எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

சென்னை, அக்.9 - தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடிக்க துவங்கி உள்ளது. கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ள தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பரிதி இளம் வழுதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். தி.மு.க.வை பற்றி கருணாநிதி இரும்பு கோட்டை அதை தகர்க்க யாராவது பிறந்து வரவேண்டும் என்று பெருமையாக குறிப்பிடுவார். தற்போது இரும்பு கோட்டை துருப்பிடிக்க துவங்கி உள்ளது. குடும்பத்தாரை விரும்பிய பதவிகளில் வைத்து அழகு பார்த்து கருணாநிதி அதற்கான பலனை கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த படுதோல்வி மூலம் பெற்றார்.
சிறையில் கனிமொழி பற்றி கவலைப்படும் கருணாநிதி நில அபகரிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகும் தி.மு.க.வினர் பற்றி சிறிது கூட கவலைப்படாதது கட்சிக்குள் பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.
கட்சி தோற்றதற்கு காரணம் குடும்பத்தார் கட்சியில் நடத்தும் ஆதிக்க அரசியல் என்று பலரும் வெளிப்படையாக பேச துவங்கி விட்டனர்.
ஒருபுறம் மு.க.ஸ்டாலின் மறுபுறம் அழகிரி இடையே நடக்கும் சண்டை மேலுக்கு மறைக்கப்பட்டாலும் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்விலும் எதிரொலித்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்த சேகர்பாபுவுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம் வி.எஸ்.பாபுவுக்கும், பரிதி இளம் வழுதிக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் உள்ள நெருக்கம் காரணமாக வி.எஸ்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
திரைப்பட நடிகர் தியாகு தி.மு.க.வில் ஆரம்பம் முதல் தி.மு.க.வில் பாடுபட்டு வந்தவர் ஆனால் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் வருத்தத்துடன் வெளியேறிய அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் பல இரண்டாம் கட்ட தலைவவ்கள் கடும் ஆத்திரத்துடன் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான தோல்வியை தழுவிய கருணாநிதி அதற்கான காரணங்களை ஏற்று கொள்ளாமல் இன்றுவரை காகித அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வருவதும் தன் மகளை வெளியே கொண்டு வருவதை பற்றி மட்டுமே கவலைப்பட்டு அதற்கான வேலைகளில் மட்டும் ஈடுபடுவது தி.மு.க.வினரிடையே பெரும் எரிச்சலை கிளப்பி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதற்காக பல தி.மு.க அமைச்சர்களும் பல்வேறு சித்து வேலைகளை தனது தொகுதியில் செய்தனர். வாக்காளருக்கு பணம் கொடுப்பது உட்பட பல்வேறு வேலைகளை தனது தொகுதிக்குட்பட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வழக்கம் போல் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று எண்ணியிருந்தனர்.
இதேபோல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம் வழுதி பணத்தை தண்ணீராக இறைத்தார். தொகுதியில் வேலை செய்ய பலரை பொறுப்பாளராக போட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் வைத்த உள்ளடி காரணமாகவும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் முதல்முறையாக போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் தோற்றுபோனார்.
தனது தோல்விக்கு எழும்பூர் பகுதியை சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கு.வீராசாமி 103-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன் ஆகியோர் காரணம் என்று பரிதி அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இதில் எழும்பூர் கு.வீராசாமி பரிதி இளம் வழுதி டவுசர் போட்ட காலத்திலேயே தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர். இவர்கள் 3 பேரும் சேகர்பாபுவை பிடித்து ஸ்டாலினுடன் பேசி சரி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதனால் கடும் வெறுப்படைந்த பரிதி இளம் வழுதி தனது துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கருணாநிதிக்கு கடிதம் எழுதி அனுப்பினர். தனது விலகல் கடிதத்தில் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பரிதி இளம் வழுதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர் கருணாநிதியை அப்பா என்று தான் அழைப்பார். அப்படிப்பட்ட பரிதி இளம் வழுதி தி.மு.க. தலைமையை விமர்சித்து விலகல் கடிதம் எழுதி அனுப்பி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்![]() 9 months 1 week ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்![]() 9 months 2 weeks ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.![]() 10 months 1 week ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-07-2025.
