எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
சென்னை : மதுரை மாவட்டம் டி.குன்னத்தூரில் அமையப் பெற்றுள்ள அம்மா கோவில் திறப்பு விழாவிற்கு குடும்பம், குடும்பமாக வாருங்கள் என்று நேற்று சென்னையில் நடந்த அம்மா பேரவை ஆலோசனை கூட்டத்தில் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் வளர்ச்சிக்காகவும், தமிழக மக்களின் நலனுக்காகவும், தன்னையே அர்ப்பணித்து தவவாழ்வு வாழ்ந்து மக்கள் அனைவரது இதயங்களிலும் நிரந்தரமாக வீற்றிருக்கும் புரட்சித் தலைவி அம்மா அவர்களின் 73-ஆவது பிறந்த நாளை கழக அம்மா பேரவையின் சார்பில் எழுச்சியுடன் கொண்டாடுவது சம்பந்தமாக, கழக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்றது.
அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி.உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், அ.தி.மு.க. கட்சியின் ஒருங்கிணைப்பாளர் தமிழக துணை முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கலந்துகொண்டு அம்மா அவர்களின் பிறந்த நாளை ஏழை, எளியோர் பயன்பெறும் வகையில் சிறப்பாகக் கொண்டாடுவது சம்பந்தமாகவும், விரைவில் நடைபெற உள்ள சட்டமன்றப் பொதுத் தேர்தலில், அம்மா பேரவை நிர்வாகிகள் துடிப்புடன் களப்பணி ஆற்றுவது குறித்தும் ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில், தலைமைக் கழக நிர்வாகிகள், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவையின் மாநில துணை நிர்வாகிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கருத்துரை வழங்கினார்கள்.
இக்கூட்டத்தில் கழக அம்மா பேரவையின் மாவட்டச் செயலாளர்களும், மாவட்ட நிர்வாகிகளும் கலந்துகொண்டனர்.
அம்மா பேரவையின் சார்பில் தலைமைக் கழகத்தில் நேற்று நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தை முன்னிட்டு, தலைமைக் கழக நுழைவு வாயிலில் முகப்பு அமைக்கப்பட்டு, செண்டை மேளம் முழங்க, சாலைகளின்
இரு மருங்கிலும் கழகக் கொடித் தோரணங்களும், குருத்தோலைகளும் அழகுற அமைக்கப்பட்டு, விழாக் கோலம் பூண்டிருந்தது.
இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும், அம்மா பேரவைச் செயலாளரும், மதுரை புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், வருவாய், பேரிடர் மேலாண்மை மற்றும்
தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சருமான ஆர்.பி. உதயகுமார் செய்திருந்தார்.
இந்த கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வறுமாறு:-
வருகின்ற 30.01.2021 சனிக்கிழமை அன்று பாரத ரத்னா எம்.ஜி.ஆர். அவர்களுக்கும், தமிழர் குலச்சாமி புரட்சித் தலைவி இதயதெய்வம் அம்மா அவர்களுக்கும், மதுரை மாவட்டம், திருமங்கலம் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட, கூ.கல்லுப்பட்டியில் உள்ள டி.குன்னத்தூரில் அமையப்பெற்றுள்ள தமிழர் குலச்சாமி அம்மாவின் திருக்கோவில் திறப்பு விழாவிற்கு முதலமைச்சர் எடிப்பாடியார் அவர்களும், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் அவர்களும் நேரில் வருகைதந்து, தங்களது பொற்கரங்களால் “அம்மா ஆலயத்தை திறந்து வைத்து” புரட்சித்தலைவர், புரட்சிதலைவியின் திருவுருவ சிலைகளுக்கு மாலை அணிவித்து, வழிபட்டு வணங்கி நல் ஆசி பெற்று, நலத்திட்ட உதவிகள் வழங்கி சிறப்பிக்கும் இவ்விழாவில் அமைச்சர் பெருமக்கள், தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், மாவட்ட கழக நிர்வாகிகள், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கிளைக்கழக, ஒன்றிய கழக, பேரூர் கழக, நகர கழக, உள்ளிட்ட அனைத்து நிலைகளிலும் தொண்டாற்றி வருகின்ற அம்மாவின் தூய தொண்டர்கள் அனைவரையும் குடும்பம் குடும்பமாக, பங்கேற்க செய்வதோடு கழகம் தொடங்கிய காலத்திலிருந்து கழகத்திற்கு தொண்டாற்றி வருகின்ற கழகத்தின் மூத்த தொண்டர்களின் உழைப்பை கௌரவிக்கும் விதமாக, 234 தொகுதிகளிலும், மாவட்டக் கழகங்களின் மூலம், கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை சார்பில் மூத்த கழகத் தொண்டர்களை தேர்வு செய்து, அவர்களுக்கு குடும்ப நல நிதி, திருவிளக்கு உள்ளிட்ட பாராட்டு பரிசுகளையும் வழங்கி, தன்னலமற்ற ஊழைப்பினை வாழ்த்தி, பொன்னாடையும், மாலையும் அணிவித்து, சிறப்பு செய்திவுடம் ஆலயத்தினை திறந்துவைத்து இருபெரும் தலைவர்களின் திருவுருவச் சிலைகளுக்கு மாலை அணிவித்து, நாள்தோறும் வழிபாடு நடத்தி அருளாசி பெற்றிடவும், வரலாறு படைக்கின்ற வகையில் இவ்விழாவினை சிறப்பாக நடத்திடுவோம்.
