எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Source: provided
அகமதாபாத் / ஷிம்லா: குஜராத்தில் வரலாற்று வெற்றியுடன் 7-வது முறை பா.ஜ.க ஆட்சியைப் பிடித்துள்ளது. இமாச்சலப் பிரதேசத்தை காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. 2022-ஆம் ஆண்டின் கடைசித் தேர்தலாக அமைந்துவிட்ட குஜராத் சட்டப்பேரவை, இமாச்சலப் சட்டப்பேரவை தேர்தலில் பா.ஜ.க.வும், காங்கிரஸும் தலா ஒரு வெற்றியோடு நிறைவு செய்துள்ளன.
குஜராத் - இமாச்சலில்...
மொத்தம் 182 உறுப்பினர்களைக் கொண்ட குஜராத் சட்டப்பேரவைக்கு 2 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. முதல் கட்டமாக 89 தொகுதிகளுக்கு கடந்த 1ம் தேதியும், 2ம் கட்டமாக 93 தொகுதிகளுக்கு கடந்த 5ம் தேதியும் வாக்குப்பதிவு நடைபெற்றது. முன்னதாக 68 உறுப்பினர்களைக் கொண்ட இமாச்சலப் பிரதேச சட்டப்பேரவைக்கு ஒரே கட்டமாக நவம்பர் 12ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
வாக்கு எண்ணிக்கை...
இரு மாநிலங்களிலும் வாக்குப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சீல் வைக்கப்பட்டு பத்திரமாக வைக்கப்பட்டிருந்தன. நேற்று அவை திறக்கப்பட்டு, பதிவான வாக்குகளை எண்ணும் பணி காலை 8 மணி முதல் தொடங்கியது. குஜராத்தில் 37 மையங்களில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. குஜராத்தில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி இடையே மும்முனைப் போட்டி உள்ளது. மொத்தமுள்ள 182 தொகுதிகளில் அனைத்துத் தொகுதிகளிலும் பாஜக போட்டியிட்டது. காங்கிரஸ் 179 தொகுதிகளிலும், அதன் கூட்டணி கட்சியான தேசியவாத காங்கிரஸ் 2 இடங்களிலும் போட்டியிட்டது. ஆம் ஆத்மி 181 தொகுதிகளில் போட்டியிட்டது.
கடந்த தேர்தலில்....
இந்நிலையில் குஜராத்தில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் பா.ஜ.க. பெரும்பான்யான தொகுதிகளில் முன்னிலையில் இருந்தது. இந்நிலையில் தேர்தல் முடிவுகள் பா.ஜ.க.வுக்கு அமோக வெற்றியை தந்துள்ளது. குஜராத்தைப் பொறுத்தவரை பா.ஜ.க. தனது சொந்த வரலாற்று சாதனையை உடைத்தது மட்டுமல்லாமல், புதிய வரலாற்றையும் படைத்துள்ளது. கடந்த 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு க்ளீன் ஸ்வீப் என்று சொல்லும் அளவிற்கு வெற்றி வாய்ப்பு அமையவில்லை. அதற்கு காரணம் தேர்தலுக்கு சமீபமாக நடந்து முடிந்திருந்த பட்டிதார் சமூகத்தினரின் இடஒதுக்கீடு போராட்டம். ஹர்திக் படேல் முன்னெடுத்த அந்தப் போராட்டம் பா.ஜ.க.வுக்கு எதிர்ப்பலைகளை உருவாக்கியது. அதனால் 99 இடங்களைக் கைப்பற்றியது.
வரலாற்று வெற்றி...
100-க்கும் கீழான தொகுதிகளில் மட்டுமே வெற்றி என்பது பா.ஜ.க. தனிப்பட்ட முறையில் சறுக்கலாகவே கருதியது. ஆனால், இந்த முறை வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது பா.ஜ.க.. கடந்த முறை வாக்குகள் சிதறக் காரணமாக இருந்த ஹர்திக் படேல் இந்த முறை பா.ஜ.க. வேட்பாளர். அந்த அளவுக்கு தேர்தல் உத்திகளை சிறப்பாக வகுத்து சொன்னபடியே வரலாற்று வெற்றியை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது.
