முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

திருப்பரங்குன்றம் கோயிலில் இன்று வேல்வாங்கும் விழா

ஞாயிற்றுக்கிழமை, 30 அக்டோபர் 2011      ஆன்மிகம்
Image Unavailable

திருப்பரங்குன்றம், அக். - 30 - திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணியசுவாமி கோயிலில் கந்தசஷ்டி திருவிழாவை முன்னிட்டு நாளை நடக்கும் சூரசம்ஹார லீலைக்காக இன்று மாலை வேல்வாங்கும் விழா நடக்கிறது. முருகப் பெருமானின் முதல் படைவீடு எனும் சிறப்பு பெற்ற அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த 26 ம் தேதி காப்புகட்டுதலுடன் தொடங்கியது. ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் காப்பு கட்டிக் கொண்டு கோயில் மண்டபங்களில் தங்கி விரதமேற்கொண்டு வருகின்றனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரம் நாளை நடக்கிறது. அதன் முன் நிகழ்ச்சியாக இன்று வேல்வாங்குதல் நடக்கிறது. அதை முன்னிட்டு மாலை 6 மணியளவில் சுப்பிரமணியசுவாமி, தெய்வானைக்கு அபிஷேக ஆராதனைகள் முடிந்து சிவபெருமான் கோவர்த்தனாம்பிகை அம்பாளுடன் சுப்பிரமணியசுவாமி கம்பத்தடி மண்டபத்தில் எழுந்தருள்வார். அங்கு கோவார்த்தனாம்பிகை அம்பாளிடம் நவரத்தின வேல் சகல விருதுகளுடன் பெற்று நந்தியை வலம் வந்து சுப்பிரமணிய சுவாமி திருக்கரத்தில் சேர்ப்பிக்கப்படும். இரவு 7 மணிக்கு முருகப் பெருமான், தெய்வானை அம்மன் பூப்பல்லக்கில் எழுந்தருளி திருவாச்சி மண்டபத்தில் ஆறுமுறை வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பர்.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 2 weeks ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 5 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 6 days ago