தமிழர்குலச்சாமி அம்மா அவர்களின் 73-வது பிறந்த தின நன்நாளை முன்னிட்டு நாடெங்கும் விளையாட்டுப் போட்டிகள், மரம் நடுவிழா, மருத்துவ முகாம், ரத்த தானம், கண் தானம், உடல் தானம், அன்னதானம், பசுதானம் உள்ளிட்ட தான தருமங்களையும், நலத்திட்ட உதவிகளையும் அம்மா அவர்களின் திருப்பெயரிலே நாளெல்லாம் நாட்டுமக்களுக்கு வழங்கி, அம்மாவின் புகழை அழியாப் புகழாக நீடித்த புகழலாக, நிலைத்தப் புகழாக, இந்த வான் உள்ளவரை, இந்த பூமி உள்ளவரை, இந்த வையகம் உள்ளவரை எந்நாளும் கட்டிக் காத்திட கழக புரட்சித் தலைவி அம்மா பேரவை உறுதி ஏற்கிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 12 months 4 days ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 1 year 5 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 1 year 3 weeks ago |
-
அரசு மாணவர் விடுதியில் ராகிங்: எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம்
23 Sep 2025சென்னை : அரசு மாணவர் விடுதியில் நடந்த ராகிங் செயலுக்கு எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
‘இந்தியா ஏ’ கேப்டன் பொறுப்பில் இருந்து ஷ்ரேயஸ் ஐயர் திடீர் விலகல்
23 Sep 2025லக்னோ : ஆஸ்திரேலியா ஏ அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்தியா ஏ அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ஷ்ரேயஸ் ஐயர் விலகியுள்ளார்.
-
காய்த்த மரம்தான் கல்லடி படும்: விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் பதில்
23 Sep 2025சென்னை : காய்த்த மரம்தான் கல்லடி படும் என்று விஜய் விமர்சனத்திற்கு அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.
-
யூத புத்தாண்டு: ஜனாதிபதி முர்மு வாழ்த்து
23 Sep 2025டெல்லி : ஜனாதிபதி திரெளபதி முர்மு யூத புத்தாண்டு வாழ்த்து தெரிவித்தார்.
-
அமித்ஷா சொல்படி நடக்கும் அ.தி.மு.க.: மார்க்சிஸ் மாநில செயலாளர் விமர்சனம்
23 Sep 2025சென்னை : பா.ஜ.க.தான் அ.தி.மு.க.வை வழி நடத்துகிறது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்டு மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்தார்.
-
இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிவு: உ.பி. முதல்வர்
23 Sep 2025லக்னோ : இந்து மதத்தினரின் மக்கள் தொகை 30 கோடியாக சரிந்ததாக யோகி ஆதித்யநாத் தெரிவித்தார்.
-
2 டெஸ்ட் போட்டி தொடர்: வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான இந்திய அணி இன்று அறிவிப்பு
23 Sep 2025மும்பை : வெஸ்ட் இண்டீஸ் தொடருக்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
அகமதாபாத்தில்...
-
துணைவேந்தர் நியமன விவகாரம்: மத்திய அரசு, கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவு
23 Sep 2025புதுடெல்லி : துணைவேந்தர் நியமன விவகாரத்தில் மத்திய அரசு கவர்னரின் செயலாளர் பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
H-1B விசா கட்டண உயர்வில் மருத்துவர்களுக்கு விலக்களிக்க பரிசீலனை
23 Sep 2025நியூயார்க் : எச்-1பி விசா கட்டண உயர்வில் டாக்டர்களுக்கு விலக்கு அளிக்க அமெரிக்கா பரிசீலனை செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
