எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, செப்.9 - நடன இயக்குனர்கள் மற்றும் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்ஸி பேசி தீர்த்து வைக்க வேண்டும் என்று நடன இயக்குநர்கள் சங்க தலைவர் ரகுராம் நேற்று நிருபர்களிடம் கூறினார். இது குறித்து மேலும் அவர் கூறியதாவது:-
இயக்குனர்கள் சங்கம் கடந்த 1978 -ல் இருந்து செயல்பட்டு வருகிறது. இதில் நடன கலைஞர்களும் மற்றும் நடன இயக்குனர்களும் என்ற இரு பிரிவினரும் இணைந்து இருந்தனர். காரணம் இதில் தொழில் கொடுப்பவர்கள் நடன இயக்குனர்கள், தொழில் செய்பவர்கள் நடன கலைஞர்கள். 1978 -ல் இருந்து 1990 வரை இருபிரிவினரும் ஒரு பாடல் காட்சிக்கு ஒப்பந்த ஊதியத்தின் அடிப்படையில் தொழில் புரிந்துகொண்டு இருந்தோம். 1991 -க்கு பிறகு நடன கலைஞர்களுக்கு தினக்கூலி அடிப்படையில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் மூலம் ஊதியம் பெற்று தருவதென்று அன்றைய பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றபட்டது. அதை நடன இயக்குனர்கள் முழுமனதோடு ஒப்புக்கொண்டு இன்று வரை கடை பிடித்து வருகிறார்கள். சில காலங்களில் நடன கலைஞர்கள் அதிகபடியாக வளர்ந்து 10000 -ம் பேரும், நடன இயக்குனர்கள் 180 பேரும் என்ற நிலையில் இன்று எங்கள் சங்கத்தில் உள்ளனர். இதில் நூற்றுக்கும் மேற்பட்ட நடன இயக்குனர்கள் தங்களின் ஜீவாதார உரிமையான தொழில் மற்றும் அவர்களின் குடும்பத்துக்கு வேண்டிய மருத்துவ செலவு, குழந்தைகளுக்கு வேண்டிய கல்வி செலவு இவை அனைத்தையும் எதிர்கொள்ள முடியாத துர்பாக்கிய நிலைக்கு ஆளாகியுள்ளனர். அனைத்து நடன இயக்குனர்களும், தங்களுக்கு என்று ஒரு தனி குழுமம் அமைக்க வேண்டும் என்று கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக கோரிக்கை பலமுறை வைத்துள்ளனர். இவ்விஷயம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பெரிதாக வெடித்து இதில் பொறுப்புடன் எப்.இ.எப்.எஸ்.ஐ. தலையிட்டு அப்போதைய எப்.இ.எப்.எஸ்.ஐ. இன் தலைவர் பெப்சி விஜயன் முன்னிலையில் இனி வரும் காலங்களில் தலைவர், உப தலைவர் மற்றும் துணை செயலாளர் பதவியில் நடன இயக்குனர்களே இருக்க வேண்டும் என்று முடிவு செய்தார்.
இப்போதும் பெப்ஸியின் சட்ட திட்டங்களை பின் பற்றி வருகிறோம். எங்கள் நிலைபாட்டை பெப்சிவிற்கு அனுப்பினோம். இதை கண்ட அந்த சங்கம், இவிஷயத்தை உண்மைக்கு புறம்பாக மாற்றி எங்கள் மீது பல பழி சொற்களை கூறி நடன கலைஞர்களிடம் எங்களை பிளவுபடுத்தி மற்றும் பெப்சியிடமும் தவறான தகவல்களை கூறினார்கள். நடன கலைஞர்கள் சங்க பொறுப்பாளர்கள் மேலும் நடன இயக்குனர்களை அவமான படுத்த வேண்டும் என்ற எண்ணத்தில் ரகுராம், ஸ்விங்முரளி, பாபு, கந்தாஸ், ரவிதேவ் நிர்மல் சீனிவாசன் என பலரின் புகை படத்தை அச்சிட்டு அனைத்து சங்கங்களுக்கும் மற்றும் உறுப்பினர்களுக்கும் விநியோகம் செய்துள்ளனர். இவ்விஷயம் மூத்த நடன இயக்குனர்களுக்கு மிகுந்த மன உளைச்சலை உண்டாக்கி உள்ளது.