வரலாற்றுச் சாதனை...
இதுவரை குஜராத் அரசியல் வரலாற்றில் பா.ஜ.க.வின் கோல்டன் பீரியட் என்றால், அது 2002-ல் அக்கட்சி 127 இடங்களைப் பிடித்ததுதான் சுட்டிக்காட்டப்பட்டு வந்தது. ஆனால் இப்போது 182 தொகுதிகளில் 156 தொகுதிகளை வசப்படுத்தி வரலாற்றுச் சாதனையை பா.ஜ.க. பதிவு செய்துள்ளது. குஜராத் தேர்தல் வரலாற்றில் இதற்கு முன்னதாக காங்கிரஸ் 1985-ல் 182 தொகுதிகளில் 149 தொகுதிகளைக் கைப்பற்றியதே அதிகபட்ச வெற்றியாக இருந்தது.
சூறாவளிப் பிரச்சாரம்...
குஜராத் தேர்தலுக்காக பிரதமர் மோடி தொடர்ச்சியாக பலகட்டப் பிரச்சாரங்கள், பேரணிகள், ரோட் ஷோக்கள் என்று சூறாவளிப் பிரச்சாரம் மேற்கொண்டார். உத்தரப் பிரதேசம், உத்தராகண்ட், பஞ்சாப், கோவா உள்ளிட்ட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் மூன்றில் வெற்றி பெற்ற பின்னர் அடுத்த நாள் அதற்கான வெற்றிப் பேரணியை மோடி குஜராத்தில் தான் நடத்தினார். உண்மையில் அவர் அப்போதே குஜராத் தேர்தலுக்கான முதல் பிரச்சாரத்தை ஆரம்பித்துவிட்டார். அதற்கான பலன் தற்போது கிடைத்துள்ளது.
பிரதமர் மோடி அலை...
'நான் உருவாக்கிய குஜராத்' என்று அவர் பிரச்சாரத்தைத் தொடங்கியபோது பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டன. ஆனால், எல்லாவற்றையும் தவிடுபொடியாக்கி மோடி அலை மங்கவில்லை. இன்னும் நாடாளுமன்றத் தேர்தலிலும் பா.ஜ.க.வின் முகமாக தாமே இருப்பேன் என்பதை அவர் நிரூபித்திருக்கிறார் என்று அரசியல் வல்லுநர்கள் கூறுகின்றனர்.
தேய்ந்துபோன காங்கிரஸ்: 2017 சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் 77 தொகுதிகளில் வெற்றி பெற்றது. ஆனால், காங்கிரஸ் கட்சியின் 14 எம்எல்ஏக்கள் பா.ஜ.க.விற்கு தாவினர். அதனால் அதன் பலம் சட்டப்பேரவையில் எடுபடவில்லை. இந்நிலையில், இந்தத் தேர்தலில் ஆரம்பம் முதலே காங்கிரஸ் களத்தில் இறங்கி வேலை செய்வதில் விறுவிறுப்பைக் காட்டவில்லை. தோல்வியை முன் கூட்டியே கணித்துக் கொண்டதுபோல் நாங்கள் அமைதியாக காய் நகர்த்துகிறோம் என்று பகிரங்கமாகவே அறிவித்தது. சொல்லப்போனால் 1985க்குப் பின்னர் காங்கிரஸ் குஜராத்தில் தொடர்ந்து தேய்ந்து கொண்டேதான் இருக்கிறது.
காலூன்றிய ஆம் ஆத்மி...
இந்தத் தேர்தலில் குஜராத்தில் ஆம் ஆத்மி தனது இருப்பை உறுதி செய்தவிதம் வரவேற்பைப் பெற்றுள்ளது. பா.ஜ.க.வை எதிர்த்து பிரதமர், உள்துறை அமைச்சரின் சொந்த மாநிலத்திலேயே அரவிந்த் கெஜ்ரிவாலும், பகவந்த் மானும் மேற்கொண்ட துணிச்சலான பிரச்சாரம் தான் அதற்கு 4 முதல் 7 தொகுதிகள் வரை கிடைக்கலாம் என்ற நிலையை உருவாக்கியுள்ளதாகக் கருதப்படுகிறது.