05 Jul 2025 -
தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல்: அமைச்சர் சேகர்பாபு
05 Jul 2025சென்னை, திருச்செந்தூர் கோவில் குடமுழுக்கு விழா தி.மு.க. ஆட்சியின் ஆன்மீக புரட்சிக்கு ஒரு மைல்கல் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.
-
வரும் 8-ம் தேதி ராமதாஸ் தலைமையில் பா.ம.க. செயற்குழு கூட்டம்
05 Jul 2025திண்டிவனம், பா.ம.க. செயற்குழு கூட்டம் வரும் 8ம் தேதி நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம்: சென்னை ஐகோர்ட்
05 Jul 2025சென்னை : ஆயுர்வேத மருந்துகளுக்கு இறக்குமதி உரிமம் கட்டாயம் பெற வேண்டும் என்று ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
அ.தி.மு.க. கூட்டணிக்கு வருமாறு விஜய்க்கு மறைமுக அழைப்பு விடுத்த எடப்பாடி பழனிசாமி
05 Jul 2025சென்னை, தி.மு.க. ஆட்சியை அகற்ற நினைப்பவர்களுடன் கூட்டணி அமைப்பதில் மகிழ்ச்சி அடைகிறோம் என எடப்பாடி பழனிசாமி கூறினார்.
-
அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம்: தனி நீதிபதியின் உத்தரவை உறுதி செய்தது ஐகோர்ட்
05 Jul 2025சென்னை, அரசு மருத்துவ கல்லூரி டீன் நியமனம் தொடர்பாக, தனி நீதிபதியின் உத்தரவை சென்னை ஐகோர்ட் உறுதி செய்துள்ளது.
-
உ.பி., யில் சோகம்: கல்லூரி சுவரில் கார் மோதி மணமகன் உட்பட 8 பேர் பலி
05 Jul 2025லக்னோ, உத்தரபிரதேச மாநிலத்தில் கல்லூரி வளாக சுவரில் கார் மோதிய விபத்தில் மணமகன் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
'தமிழ் மாநில பகுஜன் சமாஜ்' புதிய கட்சி தொடங்கினார் பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்
05 Jul 2025சென்னை : தமிழ் மாநில பகுஜன் சமாஜ் கட்சியின் புதிய கட்சியை ஆம்ஸ்ட்ராங் மனைவி பொற்கொடி தொடங்கியுள்ளார்.
-
புதிய வரி விகிதம் ஆகஸ்ட் 1 முதல் அமல்: 12 நாடுகளுக்கான வரி கடிதத்தில் கையெழுத்திட்டார் அதிபர் ட்ரம்ப்
05 Jul 2025வாஷிங்டன் : வரி விகிதம் தொடர்பாக 12 நாடுகளுக்கான கடிதத்தில் தான் கையெழுத்து இட்டுவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
-
சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் தங்கம்: தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் வாழ்த்து
05 Jul 2025சென்னை, சர்வதேச ஸ்கேட்டிங் போட்டியில் வெற்றி பெற்ற தூத்துக்குடி மாணவிக்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்தார்.
-
விஜய் கட்சியிலிருந்து பிரசாந்த் கிஷோர் திடீர் விலகல்
05 Jul 2025சென்னை, விஜய் கட்சிக்கு தேர்தல் ஆலோசனை வழங்கும் பொறுப்பை ஏற்றிருந்த பிரசாந்த் கிஷோர், அதில் இருந்து விலகிக் கொண்டுள்ளார்.
-
சிறுமி பாலியல் வன்கொடுமை: இங்கிலாந்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை
05 Jul 2025லண்டன் : இங்கிலாந்தில் சிறுமி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இந்திய வம்சாவளி இளைஞருக்கு ஆயுள் தண்டனை அறிவிக்கப்பட்டுள்ளது.
