முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடாபியின் சொந்த ஊரில் தாக்குதல் நிறுத்தி வைப்பு

செவ்வாய்க்கிழமை, 27 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

சிர்தே,செப்.- 27 - லிபிய அதிபர் கடாபியின் சொந்த ஊரான சிரிதேவின் மீதான தாக்குதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.  கடாபியின் சொந்த ஊரான சிர்தே அரசு எதிர்ப்பு படையினரால் சுற்றி வளைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் நேட்டோவின் உத்தரவின் பேரில் அரசு எதிர்ப்பு படையினர் தங்கள் தாக்குதல்களை நிறுத்தியுள்ளனர். நேட்டை படையினர் தாக்குதல்களை மேற்கொள்ள உள்ளதாலேயே அரசு எதிர்ப்பு படையினரின் தாக்குதல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  தாக்குதல் தொடங்கப்பட்டால் நகரினுள் கடுமையான சண்டை மூளும் என்றும், வீதிகளில்தான் அதிகளவில் துப்பாக்கி பிரயோகம் நடைபெறும் என்றும் அரசு எதிர்ப்பு படையை சேர்ந்த வீரர் ஒருவர் கூறினார். முன்னதாக நடந்த சண்டையின் போது அரசு எதிர்ப்பு படையினர் 7 பேர் கொல்லப்பட்டனர் என்றும் 145 பேர் காயமடைந்தனர் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்