-
தினேஷ் கார்த்திக் நியமனம்
23 Sep 2025ஹாங் காங் சிக்ஸ் தொடரில் இந்திய அணி கேப்டனாக தினேஷ் கார்த்திக் நியமிக்கப்பட்டுள்ளார்.
-
மாணவர்களுக்கு தயார்நிலையில் 2-ம் பருவம் பாடப்புத்தகங்கள் : பள்ளிக்கல்வி இயக்குனர் தகவல்
23 Sep 2025சென்னை : பள்ளி மாணவர்களுக்கு 2-ம் பருவம் பாடப்புத்தகம் தயார் என்று பள்ளிக்கல்வி இயக்குனர் தெரிவித்துள்ளார்.
-
மும்மொழி கொள்கை விவகாரம்: அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி
23 Sep 2025திண்டுக்கல் : மும்மொழி கொள்கை விவகாரம் குறித்து அமைச்சர் அன்பில் மகேஷ் கேள்வி எழுப்பி உள்ளார்.
-
கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் வரவேற்பு
23 Sep 2025கோபி : கோபிசெட்டிபாளையத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
-
வளர்ப்பு நாயின் நகக் கீறல்: ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் பலி
23 Sep 2025அகமதாபாத் : வளர்ப்பு நாயின் நகக் கீறலில் ரேபிஸ் தாக்கி காவல் ஆய்வாளர் உயிரிழந்தார்.
-
அமெரிக்க வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் சந்திப்பு
23 Sep 2025நியூயார்க் : அமெரிக்க வெளியுறவு மந்திரியுடன் ஜெய்சங்கர் சந்தித்து பேசினார்.
-
திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச் சாலை டிசம்பர் 25-ல் திறப்பு
23 Sep 2025மதுரை : திருமங்கலம் - வடுகப்பட்டி நான்கு வழிச்சாலை டிசம்பர் மாதம் திறக்கப்படும் என்று நெடுஞ்சாலை துறை தெரிவித்துள்ளது.
-
13- வது ஐ.சி.சி. மகளிர் ஒருநாள் உலக கோப்பை வெல்வதே எங்கள் இலக்கு: சினே ரானா
23 Sep 2025மும்பை : இந்திய அணிக்கு உலக கோப்பையை வென்று கொடுக்க வேண்டும் என்பதே எங்களது நோக்கம் என்று இந்திய வீராங்கனை சினே ரானா தெரிவித்து உள்ளார்.
-
கனமழை எதிரொலி: மேற்குவங்கத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
23 Sep 2025கொல்கத்தா : மேற்கு வங்கத்தில் கனமழை எதிரொலியால் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடுக்கப்பட்டுள்ளது.
-
ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் தி.மு.க. ஆட்சி கொண்டாடப்படுகிறது : அமைச்சர் சேகர் பாபு பெருமிதம்
23 Sep 2025சென்னை : ஆத்திகர்களாலும், நாத்திகர்களாலும் திமுக ஆட்சி கொண்டாடப்படுகிறது என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
-
மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ரிஷப் விளையாடுவது சந்தேகம்
23 Sep 2025மும்பை : இந்திய டெஸ்ட் அணியின் துணை கேப்டனும், விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த், சொந்த மண்ணில் நடைபெறும் மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடமாட்டா
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-09-2025.
24 Sep 2025 -
ரஷ்ய அதிபர் புதினுக்கு எதிராக இந்தியா மீது அதிக வரி விதிப்பு : மார்கோ ரூபியோ தகவல்
24 Sep 2025வாஷிங்டன் : அமெரிக்காவின் நெருங்கிய கூட்டாளி இந்தியா எனத் தெரிவித்துள்ள அந்நாட்டின் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ, விளாடிமிர் புதினுக்கு எதிராக இந்தியா மீது ட்ரம்ப்
-
ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் தீபாவளி போனஸ்: 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்
24 Sep 2025புதுடெல்லி, ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனசாக வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன்மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர்.
-
கோவை, தேனி உள்ளிட்ட 4 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்பு
24 Sep 2025சென்னை, தமிழகத்தில் வருகிற 30-ந்தேதி வரை மழைக்கு வாய்ப்பு என்று தெரிவித்துள்ள வானிலை ஆய்வு மையம், கோவை, தேனி உள்ளிட்ட
-
2021, 2022, 2023-ம் ஆண்டுகளுக்கான கலைமாமணி விருதுகள் அறிவிப்பு
24 Sep 2025சென்னை, திரைத்துறையில் நடிகர்கள் விக்ரம் பிரபு, எஸ்.ஜே.சூர்யா, சாய்பல்லவிக்கு கலைமாமணி விருது அறிவிக்கப்பட்டுள்ளது.