எங்கள் சங்கத்தின் விதிமுறை படி விதி எண்.15 -ன் கீழ் ஒருவர் மீது தொழில் ஒத்துழையாமை நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால் அவரை கடிதம் மூலம் பேரவைக்கு அழைத்து, தன்னிலை விளக்கம் அளிக்க ஒரு வாய்ப்பு அளித்து பேரவையின் ஒப்புதல் மூலம் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது நடைமுறை. இது கடைபிடிக்கபடவில்லை. இது பற்றி விவாதிக்க பெப்சி பேரவை கூடுகிறது என்று அறிந்து நாங்களும் அதில் கலந்து கொண்டு உங்கள் அனைவருக்கும் எங்கள் தன்னிலை விளக்கம் அளிக்க கடந்த 21.8.2012 அன்று கடிதம் மூலம் எப்.இ.எப்.எஸ். க்கு தெரிவித்தும் கூட எப்.இ.எப்.எஸ். எங்களில் யாவரையும் பேரவைக்கு அழைக்காமல் அந்த சங்கத்தின் வார்த்தைகளை நம்பி எங்கள் மீது நடவடிக்கை எடுக்க அவர்களும் ஒத்துழைத்து, அனைத்து சங்கங்களுக்கும் கடிதம் மூலம் தொழில் ஒத்துழையாமை என்று அறிவித்து உள்ளனர். இதுவரை அழைத்து என்னவென்று விசாரிக்காமல் பலமுறை நாங்கள் பெப்சிக்கும் எங்கள் சங்கத்திற்கும் கடிதம் அனுப்பியும், எங்கள் மீது சட்ட விரோதமாக நடவடிக்கை எடுத்துள்ளார்கள் என்பதை மன வருத்ததுடன் தெரிவித்து கொள்கிறோம். எங்கள் சங்கம் இது வரை எங்களை கடிதம் மூலமாக அழைத்து ஒருமுறை கூட பேசவில்லை.
இந்த நிலை நீடிக்காமல் நடன இயக்குனர்கள் நடன கலைஞர்கள் பிரச்சினையை பெப்சி அழைத்து பேசி தீர்க்க வேண்டும். இந்த பிரச்சினை குறித்து தமிழக அரசு மற்றும் தொழிலாளர் நல வாரியத்திடம் புகார் தெரிவித்தும் உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 10 months 11 hours ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 10 months 6 days ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 3 weeks ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 22-07-2025.
22 Jul 2025 -
கெவி திரை விமர்சனம்
22 Jul 2025அடிப்படை வசதி இல்லாத ஒரு மலை கிராமத்தில் நாயகன் ஆதவன் தனது கர்ப்பினி மனைவியுடன் வாழ்ந்து வருகிறான். அவனுக்கும் அங்குள்ள வனத்துறை அதிகாரிகளுக்கும் பிரச்சனை உருவாகிறது.
-
ஜென்ம நட்சத்திரம் விமர்சனம்
22 Jul 2025மணிவர்மன் இயக்கத்தில் தமன் குமார் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் ஜென்ம நட்சத்திரம்.
-
மணமகளுக்கு தங்கத்துடன் இலவச பட்டுச்சேலை: இ.பி.எஸ்., வாக்குறுதி
22 Jul 2025கும்பகோணம் : ''தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்துடன் மணமகளுக்கு இலவசமாக பட்டுச்சேலை வழங்கப்படும்'' என அ.தி.மு.க., பொதுச்செயலாளர் இ.பி.எஸ்., வாக்குறுதி அளித்துள்ளார்.
-
சீமானுக்கு 4 வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்க உத்தரவு
22 Jul 2025சென்னை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு, நான்கு வாரங்களில் புதிய பாஸ்போர்ட் வழங்கும்படி, மண்டல பாஸ்போர்ட் அதிகாரிக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவி
-
வெற்றி நடிக்கும் சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்
22 Jul 2025சின்னத்தம்பி புரொடக்சன் மகேஸ்வரன் தேவதாஸ் தயாரிப்பில் வெற்றி நடிப்பில் அனீஸ் அஸ்ரப் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் 'சென்னை பைல்ஸ் - முதல் பக்கம்.
-
ஜனாதிபதியுடன் மாநிலங்களவை துணை தலைவர் நாராயண் சந்திப்பு
22 Jul 2025டெல்லி : குடியரசு தலைவர் திரெளபதி முர்முவை மாநிலங்களவை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் செவ்வாய்க்கிழமை சந்தித்தார்.
-
ஆகஸ்ட் 1-ல் வெளியாகும் அக்யூஸ்ட்
22 Jul 2025உதயா, அஜ்மல், யோகிபாபு, ஜான்விகா உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் அக்யூஸ்ட்.
-
கூட்டணியில் இணைய இ.பி.எஸ். அழைப்பு: விஜய், சீமான் நிராகரிப்பு
22 Jul 2025சென்னை, கூட்டணியில் இணையுமாறு எடப்பாடி பழனிசாமி விடுத்த அழைப்பை த.வெ.க. தலைவர் விஜய்யும், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமானும் நிராகரித்துள்ளனர்.
