எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
Source: provided
புதுடெல்லி : கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு அரசு நேரடியாக பொறுப்பேற்க முடியாது என்றும், தடுப்பூசி காரணமாக ஏற்படும் இறப்பிற்கு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்வதன் மூலம் இழப்பீடு கோர முடியாது என்று மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளது.
கொரோனா நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா தடுப்பூசியை செலுத்திக்கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான பின் விளைவுகளால் இறந்ததாகக் கூறப்படும் 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சிறுமிகளின் பெற்றோரின் சார்பில் சுப்ரீம் கோர்ட் தாக்கல் செய்யப்பட்ட மனுவுக்கு மேற்கண்டவாறு பதிலளித்துள்ளது மத்திய அரசு.
கடந்த 2019 இறுதியில் கொரோனா நோய்த்தொற்று உலகம் முழுவதும் பரவி கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகள் மக்களை அச்சுறுத்தி வந்தது. பாதுகாப்பு வழிமுறைகள், பொதுமுடக்கம் போன்ற கட்டுப்பாடுகள் வழிமுறைகளை பின்பற்றி வந்ததன் மூலமாகவும், கொரோனா தடுப்பூசி செலுத்துக்கொண்டதன் மூலமாகவும் தொற்று பரவல் கட்டுப்பாட்டுக்கு வந்தது. அதே சமயம் தடுப்பூசி எடுத்துக்கொண்ட சிலர் இறந்தனர். பலர் பாதிக்கப்பட்டனர். லட்சத்திற்கு சிலருக்கு இம்மாதிரியான பாதிப்புகள் நிகழ்ந்தது.
இந்த நிலையில் கடந்த 2021 ஆம் ஆண்டு இரண்டு தவணை கொரோனா தடுப்பூசி செலுத்திக்கொண்ட பிறகு 19 மற்றும் 20 வயதுடைய இரண்டு சிறுமிகள் இறந்தனர். இதையடுத்து அவரது பெற்றோர்கள் சார்பில் சுப்ரீம் கோர்ட் வழக்கு தொடரப்பட்டது. மனுவில், கொரோனா தடுப்பூசியால் ஏற்படும் இறப்புகள் குறித்து சுதந்திரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும், தடுப்பூசிக்குப் பிறகு ஏதேனும் பின்விளைவுகள் ஏற்படுமானால் உரிய நேரத்தில் கண்டறிந்து தடுப்பு நடவடிக்கைகளை எடுப்பதற்கான மருத்துவ குழுவினை அமைக்க வேண்டும் என கோரிக்கையாக வைத்திருந்தனர்.
இந்த வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், மத்திய அரசிடம் கொரோனா தடுப்பூசி இறப்புகள் குறித்து விளக்கம் அளிக்குமாறு கேட்டிருந்தது. இந்நிலையில், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் பாதகமான விளைவுகளால் இறந்ததாகக் கூறப்படும் இரண்டு சிறுமிகளின் பெற்றோரின் மனுவுக்கு பதிலளிக்கும் வகையில் 276 பக்கங்கள் கொண்ட பிரமாணப் பத்திரத்தை மத்திய அரசு நேற்று சுப்ரீம் கோர்ட் தாக்கல் செய்தது.
அதில், "தடுப்பூசி செலுத்திக் கொண்ட ஒரு நபர் பாதகமான நிகழ்வுகள் காரணமாக உடலில் காயங்களோ அல்லது இறப்போ ஏற்பட்டால், தடுப்பூசி செலுத்திக் கொண்ட பயனாளி அல்லது அவரது குடும்பத்தினர், கவனக்குறைவு, முறைகேடு அல்லது தவறான செயல்களுக்கு சிவில் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து சேதம், இழப்பீடு கோரலாம். அதற்கு சட்டத்தில் பொருத்தமான தீர்வுகள் உள்ளன. அத்தகைய உரிமை கோரல் வழக்குகளுக்கு நீதிமன்றத்தில் வழக்கு அடிப்படையில் தீப்புகள் அளிக்கப்படலாம். ஆனால், கொரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதன் காரணமாக ஏற்பட்ட பாதகமான விளைவுகளால் ஏற்படும் இறப்புகளுக்கு மத்திய அரசு பொறுப்பேற்க முடியாது.
