முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எல்லாமே எனக்கு நினைவில் உள்ளது: சுரேஷ் கல்மாடி விளக்கம்

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,ஜூலை.- 30 - எதுவும் மறக்கவில்லை, எல்லாமே நினைவில் உள்ளது என்று சுரேஷ் கல்மாடி தெரிவித்துள்ளார். காமன்வெல்த் விளையாட்டு போட்டி ஏற்பாடு முறைகேடு தொடர்பாக கைது செய்யப்பட்டு திகார் சிறையில் உள்ள கல்மாடிக்கு நினைவாற்றல் குறைவு நோய் உள்ளதாக திகார் சரக டி.ஐ.ஜி. சர்மா சமீபத்தில் கூறியிருந்தார். இது தொடர்பாக டெல்லி லோக்நாராயண் ஜெய் பிரகாஷ் மருத்துவமனையில் எடுக்கப்பட்ட ஸ்கேன் பரிசோதனை மூலம் கல்மாடிக்கு அந்த நோய்க்கான ஆரம்ப அறிகுறி காணப்படுவதாகவும் கூறப்பட்டது. இது தொடர்பாக கல்மாடிக்கு மூளை தொடர்பான பரிசோதனைகளும் செய்யப்பட்டன. சுமார் 4 மணி நேரம் கழித்து வெளியே வந்த கல்மாடி, செய்தியாளர்களிடம் கூறுகையில்,
நான், எனது மனது, மூளை இரண்டும் நன்றாகவே உள்ளது. எனக்கு அனைத்தும் நினைவில் இருக்கிறது. அதில் சந்தேகமும் வேண்டாம் எனது நினைவாற்றல் குறித்து பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்றார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்