இமாச்சல்லில் காங்.,..
இமாச்சலப் பிரதேச தேர்தலைப் பொறுத்தவரை பா.ஜ.க.விடமிருந்து ஆட்சியைக் கைப்பற்றியுள்ளது காங்கிரஸ். கடந்த 2017 தேர்தலில் பா.ஜ.க. 44 என்ற எளிதான வெற்றியைப் பெற்றது. காங்கிரஸ் 21 தொகுதிகளில் மட்டுமே வென்றது. சிபிஎம் ஒரு தொகுதியிலும் சுயேட்சைகள் இருவரும் வென்றிருந்தனர். இந்தத் தேர்தலில் காங்கிரஸுக்கு வாய்ப்பு இருக்கிறது என்று சொல்லப்பட்டாலும் கூட ஆரம்பக்கட்ட முடிவுகள் ஒரு எளிதான வெற்றியை நோக்கி காங்கிரஸை இட்டுச் செல்லவில்லை.
39 தொகுதிகளில்...
நீண்ட இழுபறிக்குப் பின்னர் பிற்பகலில் இருந்தே காங்கிரஸின் வெற்றி உறுதியானது. காங்கிரஸ் 39 தொகுதிகளில் வெற்றி பெற்று அங்கு ஆட்சியை கைப்பற்றியுள்ளது. பா.ஜ.க. 26 தொகுதிகளில் வெற்றிப் பெற்றுள்ளது. சுயேட்சைகள் 3 தொகுதிகளில் வெற்றிப்பெற்றுள்ளனர். 68 சட்டப்பேரவைத் தொகுதிகள் கொண்ட இமாச்சலில் 35 தொகுதிகளில் வெற்றி பெற்றாலே போதும் ஆட்சி அமைக்க தேவையான பெரும்பான் கிடைத்துவிடும்.
காங்., எச்சரிக்கை...
இமாச்சலப் பிரதேசத்தில் மீண்டும் ஆட்சியை தக்கவைக்க பா.ஜ.க. சுயேட்சைகளின் ஆதரவைக் கோரலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூடவே, காங்கிரஸில் இருந்து தாவும் எம்எல்ஏக்கள் ஆதரவையும் திரட்டலாம் என்பதால், காங்கிரஸ் முன்னெச்சரிக்கையாக தனது எம்எல்ஏக்களை பத்திரப்படுவதாக தெரிகிறது. சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், ஹரியாணா முதல்வர் பூபீந்திர சிங் ஹூடாவிடம் இந்தப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
27 ஆண்டுகளாக....
குஜராத்தில் 1995ல் இருந்து பாஜக ஆட்சியில் இருந்து வருகிறது. 1995ல் அக்கட்சியின் கேசுபாய் படேல் முதல்வராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரை அடுத்து நரேந்திர மோடி அதிகபட்சமாக 12 ஆண்டுகள் 227 நாட்கள் அம்மாநிலத்தின் முதல்வராக இருந்துள்ளார். அவருக்கு அடுத்து ஆனந்தி பென் படேல் 2 ஆண்டுகள் 77 நாட்களும், விஜய் ரூபானி 5 ஆண்டுகள் 37 நாட்களும் முதல்வர்களாக இருந்துள்ளனர். பூபேந்திர படேல் சுமார் 15 மாதங்களாக முதல்வராக இருந்து வருகிறார். தற்போது 7-வது முறை அமோக வெற்றியுடன் குஜராத்தில் மீண்டும் பா.ஜ.க. ஆட்சி அமைக்கிறது.
