எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஜுலை - 7 - ஏர்செல் தொலைத்தொடர்பு நிறுவனத்தை இன்னொரு தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு விற்பனை செய்ய கட்டாயப்படுத்தியதால் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது. 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் ரூ. 1.76 லட்சம் கோடிக்கு மத்திய அரசுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக மத்திய கணக்கு தணிக்கைக் குழு அறிக்கை அளித்ததின் அடிப்படையில் முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சர், தி.மு.க.வைச் சேர்ந்த ஆ.ராசா, அவரது முன்னாள் உதவியாளர்கள் சித்தார்த் பெகூரா, சந்தோலியா, ஸ்வான் டெலிகாம் அதிபர் ஷாகித் உஸ்மான் பல்வா, தி.மு.க. தலைவர் கருணாநிதியின் மகளும், கலைஞர் டி.வி.யின் பங்குதாரருமான கனிமொழி, கலைஞர் டி.வி.யின் நிர்வாக இயக்குனர் சரத்குமார் உள்பட 13 பேர் கைது செய்யப்பட்டு டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந்த ஊழல் வழக்கை சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பின்கீழ் மத்திய புலனாய்வுத் துறை நிறுவனமான சி.பி.ஐ. நடத்திவருகிறது. இந்த வழக்கில் ஏற்கனவே இரண்டு குற்றப்பத்திரிகைகள் டெல்லி சி.பி.ஐ. சிறப்பு நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் 2004 ம் ஆண்டுமுதல் 2007 ம் ஆண்டுவரை மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக இருந்த தி.மு.க.வைச் சேர்ந்த தயாநிதிமாறனும் ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகேடு செய்துள்ளதாக புகார்கள் எழும்பின. சென்னையைச் சேர்ந்த ஏர்செல் நிறுவனத்தின் உரிமையாளர் சிவசங்கரனுக்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை வழங்குவதில் தயாநிதி மாறன் தாமதம் செய்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து கடந்த 6 ம் தேதி சிவசங்கரனிடம் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரணை நடத்தினார்கள். அப்போது தங்களக்கு ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் இழுத்தடித்தது உண்மைதான் என்று சிவசங்கரன் சி.பி.ஐ.யிடம் கூறியுள்ளார்.
இந்த நிலையில் நேற்று சுப்ரீம் கோர்ட்டில் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கு தொடர்பான விசாரணை விபரங்களை சி.பி.ஐ. தாக்கல் செய்தது. அப்போது ஆஜரான சி.பி.ஐ. அதிகாரிகள் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் தயாநிதி மாறனும் ஒரு குற்றவாளி என தாங்கள் சந்தேகிப்பதாக கூறியுள்ளனர். மலேசியாவைச் சேர்ந்த மாக்ஸிஸ் என்ற நிறுவனத்தின் அதிபர் அனந்தகிருஷ்ணன் தயாநிதி மாறனின் நெருங்கிய நண்பர். அனந்தகிருஷ்ணனின் கம்பெனிக்கு ஏர்செல் கம்பெனியை விற்பதற்காக ஏர்செல் நிறுவனத்திற்கு ஸ்பெக்ட்ரம் அலைக்கற்றை ஒதுக்கீட்டை வழங்காமல் தயாநிதி மாறன் வேண்டுமென்றே காலம்தாழ்த்தி வந்தார் என்பது தங்களுடைய விசாரணையில் தெரியவந்துள்ளது என்று சி.பி.ஐ. அதிகாரிகள் சுப்ரீம் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர். இந்த காலதாமதத்தை அடுத்து ஏர்செல் அதிபர் சிவசங்கரன் தனது கம்பெனியை மேக்ஸிஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான அஸ்ட்ரா நிறுவனத்திற்கு விற்கவேண்டிய கட்டாய நிலை ஏற்பட்டது. தங்களது விசாரணையில் தயாநிதி மாறனும் 2 ஜி.ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் ஒரு குற்றவாளி என சந்தேகம் ஏற்பட்டுள்ளது என்றும் சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தன் மீது சி.பி.ஐ. அதிகாரிகள் ஊழல் வழக்கு பதிவு செய்தால் அடுத்த நிமிடமே தான் தனது ஜவுளித்துறை அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிடுவதாக தயாநிதி மாறன் ஏற்கனவே கூறியிருக்கிறார். இப்போது இவர் குற்றவாளி என சந்தேகிப்பதாக சி.பி.ஐ. கூறியுள்ளதால் இவர் எந்த நேரமும் தனது பதவியை ராஜினாமா செய்யலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தயாநிதி மாறனை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று ஏற்கனவே பா.ஜ.க., அ.தி.மு.க. போன்ற கட்சிகள் பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்திவந்தன என்பது குறிப்பிடத்தக்கது
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2026சென்னை, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
அதிகார பகிர்வுக்கான நேரமிது: காங்., எம்.பி. கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம்