-
அன்புமணியின் தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் 25-ம் தேதி தொடக்கம்
22 Jul 2025சென்னை : பா.ம.க. நிறுவனர் பிறந்த நாளை முன்னிட்டு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை அன்புமணி ராமதாஸ் வருகிற 25-ம் தேதி தொடங்கி வைக்கிறார்.
-
லோகேஷ் கனகராஜ் வழங்கும் Mr.பாரத்
22 Jul 2025பிரபல இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வழங்க, Passion ஸ்டூடியோஸ், ஜி ஸ்க்வாட், தி ரூட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் பாரத் & நிரஞ்சனின் “Mr.பாரத்” படத்தின் படப்பிடிப
-
தனிநபர் வருமானத்தில் தமிழகத்திற்கு 2-ம் இடம் : மத்திய அரசு தகவல்
22 Jul 2025புதுடெல்லி : தனிநபர் ஆண்டு வருமானத்தில் தமிழகம் 2-ம் இடம் பிடித்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
-
மும்பை குண்டுவெடிப்பு வழக்கு: மேல்முறையீடு செய்ய அரசு முடிவு
22 Jul 2025மும்பை, மும்பை குண்டுவெடிப்பு வழக்கு தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மகாராஷ்டிரா அரசு முடிவு செய்துள்ளது.
-
ரெட் ப்ளவர் படத்தின் இசை வெளியீட்டு விழா
22 Jul 2025ஸ்ரீகாளிகாம்பாள் பிக்சர்ஸ் சார்பில் கே.மாணிக்கம் தயாரிக்க, விக்னேஷ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் “ரெட் ப்ளவர்”.
-
குரூப்-4 தேர்வு விடைக்குறிப்பு வெளியீடு
22 Jul 2025சென்னை : குரூப்-4 தேர்வர்கள் விடைக்குறிப்பை டி.என்.பி.எஸ்.சி. வெளியிட்டது.
-
வங்கதேச விமானம் விபத்து: உயிரிழப்பு 27 ஆக அதிகரிப்பு
22 Jul 2025டாக்கா : வங்காளதேச விமான விபத்தில் சிக்கி விமானி மற்றும் மாணவர்கள் உள்பட பலியானவர்களின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது. இதில் 25 பேர் குழந்தைகள் ஆவர்.
-
குரூப் 4 மறுதேர்வு நடத்த வேண்டும்: எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்
22 Jul 2025சென்னை : குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என அ.தி.மு.க பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
-
குரூப்-4 தேர்வு விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்தி: டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு
22 Jul 2025சென்னை, குரூப்-4 விடைத்தாள் பெட்டிகள் பிரிக்கப்பட்டதாக வெளியான செய்திக்கு டி.என்.பி.எஸ்.சி. மறுப்பு தெரிவித்துள்ளது.
-
மெட்ரோ ரயிலில் பயணிக்க ஆக.1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம்
22 Jul 2025சென்னை : மெட்ரோ ரயிலில் பயணிக்க 1-ம் தேதி முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
-
மீண்டும் ரூ.74 ஆயிரத்தை தாண்டியது தங்கம் விலை
22 Jul 2025சென்னை : சென்னையில் நேற்று ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.105 உயர்ந்து, ஒரு கிராம் ரூ.9,285-க்கு விற்பனையானது.
-
பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்பட 10 பிராந்திய மொழிகளில் வெளியீடு
22 Jul 2025புதுடெல்லி : பாராளுமன்ற அலுவல் பட்டியல் தமிழ் உள்ளிடட் 10 பிராந்திய மொழிகளில் வெளியிடப்பட்டுள்ளது.
-
முறியடிக்கப்படாத சாதனை
22 Jul 2025இந்திய ஒலிம்பிக் சங்கத்தின் தலைவராக பி.டி உஷா, 61, இருக்கிறார். இவர் தடகள வீராங்கனை ஆவர். பல்வேறு சாதனைகளை நிகழ்த்தி அசத்தி உள்ளார்.
-
ஜப்பான்: பாராளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வி
22 Jul 2025டோக்கியோ : ஐப்பானில் நாடாளுமன்ற மேல்சபை தேர்தலில் ஆளுங்கட்சி தோல்வியடைந்துள்ளது.
-
வரும் 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு: சபரிமலையில் தரிசனத்திற்கான முன்பதிவுகள் தொடங்கியது
22 Jul 2025தேனி : சபரிமலையில் வருகிற 30-ம் தேதி நிறைபுத்திர சிறப்பு வழிபாடு தரிசனத்திற்கு முன்பதிவுகள் தொங்கின.
-
துணை ஜனாதிபதி தன்கரின் ராஜினாமா ஏற்பு
22 Jul 2025புதுடெல்லி, குடியரசு துணைத் தலைவர் ஜெகதீப் தன்கரின் ராஜினாமாவை குடியரசு தலைவர் திரவுபதி முர்மு ஏற்றுக்கொண்டதாக நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.