BOX - 1
குஜராத் தேர்தல் (மொத்தம் - 189):
கட்சி தொகுதிகள்
1) பா.ஜ.க. 156
2) காங்கிரஸ் 17
3) ஆம் ஆத்மி 5
4) பிற 4
BOX - 2
இமாச்சல் தேர்தல் (மொத்தம் - 69):
கட்சி தொகுதி
1) காங்கிரஸ் 40
2) பா.ஜ.க. 25
3) பிற 3
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 3 weeks ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 3 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 2 weeks ago |
-
வரும் 16, 17-ம் தேதிகளில் 6 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு
13 Jul 2025சென்னை: தமிழகத்தில் வரும் 16, 17 தேதிகளில் சென்னை, திருவள்ளூர் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
-
ராணிப்பேட்டை அருகே சோகம்: குட்டையில் மூழ்கி 3 சிறுவர்கள் பலி
13 Jul 2025ராணிப்பேட்டை: குட்டையில் குளிக்கச் சென்ற 3 சிறுவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ராணிப்பேட்டையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 13-07-2025.
13 Jul 2025 -
புதுச்சேரி: புதிய அமைச்சராக ஜான்குமார் இன்று பதவியேற்பு
13 Jul 2025புதுச்சேரி : புதுச்சேரியில் புதிய அமைச்சராக பா.ஜ.க.வின் ஜான்குமார் இன்று பதவியேற்கிறார்.
-
இன்று கோலாகலமாக நடக்கிறது திருப்பரங்குன்றம் கோவில் கும்பாபிஷேகம்
13 Jul 2025திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இன்று (ஜூலை 14) அதிகாலை 5:25 மணி முதல் காலை 6:10 மணிக்குள் கும்பாபிஷேகம் நடக்கிறது.
-
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினரால் 7 மீனவர்கள் கைது
13 Jul 2025ராமேசுவரம் : எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி, தமிழக மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும், அவர்கள் சென்ற படகையும் பறிமுதல் செய்துள்ளனர்.
-
குற்றச்செயலில் ஈடுபட்டதாக அமெரிக்காவில் காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் கைது
13 Jul 2025வாஷிங்டன்: அமெரிக்காவில் குற்றச்செயலில் ஈடுபட்ட காலிஸ்தான் பயங்கரவாதி உட்பட 8 பேர் புலனாய்வு அமைப்பான எப்.பி.ஐ., அதிகாரிகள் கைது செய்தனர்.
-
உபரிநீர் வெளியேற்றம் நிறுத்தம்: மேட்டூர் அணையில் பாசனத்துக்கு நீர் திறப்பு
13 Jul 2025மேட்டூர்: மேட்டூர் அணையின் 16 கண் மதகுகள் வழியாக உபரிநீர் வெளியேற்றம் நேற்று காலை முதல் நிறுத்தப்பட்டுள்ளது.
-
இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 7 தமிழக மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் மத்திய அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
13 Jul 2025சென்னை: மீனவர்களையும் அவர்களது மீன்பிடி படகுகளையும் விரைவில் விடுவிக்க அவசர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.;
-
உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து ஜூலை 17-ல் அ.தி.மு.க. ஆர்ப்பாட்டம் : எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு
13 Jul 2025சென்னை : உத்திரமேரூர் பேரூராட்சியை கண்டித்து அ.தி.மு.க. சார்பில் வரும் ஜூலை 17-ம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.
-
இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட்: 9-வது முறையாக 2 அணிகளும் ஒரே ஸ்கோர்: இந்தியா சாதனை
13 Jul 2025லண்டன்: இந்தியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான லார்ட்ஸ் டெஸ்டில் முதல் இன்னிங்சில் இரு அணிகளும் 387 ரன் குவித்தது.
-
'சாமி' பட வில்லன் கோட்டா சீனிவாச ராவ் காலமானார் பிரதமர் மோடி இரங்கல்
13 Jul 2025ஐதராபாத்: நடிகர் கோட்டா சீனிவாச ராவ் (83) உடல் நலக்குறைவால் காலமானார். சில மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்று அதிகாலை உயிர் பிரிந்தது.
-
விமானம் 10 மணிநேரம் தாமதம்; மும்பை விமான நிலையத்தில் பயணிகள் திடீர் போராட்டம்
13 Jul 2025மும்பை: துபாய்க்கு செல்லவிருந்த ஸ்பைஸ்ஜெட் விமானம் 10 மணிநேரத்திற்கும் மேலாக தாமதமானதால் மும்பை விமன நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
-
காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் த.வெ.க. ஆர்ப்பாட்டம் - விஜய் பங்கேற்பு
13 Jul 2025சென்னை : திருப்புவனம் காவலாளி மரணத்துக்கு நீதி கேட்டு சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் த.வெ.க. தலைவர் விஜய் பங்கேற்றார்
-
இந்திய மாணவர் சேர்க்கை குறைவால் கனடா பல்கலை, கல்லுாரிகளில் வேலை இழந்த 10 ஆயிரம் பேர்..!
