எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

திருமங்கலம்.- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சிக்னல் பழுதானதால் ஒரே தண்டவாளத்தில் செங்கோட்டை பாசஞ்சர் ரயில்கள் நேருக்கு நேர் சென்ற சம்பவம் தொடர்பாக ஸ்டேஷன் மாஸ்டர்கள் உள்ளிட்ட 3 பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.
மதுரையிலிருந்து செங்கோட்டை சென்றிடும் பாசஞ்சர் ரயில் நேற்று முன்தினம் மாலை திருமங்கலம் ரயில் நிலையம் வந்துள்ளது.அதே சமயம் செங்கோட்டை யிலிருந்து மதுரைக்கு சென்றிடும் பாசஞ்சர் ரயில் கள்ளிக்குடி ரயில் நிலையத்திற்கு வந்துள்ளது.இந்நிலையில் திருமங்கலம் பகுதியில் பெய்த மழையின் காரணமாக ரயில்களுக்கு சிக்னல் கொடுத்திடும் இயந்திரம் பழுதடைந்தது.இருப்பினும் திருமங்கலம் ரயில்நிலைய அதிகாரி முறையான அனுமதி பெற்று செங்கோட்டைக்கு சென்றிடும் பாசஞ்சர் ரயிலை விருதுநகர் மார்க்கத்தில் சென்றிட அனுமதியளித்துள்ளார்.இதையடுத்து மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயில் திருமங்கத்திலிருந்து கள்ளிக்குடி நோக்கி கிளம்பிச் சென்றுள்ளது.இதனிடையே கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் பணியில் இருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த நிலைய அதிகாரி திருமங்கலத்திலிருந்து ரயில் வருவதை அறிந்திடாமல் கள்ளிக்குடி ரயில் நிலையத்தில் நின்றிருந்த செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயிலை திருமங்கலம் நோக்கி சென்றிட தவறாக அனுமதி கொடுத்துள்ளார்.இதனை தொடர்ந்து திருமங்கலத்திலிருந்து கள்ளிக்குடி நோக்கி சென்ற மதுரை-செங்கோட்டை பாசஞ்சர் ரயிலும், கள்ளிக்குடியிலிருந்து திருமங்கலம் நோக்கி சென்ற சென்ற செங்கோட்டை-மதுரை பாசஞ்சர் ரயிலும் ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக வந்துள்ளது.
இதனை அப்பகுதியிலுள்ள ரயில்வே கேட்களில் பணியிலிருந்த கேட்கீப்பர்கள் கண்டறிந்து கள்ளிக்குடி மற்றும் திருமங்கலம் ரயில் நிலையங்களுக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து ஒரே தண்டவாளத்தில் நேருக்கு நேராக சென்று கொண்டிருந்த இருரயில்களையும் தொடர்பு கொண்ட நிலைய அதிகாரிகள் வாக்கிடாக்கிகள் மூலம் தொடர்பு கொண்டு உடனடியாக ரயிலை நிறுத்திடுமாறு எச்சரிக்கை விடுத்தனர்.இதனால் ரயில்கள் நேருக்கு நேர் மோதி பெரும் விபத்து ஏற்படுவது தவிர்க்கப்பட்டது.இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்ட மதுரை கோட்ட ரயில்வே அதிகாரிகள் நேற்று முன்தினம் இரவோடு இரவாக அதிரடி நடவடிக்கை எடுத்தனர்.அதன்படி ரயில்களை நேருக்கு நேராக சென்றிட அனுமதி கொடுத்த சிக்னல் கண்ட்ரோலர் முருகானந்தம்,திருமங்கலம் ஸ்டேஷன் மாஸ்டர் ஜெயக்குமார், கள்ளிக்குடி ஸ்டேஷன் மாஸ்டர் சிவ்சிங்மீனா ஆகிய மூன்று பேரும் உடனடியாக தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டனர்.மேலும் நேற்று காலை திருமங்கலம் மற்றும் கள்ளிக்குடி ரயில் நிலையங்களில் ரயில்வே உயரதிகாரிகள் அதிரடி ஆய்வு மேற்கொண்டு சம்பவத்தின் போது பணியிலிருந்து இதர ரயில்வே ஊழியர்கள் மற்றும் கேட்;கீப்பர்களிடம் விசாரணை நடத்தினார்கள்.