-
தொடர் மழை, வெள்ளம்: அமெரிக்காவில் 13 பேர் பலி
05 Jul 2025நியூயார்க் : அமெரிக்காவில் தொடர் மழை வெள்ளத்தில் இதுவரை 13 பேர் உயிரிழந்துள்ளனர்.
-
போர்நிறுத்தம் குறித்து ஹமாஸின் அறிவிப்பால் மகிழ்ச்சி
05 Jul 2025டெல் அவிவ் : காஸாவில் போர்நிறுத்தம் குறித்த வரைவுக்கு பதிலளித்துள்ளதாக ஹமாஸ் அறிவித்துள்ளது.
-
சி.பி.எஸ்.இ. பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான விதிமுறைகள் வெளியீடு
05 Jul 2025புதுடில்லி : 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இரண்டு முறை நடத்தப்படும் என சி.பி.எஸ்.இ. அறிவித்திருந்தது. அதற்கான தகுதி அளவுகோல் மற்றும் விதிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது.
-
காசாவில் 613 பாலஸ்தீனியர்கள் கொலை: ஐ.நா. குற்றச்சாட்டு
05 Jul 2025வாஷிங்டன் : கடந்த மே மாதத்தில் இருந்து காசாவில் நிவாரண உதவி பெற முயன்ற 613 பாலஸ்தீனியர்கள் கொலை செய்யப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
-
வரும் 2026 சட்டசபை தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும்: எடப்பாடி பழனிசாமி உறுதி
05 Jul 2025சென்னை, 2026 தேர்தலில் அதி.மு.க. கூட்டணி வெற்றிபெற்று பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்கும் என அதி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
-
வங்கி மோசடி வழக்கு; நீரவ் மோடியின் சகோதரர் கைது
05 Jul 2025வாஷிங்டன் : பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல ஆயிரம் கோடி மோசடி செய்த நீரவ் மோடியின் சகோதரர் நேஹல் மோடி அமெரிக்காவில் கைது செய்யப்பட்டார்.
-
ஜாமீன் கோரி சென்னை ஐகோர்ட்டில் நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா மனு
05 Jul 2025சென்னை, போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணா ஆகியோர் சென்னை ஐகோர்ட்டில் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்துள்ளனர்.
-
எந்த காலக்கெடுவுக்கும் இந்தியா அஞ்சாது: ராகுலுக்கு பியூஷ் கோயல் பதிலடி
05 Jul 2025புதுடெல்லி, எந்த காலக்கெடுவுக்கும் அஞ்சி இந்தியா செயல்படாது என்று மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் கூறினார்.
-
சுற்றுப்பயணத்திற்கான கட்சிப் பாடல், லோகோவை வெளியிட்டார் இ.பி.எஸ்.
05 Jul 2025சென்னை, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்துக்கான பாடல் மற்றும் லோகோ அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று (சனிக்கிழமை) வெளியிடப்பட்டது.
-
சென்னை, மதுரை உள்ளிட்ட இடங்களில் இருந்து சர்வதேச விண்வெளி மையத்தை பொதுமக்கள் இன்று பார்க்கலாம்
05 Jul 2025சென்னை : சர்வதேச விண்வெளி மையத்தை இன்று இரவு 8 மணிக்கு முதல் 8.06 மணி வரை சென்னை, திருச்சி, மதுரை, கோவை, பெங்களூரு, ஐதராபாத், விசாகப்பட்டினம் ஆகிய நகரங்களில் பார்க்கலாம
-
மராத்தி பேசாவிட்டால் காதுகளுக்கு கீழே அடியுங்கள்: ராஜ் தாக்கரே
05 Jul 2025மும்பை : மகாராஷ்டிராவில் மராத்தி பேசாவிட்டால் காதுக்குக் கீழே அடியுங்கள் என்ற ராஜ் தாக்கரே பேச்சால் சர்ச்சை எழுந்துள்ளது.
-
கும்பாபிஷேக விழா: திருச்செந்தூரில் எஸ்.பி. ஆய்வு
05 Jul 2025திருச்செந்தூர் : திருச்செந்தூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பாதுகாப்பு ஏற்பாடுகளை எஸ்.பி. ஆல்பர்ட் ஜான் ஆய்வு நடத்தினார்.
-
பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் உற்சாக வரவேற்பு
05 Jul 2025பியூனோஸ் அயர்ஸ், பிரதமர் மோடிக்கு அர்ஜென்டினாவில் பாரம்பரிய முறையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.