13 Jul 2025ஒன்டாரியோ: கனடா பல்கலை மற்றும் கல்லூரிகளில் இந்திய மாணவர்களின் சேர்க்கை வெகுவாக குறைந்ததால் நிதி நெருக்கடியில் சிக்கிய கல்வி நிறுவனங்கள் பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர
-
குற்றாலத்தில் சுற்றுலா பயணிகள் உற்சாக குளியல்
13 Jul 2025தென்காசி: வார விடுமுறை என்பதால் குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் உற்சாகமாக குளித்தனர்.
-
மாணவர்கள் போராட்டம்: ட்ரம்ப் மிரட்டலுக்கு அடிபணிந்த கொலம்பியா பல்கலைக்கழகம்..!
13 Jul 2025நியூயார்க்: பாலஸ்தீனத்தின் காசா முனை மீதான இஸ்ரேலின் போர் தாக்குதலை கண்டித்து அமெரிக்காவில் உள்ள பல்கலைக்கழகங்களில் மாணவர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர்.
-
நியமன எம்.பி. உஜ்வால் நிகாமுக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து
13 Jul 2025புதுடெல்லி : மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள உஜ்வால் நிகாமின் பணி பாராட்டத்தக்கது என பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்தி உள்ளார் .
-
மத்திய அமைச்சருக்கு கொலை மிரட்டல்
13 Jul 2025பாட்னா: மத்திய மந்திரி சிராக் பஸ்வானுக்கு சமூக வலைதளம் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
-
சுபான்ஷு சுக்லா இன்று பூமிக்கு திரும்புகிறார்..!
13 Jul 2025புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து இன்று பூமிக்கு திரும்புகிறார் சுபான்ஷு சுக்லா.
-
2-ம் கட்ட பிரச்சார சுற்றுப்பயணத்தை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி
13 Jul 2025சென்னை : மக்களைக் காப்போம்; தமிழகத்தை மீட்போம் பிரச்சார சுற்றுப்பயணத்தின் 2-ம் கட்ட சுற்றுப்பயண அட்டவணையை எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.
-
அதிக சிக்சர்: விவியன் ரிச்சர்ட்ஸ் சாதனையை தகர்த்த ரிஷப் பண்ட்
13 Jul 2025லண்டன்: டெஸ்ட் கிரிக்கெட்டில் இதுவரை 36 சிக்சர்கள் அடித்ததன் மூலம் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இங்கிலாந்துக்கு எதிராக அதிக சிக்சர்கள் அடித்த வீரர் என்ற விவியன் ரிச்சர்
-
சரக்கு ரெயிலில் தீ விபத்து: உயர்மட்ட விசாரணைக்கு இ.பி.எஸ். வலியுறுத்தல்
13 Jul 2025சென்னை: சரக்கு ரெயிலில் ஏற்பட்ட தீ விபத்து: உயர்மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும் என எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
-
யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் தி.மு.க.: உதயநிதி பெருமிதம்
13 Jul 2025திருவண்ணாமலை : தேர்தல் ரேசில் யாராலும் பிடிக்க முடியாத தூரத்தில் முதலிடத்தில் சென்று கொண்டு இருக்கிறோம் என்று துணை முதல்வர் உதயநிதி கூறி உள்ளார்.
-
இந்தியாவுக்கு எதிராக பாக்., அணு அயுதங்களை பயன்படுத்த திட்டமா? - பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் மறுப்பு
13 Jul 2025இஸ்லாமாபாத் : இந்தியா உடனான அண்மைய மோதலில் அணு ஆயுதத்தை பயன்படுத்தும் திட்டம் தங்களுக்கு அறவே இல்லை என பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் கூறியுள்ளார்.