பயணிகள் போராட்டம்,சிக்னல் பழுது,வடமாநில ஸ்டேஷன் மாஸ்டரின் தவறான தகவல் தொடர்பு,விபத்தினை தடுத்து நிறுத்திய கேட்கீப்பர்கள்,பெரும் விபத்து தவிர்ப்பு உள்ளிட்ட பல்வேறு ஆய்வுகளை அதிகாரிகள் மேற்கொண்டு வரும் நிலையில் சம்பவம் தொடர்பாக ஸ்டேசன் மாஸ்டர்கள் உள்ளிட்ட 3பேர் தற்காலிக பணிநீக்கம் செய்யப்பட்டுள்ள நிகழ்வு ரயில்வே ஊழியர்களிடையே பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 2 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 06-07-2025.
06 Jul 2025 -
குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலி
06 Jul 2025ஜம்மு : ஜம்மு-காஷ்மீரில் துப்பாக்கியில் இருந்து குண்டு பாய்ந்து ராணுவ வீரர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னை-தூத்துக்குடி விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு
06 Jul 2025சென்னை : தொழில்நுட்ப கோளாறு காரணமாக சென்னையில் இருந்து தூத்துக்குடி புறப்பட வேண்டிய ஸ்பைஸ்ஜெட் விமானத்தின் புறப்பாடு தாமதமாகியுள்ளது.
-
இஸ்ரேல் ராணுவம் தாக்குதல்: காசாவில் 33 பேர் உயிரிழப்பு
06 Jul 2025காசா : காசாவில் இஸ்ரேல் ராணுவம் தாக்குதலில் 33 பேர் உயிரிழந்தனர்.
-
டெக்சாஸ் வெள்ளம் - 51 பேர் பலி
06 Jul 2025டெக்சாஸ் : அமெரிக்காவில், வெள்ளத்தில் சிக்கி, 15 குழந்தைகள் உட்பட 43 பேர் உயிரிழந்தனர். முகாமில் இருந்து 27 பெண்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளனர்.
-
அமெரிக்கா: துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி
06 Jul 2025இண்டியானா : அமெரிக்காவின் இண்டியானா போலீஸ் பகுதியில் துப்பாக்கி சூடு சம்பவம் நடந்தது. அங்கு அதிகாலையில் சில சிறுவர்கள் இடையே மோதல் ஏற்பட்டது.
-
வருமான சமத்துவத்தில் உலக அளவில் 4-ம் இடம் பிடித்த இந்தியா
06 Jul 2025புதுடெல்லி : வருமான சமத்துவத்தின் அடிப்படையில் உலகளவில் நான்காவது நாடாக இந்தியா மாறியுள்ளதாக உலக வங்கி தெரிவித்துள்ளது.
-
தெலுங்கானாவில் இனி 10 மணி நேர வேலை: மாநில அரசு அறிவிப்பு
06 Jul 2025ஹைதராபாத் : தெலுங்கானாவில் வணிக நிறுவனங்களுக்கான தினசரி வேலை நேரம் 10 மணி நேரமாக உயர்த்தப்பட்டுள்ளது.
-
வரும் ஆகஸ்டு 15-ம் தேதி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு
06 Jul 2025நெல்லை : தமிழக சட்டசபை தேர்தலையொட்டி நெல்லையில் பா.ஜ.க.வின் முதல் மாநாடு ஆகஸ்டு 15-ந்தேதி நடைபெறும் என அக்கட்சி அறிவித்து உள்ளது.;
-
90-வது பிறந்த நாள்: புத்த மத துறவி தலாய் லாமாவுக்கு பிரதமர் வாழ்த்து
06 Jul 2025புதுடெல்லி : தலாய் லாமாவின் நீடித்த உடல் ஆரோக்கியம் மற்றும் நீண்டகால வாழ்க்கைக்காக நாங்கள் வேண்டி கொள்கிறோம் என்று பிரதமர் மோடி பதிவிட்டு உள்ளார்.
-
பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை : தொல். திருமாவளவன் கணிப்பு
06 Jul 2025திருச்சி : பா.ம.க. இரண்டாக பிரிய வாய்ப்பே இல்லை என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் தெரிவித்துள்ளார்.
