முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெயலலிதா உருவ பொம்மை எரிப்புக்கு வைகோ கண்டனம்

சனிக்கிழமை, 19 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, மார்ச் 19 - ஜெயலலிதா உருவ பொம்மையை எரித்தவர்களுக்கு வைகோ தனது கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார்.  இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:- நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தொகுதி உடன்பாடு மற்றும் பேச்சுவார்த்தைகளில் மற்றும் பேச்சுவார்த்தைகளில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழகம் மிகுந்த கண்ணியத்தையும், அமைதியான போக்கையும் கடைபிடித்து வருகிறது. லட்சக்கணக்கான தொண்டர்கள் கட்டுப்பாடுடன் நடந்து ம.தி.மு.க.விற்கு மக்கள் மத்தியில் நல்லெண்ணத்தையும், மதிப்பையும் ஏற்படுத்தி உள்ளனர். இந்நிலையில் தாம்பரத்திலும், தேனி மாவட்டத்திலும் நான்கு, ஐந்து பேர் ம.தி.மு.க.விற்கு அவப் பெயர் ஏற்படுத்தும் விதத்தில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதா உருவ பொம்மையை கொளுத்தியதற்கு வன்மையான கண்டனத்தை தெரிவிக்கிறேன். 

இத்தகைய செயல்களில் ம.தி.மு.க. தொண்டர்கள் ஈடுபடக் கூடாது என்பதை மிகவம் வலியுறுத்தி வேண்டுகிறேன். இவ்வாறு வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்