பிராவோ, ராம்நரேஷ் சர்வான், ஷிவ்நரைன் சந்தர்பால், மார்லன் சாமுவேல்ஸ், கார்ல்டன் பாவ்(விக்கெட் கீப்பர்), பிடல் எட்வர்ட்ஸ், ரவி ராம்பால், தேவேந்திர பிஷு, கீமர் ரோச், கிர்க் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஆவர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்2 days 2 sec ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 days 42 min ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
பாட்னா ரயில் நிலையம் அருகே பயங்கர தீ விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024பாட்னா, பீகார் மாநிலம் பாட்னா ரயில் நிலையம் அருகே உள்ள தங்கம் விடுதி இயங்கி வந்தக் கட்டடத்தில் நேற்று காலை பயங்கர தீ விபத்து நேரிட்டது.
-
மதுரையில் விடிய விடிய நடந்த கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி: இன்று பூப்பல்லக்கில் எழுந்தருளி அருள்பாலிப்பு
25 Apr 2024மதுரை, மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகரின் தசாவதார நிகழ்ச்சி விடிய விடிய ராமராயர் மண்டபத்தில் நடந்தது.
-
பாராளுமன்ற தேர்தல்: கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் இன்று 2-ம் கட்ட வாக்குப்பதிவு
25 Apr 2024புதுடெல்லி, கேரளா உள்ளிட்ட 13 மாநிலங்களில் பாராளுமன்ற தேர்தலுக்கான 2-ம் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.
-
குஜராத் அணியை கடைசி பந்தில் வீழ்த்தி டெல்லி திரில் வெற்றி
25 Apr 2024புதுடெல்லி, டெல்லி கேபிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதிக்கொண்ட போட்டியில், டெல்லி கேபிடல்ஸ் அணி கடைசி பந்தில் திரில் வெற்றி பெற்றது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 26-04-2024.
26 Apr 2024 -
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
டி20 உலகக்கோப்பை தொடர்: பிராண்ட் அம்பாசிடராக உசைன் போல்ட் நியமனம்
25 Apr 2024வாஷிங்டன், உலகின் அதிவேக மனிதர் என்று அழைக்கப்படும் ஓட்டப்பந்தய வீரர் உசைன் போல்ட் டி20 உலக கோப்பை போட்டியின் தூதராக நியமிக்கப்பட்டுள்ளார்.
-
ரிஷப் பந்த் குறித்து பயிற்சியாளர்
25 Apr 2024ஐபிஎல் தொடரில் தில்லி அருண் ஜெட்லி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தில்லி கேப்பிடல்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் விளையாடின.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர்: பறிமுதல் செய்ய நீதிமன்றம் உத்தரவு
25 Apr 2024திருச்சி, திருச்சியில் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த முன்னாள் சார்பதிவாளர், அவரது மனைவி ஆகியோருக்கு, சிறப்பு நீதிமன்றத்தில் ஐந்து ஆண்டு கடுங்காவல் தண்டனை விதிக்
-
ரஞ்சிக் கோப்பை: வீரர்களுக்கு ரூ.1 கோடி வரை சம்பளத்தை உயர்த்த பி.சி.சி.ஐ. பரிசீலனை
25 Apr 2024மும்பை, ரஞ்சிக் கோப்பை போட்டிகளில் வீரர்கள் விளையாடுவதை ஊக்கப்படுத்தும் விதமாக, வருடாந்திர ஊதியத்தை ஒரு கோடி ரூபாய் வரை உயர்த்த பி.சி.சி.ஐ.
-
காங்கிரஸ் தேர்தல் அறிக்கை குறித்து நேரில் விளக்கத் தயார்: பிரதமர் மோடிக்கு கார்கே கடிதம்
25 Apr 2024புதுடில்லி, காங்கிரஸ் தேர்தல் அறிக்கையை நேரில் விளக்கத் தயார் எனக் கூறி பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் கார்கே கடிதம் எழுதியுள்ளார்.
-
உலக சாம்பியன்ஷிப்பில்லும் நிச்சயம் வெற்றி பெறுவேன்: சென்னை திரும்பிய கிராண்ட் மாஸ்டர் குகேஷ் நம்பிக்கை
25 Apr 2024சென்னை, கனடாவில் நடைபெற்ற கேண்டிடேட்ஸ் செஸ் போட்டியில் சாதனை படைத்த குகேஷூக்கு சென்னையில் அமோக வரவேற்பளிக்கப்பட்ட நிலையில், உலக சாம்பியன்ஷிப்பிலும் தான் வெற்றி பெற முடி
-
ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம்
25 Apr 2024புதுடெல்லி, ஜே.இ.இ. முதன்மை தேர்வில் 56 மாணவர்கள் 100க்கு 100 மதிப்பெண் பெற்று முதலிடம் பிடித்துள்ளனர்.
-
தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் சரத்பவார்
25 Apr 2024மும்பை, தேசியவாத காங்கிரஸ் சரத் சந்திர பவார் கட்சியின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் அக்கட்சியின் தேசியத் தலைவர் சரத்பவார்.
-
பதவி விலகினார் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி
26 Apr 2024மெக்சிகோ சிட்டி, தனது பதவியை நேற்று முன்தினம் ஹைதி பிரதமர் ஏரியல் ஹென்றி ராஜினாமா செய்தார்.
-
இந்தியாவுடன் பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த விருப்பம்: இலங்கை அதிபர்
26 Apr 2024கொழும்பு, இந்தியாவுடனான பொருளாதார ஒத்துழைப்பை வலுப்படுத்த இலங்கை விரும்புகிறது என்று அதிபர் ரணில் விக்கிரமசிங்கே தெரிவித்துள்ளார்.
-
கைது செய்ய முயன்ற போது தாக்குதல்: அமெரிக்காவில் இந்தியரை சுட்டுக்கொன்ற போலீஸ்
26 Apr 2024நியூயார்க், கைது செய்ய முயன்ற போது நடந்த தாக்குதல் சம்பவத்தை தொடர்ந்து இந்திய வம்சாவளியை சேர்ந்தவரை அமெரிக்க போலீசார் சுட்டுக் கொன்றனர்.