-
பாகிஸ்தானில் சோகம்: அடுக்குமாடி இடிந்து 27 பேர் பலி
06 Jul 2025லாகூர் : பாகிஸ்தான் நாட்டின் லாகூரில் அடுக்குமாடி குடியிருப்பு இடிந்து விபத்துக்குள்ளானதில் கட்டிட இடிபாடுகளுக்குள் சிக்கி 9 பெண்கள் உள்பட 27 பேர் உயிரிழந்தனர்.
-
மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது: நிதின் கட்கரி வருத்தம்
06 Jul 2025நாக்பூர் : வல்லரசுகளின் சர்வாதிகாரத்தால் மக்களிடையே அன்பு மறைந்து வருகிறது என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
-
பிரேசில் சென்றார் பிரதமர் மோடி: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பு
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : 17-வது பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக பிரதமர் மோடி பிரேசில் சென்றார்.
-
பீகார் மாநிலத்தில் 3 கோடி வாக்காளர்கள் நீக்கப்படும் அபாயம்: சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு பதிவு
06 Jul 2025புதுடில்லி : பீகாரில் சுமார் 3 கோடிக்கும் மேற்பட்ட வாக்காளர்கள் வாக்குரிமையை இழக்கும் அபாயம் இருப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டள்ளதொரு பொதுநல மனுவில் குற
-
ரஷ்யா, சீனா நிதி அமைச்சர்களுடன் நிர்மலா சீதாராமன் பேச்சுவார்த்தை
06 Jul 2025ரியோ டி ஜெனிரோ : பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு அளித்த ஆதரவிற்கு நன்றி தெரிவிப்பதாக நிர்மலா சீதாராமன் கூறினார்.
-
மேல்விஷாரத்தில் வரும் 10-ம் தேதி ஆர்ப்பாட்டம்: அ.தி.மு.க. அறிவிப்பு
06 Jul 2025சென்னை: மேல்விஷாரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் தரமான மருத்துவ சிகிச்சையை அளிப்பதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி வரும் ஜூலை 10 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நட
-
நாமக்கல் அருகே ரயில் முன் பாய்ந்து ஆர்.டி.ஓ., மனைவி தற்கொலை
06 Jul 2025நாமக்கல்: திருச்சி வட்டாரப் போக்குவரத்து அலுவலரும் அவரது மனைவியும் நாமக்கல் அருகே ரயில்முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம்
06 Jul 2025சென்னை: மகளிர் உரிமைத் தொகை பெற இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
-
ஒடிசா, புரி ஜெகநாதரை தரிசிக்க குவிந்த லட்சக்கணக்கான பக்தர்கள்
06 Jul 2025புவனேஸ்வர் : தங்க அங்கி அலங்காரத்தில் ஜொலிக்கும் தெய்வங்களை தரிசனம் செய்வதற்காக பல லட்சம் பக்தர்கள் புரி நகரில் குவிந்தனர்.
-
30-ம் தேதி விண்ணில் பாய்கிறது நிசார் செயற்கைக்கோள்: இஸ்ரோ
06 Jul 2025சென்னை: நிசார் செயற்கைக்கோளை வருகிற 30-ம் தேதி விண்ணில் ஏவ விஞ்ஞானிகள் திட்டமிட்டு உள்ளனர்
-
பா.ம.க. நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி நீக்கம்: ராமதாஸ் அதிரடி
06 Jul 2025திண்டிவனம்: பா.ம.க. தலைமை நிர்வாக குழுவில் இருந்து அன்புமணியை நீக்கம் செய்து ராமதாஸ் நடவடிக்கை எடுத்துள்ளார்.
-
கவாஸ்கரின் 54 ஆண்டுகால சாதனையை முறியடித்த கில்
06 Jul 2025பர்மிங்காம்: இந்திய அணியின் கேப்டன் ஷுப்மன் கில் அதிக ரன்கள் குவித்து இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கரின் சாதனையை முறியடித்துள்ளார்.
-
அரசு பங்களாவை காலி செய்யாதது ஏன்? முன்னாள் நீதிபதி சந்திரசூட் விளக்கம்
06 Jul 2025புதுடெல்லி: தான் அரசு பங்களாவை காலி செய்யாததற்கான காரணத்தை சுப்ரீம் கோர்ட் முன்னாள் தலைமை நீதிபதி சந்திரசூட் விளக்கியுள்ளார்.