முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசியலில் இருந்து ஓய்வு: ஹிலாரி அறிவிப்பு

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      உலகம்
Image Unavailable

 

வாஷிங்டன்,ஜூலை.17 - ஒபாமாவின் பதவிக்காலம் முடிந்த பிறகு அரசியலில் இருந்து ஓய்வு பெறப் போவதாக அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் ஹிலாரி கிளிண்டன் தெரிவித்தார். மேலும் ஓய்வு நாளை புத்தகம் எழுத செலவிடப் போவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஒபாமாவின் பதவிக்காலம் வரும் 2012 ல் முடிவடைகிறது. அவர் மீண்டும் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்துள்ள நிலையில் தான் மீண்டும் பொது வாழ்க்கையில் ஈடுபடப் போவதில்லை என பி.பி.சி. தொலைக்காட்சிக்கு ஹிலாரி அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

வாழ்நாள் முழுவதையும் பொது வாழ்க்கைக்காக அர்ப்பணிக்க நான் விரும்பவில்லை. எனது குடும்பத்தாருடனும், நண்பர்களுடனும் அதிக நேரம் செலவிட ஆர்வமாக உள்ளேன். இதனால்தான் அரசியலில் இருந்து நான் ஓய்வு பெறுவது என்ற முடிவை எடுத்துள்ளேன். எனது வேலையை நான் மிகவும் நேசிக்கிறேன். மகளிர் மேம்பாட்டுக்காக என்னால் ஆனவற்றை செய்ய நினைத்தேன். கூடுமானவரை தேவையானவற்றை செய்துள்ளேன். 

மனித உரிமை, சுய கவுரவம், சுதந்திரம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் அமெரிக்காவின் தலைமை இந்த உலகத்திற்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே அமெரிக்காவின் முக்கியத்துவத்தையும் தலைமையின் அவசியத்தையும் நிலைநிறுத்துவதே எனது முக்கிய பணியாக கருதுகிறேன். மக்கள் பணியாற்றுவதில் நான் எப்போதும் களைப்படைந்ததில்லை. ஏனென்றால் எப்போதாவது நீண்ட ஓய்வெடுக்க நேர்ந்தால் உடற்பயிற்சி, யோகா போன்றவற்றை செய்வது வழக்கம். எனவே எனது வேலையில் நான் ஒருபோதும் களைப்படைந்ததில்லை என்றார் ஹிலாரி.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்