மேலும், மூன்றாம் தரப்பினரால் தயாரிக்கப்பட்ட தடுப்பூசிகள் வெற்றிகரமாக ஒழுங்குமுறை மறுஆய்வுக்கு உள்பட்டதாக தெரிவித்துள்ள மத்திய அரசு, நிகழும் மிகவும் அரிதான இறப்புகளுக்கு பொறுப்பேற்பது, குறுகிய நோக்கத்தின் கீழ் இழப்பீடு வழங்குவதற்கு நேரடியாகப் பொறுப்பாக்குவது சட்டப்பூர்வமாக நிலையானதாக இருக்காது மத்திய அரசு தெரிவித்துள்ளது. தேசிய கொரோனா தடுப்பூசி திட்டத்தின் கீழ் தகுதியான மக்களுக்கு தடுப்பூசி போடுவது தன்னார்வமானது என்றும் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது. மேலும், இறந்தோரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ள மத்திய அரசு, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என தெரிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 3 months ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 27-12-2025.
27 Dec 2025 -
புதுச்சேரியில் ரேசன் அட்டைதாரர்களுக்கு இலவச ஆடைகளுக்கு பதில் வங்கி கணக்கில் பணம் வரவு
27 Dec 2025புதுச்சேரி, இலவச ஆடைக்கு பதிலாக நேரடியாக ரேசன் அட்டைதாரர்களின் வங்கி கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் என்றும் பொங்கல் பண்டிகைக்கு ஆண்டுதோறும் வழங்கப்படும் 'இலவச ஆடை' வழங
-
2025-ல் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா: மத்திய வெளியுறவுத்துறை தகவல்
27 Dec 2025டெல்லி, 2025-ம் ஆண்டில் அதிகமான இந்தியர்களை நாடு கடத்தியது சவுதி அரேபியா தான் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
-
நாகப்பட்டினம் அருகே கரை ஒதுங்கிய ராக்கெட் வடிவிலான மர்ம பொருள்
27 Dec 2025நாகப்பட்டினம், நாகப்பட்டினத்தில் ராக்கெட் வடிவிலான மர்ம பொருள் கரை ஒதுங்கியதால் பரபரப்பு ஏற்பட்டது.
-
வரும் சட்டசபை தேர்தலில் ஆண்டிப்பட்டியில் போட்டி: டி.டி.வி. தினகரன் அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ஆண்டிப்பட்டியில் போட்டியிடுவேன் என்று டி.டி.வி. தினகரன் அதிரடியாக அறிவித்தார்.
-
ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு இனி ஆதார் அட்டை கட்டாயம்: ஐ.ஆர்.சி.டி.சி. அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் அட்டை கட்டாயம் என்று ஐ.ஆர்.சி.டி.சி. அதிரடியாக அறிவித்துள்ளது.
-
போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சி: அமெரிக்க அதிபர் ட்ரம்புடன் ஜெலன்ஸ்கி இன்று சந்திப்பு
27 Dec 2025உக்ரைன், புளோரிடா மாகாணத்தில் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி, அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) சந்தித்து பேசுகிறார்.
-
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலி
27 Dec 2025விருதுநகர், விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே வீட்டின் கேட் சரிந்து விழுந்து 2 சிறுமிகள் பரிதாபமாக பலியான சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியல்: முதலிடத்தில் டென்மார்க்; 96-வது இடத்தில் இந்தியா
27 Dec 2025புதுடெல்லி, ஊழல் அதிகம் உள்ள நாடுகளின் பட்டியலில் முதலிடத்தில் உள்ள டென்மார்கும், இந்தியா 96-வது இடத்தில் உள்ளது.
-
அரசு பேருந்துகளில் ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேர் கைது
27 Dec 2025சென்னை, அரசு பேருந்துகளில் ‘தமிழ்நாடு’ ஸ்டிக்கர் ஒட்டிய நாம் தமிழர் கட்சியினர் 22 பேரை போலீசார் கைது செய்தனர்.
-
மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு ஊழல் வழக்கில் 15 ஆண்டுகள் சிறை
27 Dec 2025கோலாலம்பூர், ஊழல் வழக்கில் மலேசியாவின் முன்னாள் பிரதமருக்கு 15 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
-
ஊரக வேலைவாய்ப்பு திட்டம்: ராகுல் காந்தி கடும் விமர்சனம்
27 Dec 2025டெல்லி, புதிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்துக்கு ராகுல் காந்தி கடும் எதிர்ப்பு தெரிவித்தார்.
