முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த மாணவர்களிடம்-செல்லூர் ராஜூ ஆறுதல்

வியாழக்கிழமை, 29 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

மேலூர்,செப்.- 29 - மதுரை மாவட்டம் மேலூரில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த பள்ளி மாணவர்களை அமைச்சர் செல்லூர் ராஜூ பார்வையிட்டு ஆறுதல் கூறினார்.  நேற்று முன்தினம் மேலூர் அருகே உள்ள உடப்பன்குடி ஊராட்சி ஒன்றிய துவக்க பள்ளியில் படிக்கும் மாணவியான ஜெயபுவனேஸ்வரி, வலிப்பு நோய் காரணமாக மயக்கமடைந்தார். இதனை பார்த்த அருகில் இருந்த மாணவ, மாணவிகள் பயத்தினால் பாதிப்படைந்தனர். அம்மாபொன்னு, சிவசந்திரன், தேன்மொழி, லெட்சுமணன், ராமன், சுரேந்திரன் ஆகியோர் வாந்தி எடுத்தனர். அவர்களுக்கு முதலுதவியாக கருங்காலக்குடி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது. சாப்பிட்ட உணவில் எந்த பாதிப்பும் இல்லை. பயத்தினால் மட்டுமே பாதிப்படைந்துள்ளனர் என்று தெரிவித்தனர். தகவலறிந்த மேலூர் எம்.எல்.ஏ. சாமி குழந்தைகளுக்கு உடனடியாக சிகிச்சை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். உடனே குழந்தைகள் மேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டது. நேற்று காலை தகவலறிந்த அமைச்சர் செல்லூர் கே. ராஜூ, மேலூர் அரசு மருத்துவமனை வந்து குழந்தைகளுக்கு ஆறுதல் கூறினார். அப்போது அவருடன் சாமி எம்.எல்.ஏ, நகர் மன்ற அ.தி.மு.க. உறுப்பினர் சரவணன், ஒன்றிய கவுன்சிலர்கள் மற்றும் நிர்வாகிகள் இருந்தனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்