05 Jan 2026சென்னை, அதிகார பகிர்வுக்கான நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டம்: தொழிலாளர்கள் 100 பேருக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
05 Jan 2026சென்னை, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்
-
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
05 Jan 2026சென்னை, திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-01-2026
05 Jan 2026 -
சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை
05 Jan 2026நேபிடாவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
-
58-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை
05 Jan 2026சென்னை, 58-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.13.73 கோடி மதிப்பில் 155 புதிய வாகனங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்
-
எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் கடிதம்
05 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
-
திருப்பரங்குன்ற மலை தீப தூண் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை இன்று தீர்ப்பு
05 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ஜி.
-
முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத் கோவிந்த் திடீர் சந்திப்பு
05 Jan 2026டெல்லி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினர்.
-
சென்னையில் புத்தகத் திருவிழாவை ஜன 8-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
05 Jan 2026சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
-
கிரீன்லாந்தை எடுத்து கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
05 Jan 2026வாஷிங்டன், டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்றும் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் 
-
ஒரே நாளில் 2 - வது முறையாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: தங்கம் ரூ.1,280 - வெள்ளி ரூ.9, 000 அதிகரிப்பு
05 Jan 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜன. 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
-
சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் ராஜ்நாத் சிங்
05 Jan 2026கோவா, 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்ட சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து
-
வெனிசுலா விவகாரம்: போப் லியோ வேண்டுகோள்
05 Jan 2026வாடிகன் சிட்டி, வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்: அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் ரோட்ரிகஸ் அழைப்பு
05 Jan 2026காராகஸ், வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இஷா சிங் டெல்லிக்கு திடீரென இடமாற்றம்
05 Jan 2026புதுச்சேரி, புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.எஸ்.பி. இஷா சிங், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு இந்திய அணி முன்னேற பி.சி.சி.ஐ.க்கு கில் புதிய யோசனை
05 Jan 2026மும்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் மு
-
தனது அரசு மீது விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்ட தயங்கமாட்டேன்: முதல்வர் ரேவந்த் பேச்சால் சர்ச்சை
05 Jan 2026ஐதராபாத், தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதல்வர்&nbs
-
தேர்தல் செயலியை மேம்படுத்த கருத்து கூறலாம்: பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்
05 Jan 2026சென்னை, தேர்தல் செயலியை மேம்படுத்தும் கருத்துகளை கூறலாம் என்று பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
-
ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கும் விவகாரம்: இந்தியாவுக்கு அமெரிக்க அதிபர் ட்ரம்ப் எச்சரிக்கை
05 Jan 2026நியூயார்க், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாவிட்டால் இந்தியாவுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ள
-
முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு எதிரொலி: வங்கதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்பிற்கு தடை
05 Jan 2026டாக்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளி
-
கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கனிமொழி எம்.பி.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
அபுதாபியில் கார் விபத்து: இந்தியர் 4 பேர் உயிரிழப்பு
05 Jan 2026அபுதாபி, அபுதாபியில் நடந்த கார் விபத்தில் கேரளாவை சேர்ந்த 4 பேர் உயிரிழந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.