-
இந்தியாவில் புழக்கத்தில் உள்ள போலி வெறிநாய்க்கடி தடுப்பூசி: ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை
27 Dec 2025சிட்னி, இந்தியாவில் வெறிநாய்க்கடிக்கு போலி தடுப்பூசிகள் புழக்கத்தில் இருப்பாத ஆஸ்திரேலிய அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
ஆந்திர மாநிலத்தில் 9 பேரை ஏமாற்றி திருமணம் செய்த கல்யாண ராணி கைது
27 Dec 2025ஸ்ரீகாகுளம், ஆந்திர மாநிலத்தில் 19 வயதில் 9 பேரை திருமணம் செய்து ஏமாற்றிய கல்யாண ராணியை போலீசார் கைது செய்தனர்.
-
இ.பி.எஸ். இன்று முதல் 7-ம் கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் துவக்கம்: திருப்போரூர் தொகுதியில் பிரச்சாரம்
27 Dec 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அடுத்தகட்ட சுற்றுப்பயணத்தை இன்று முதல் மீண்டும் தொடங்க உள்ளார்.
-
ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்பதே காங்., நிலைப்பாடு: செல்வப்பெருந்தகை பேட்டி
27 Dec 2025சென்னை, எங்களை பொறுத்தவரை இண்டியா கூட்டணியில் உறுதியாக இருக்கிறோம் என தெரிவித்துள்ள செல்வப்பெருந்தகை, காங்கிரசுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்றும் அவர
-
என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசவம் பார்த்தது திருமாவளவன்தான்: நாம் தமிழர் சீமான் பதிலடி
27 Dec 2025சென்னை, என்னை பா.ஜ.க. பெற்றெடுக்கும்போது பிரசம் பார்த்தது திருமாவளவன்தான் என்று சீமான் கூறினார்.
-
எல்லையில் நீடித்த மோதலுக்கு முற்றுப்புள்ளி: திடீர் போர்நிறுத்தத்தை அறிவித்த தாய்லாந்து-கம்போடியா அரசுகள்
27 Dec 2025பாங்காக், எல்லையில் உடனடியாக போர்நிறுத்தம் கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து-கம்போடியா அரசுகள் அறிவித்துள்ளன.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து சரிவு
27 Dec 2025மேட்டூர், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு சனிக்கிழமை காலை வினாடிக்கு 963 கனஅடியிலிருந்து வினாடிக்கு 836 கனஅடியாக சற்று குறைந்துள்ளது.
-
உக்ரைன் மீது ரஷ்யா திடீர் தாக்குதல்: 8 பேர் படுகாயம்
27 Dec 2025கீவ், உக்ரைன் மீது ரஷ்யா வான்வழி தாக்குதல் நடத்தியதில் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
-
பெண்களை புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது: கனிமொழி எம்.பி. பேச்சு
27 Dec 2025சென்னை, வாழ்க்கையை தீர்மானிக்கும் உரிமை இருப்பதை பெண்கள் புரிந்து கொண்டால் ஆணவக்கொலைகள் நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார்.
-
தி.மு.க. ஆட்சியில் விவசாயிகளுக்கு முன்னுரிமை; கனமழையால் பாதித்த பயிர்சேதங்களை கணக்கிட்டு விரைவில் நிவாரண உதவித்தொகை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்: திருவண்ணாமலை விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உறுதி
27 Dec 2025திருவண்ணாமலை, விவசாயத்திற்கும், விவசாயிகளுக்கும் முன்னுரிமை அளித்து செயல்படுவதில் திராவிட மாடல் அரசு முன்னோடி என்று தெரிவித்துள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், கனமழையால் பாத
-
தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்காக கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம்
27 Dec 2025சென்னை, தமிழ்நாட்டில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு கூடுதல் உதவி வாக்காளர் பதிவு அதிகாரிகள் நியமனம் செய்யப்பட உள்ளனர்.
-
ராமநாதபுரத்தில் வரும் 30-ம் தேதி அ.தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம்: எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
27 Dec 2025சென்னை, ராமநாதபுரத்தில் வருகிற 30-ம் தேதி தி.மு.க. அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.


