முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலமோசடி வழக்கில் எடியூரப்பாவுக்கு ஜாமீன்

வெள்ளிக்கிழமை, 4 நவம்பர் 2011      ஊழல்
Image Unavailable

பெங்களூர், நவ.4 - நில மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட கர்நாடக முன்னாள் முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு கர்நாடக ஐகோர்ட்டு ஜாமீன் வழங்கியது. கர்நாடக மாநிலத்தில் பாரதிய ஜனதா கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு முதல்வராக இருந்த எடியூரப்பா நில மோசடி புகாரில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் அரசுக்கு சொந்தமான நிலங்களை தனது மகன்கள் மற்றும் மருமகனுக்கு குறைந்த விலையில் ஒதுக்கியதாக கூறப்படுகிறது.  இது தொடர்பான வழக்குகள் லோக் ஆயுக்தா நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இந்த கோர்ட்டில் எடியூரப்பா ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனுவை லோக் ஆயுக்தா நீதிமன்றம் ஏற்கனவே நிராகரித்துவிட்டது. அதனால் எடியூரப்பா கடந்த தீபாவளியை சிறையிலேயே கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.  இதையடுத்து எடியூரப்பா கர்நாடக ஐகோர்ட்டில் ஜாமீன் மனுவை தாக்கல் செய்தார். இந்த மனு மீதான விசாரணை நேற்று விசாரணைக்கு வந்தது. இதில் ஊழல் வழக்கில் எடியூரப்பாவுக்கு நீதிபதி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். ரூ. 5 லட்சம் ரொக்கம் செலுத்தி ஜாமீன் பெற்றுக்கொள்ளலாம் என்று நீதிபதி தெரிவித்தார். எடியூரப்பா மீது மற்ற வழக்குகள் இருப்பதால் அவர் சிறையில் இருந்து விடுதலை ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்