எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, அக்.9 - தி.மு.க.வில் கோஷ்டி பூசல் வெடிக்க துவங்கி உள்ளது. கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என கருணாநிதிக்கு கடிதம் எழுதியுள்ள தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் பரிதி இளம் வழுதி தனது கட்சி பதவியை ராஜினாமா செய்துள்ளார். தி.மு.க.வை பற்றி கருணாநிதி இரும்பு கோட்டை அதை தகர்க்க யாராவது பிறந்து வரவேண்டும் என்று பெருமையாக குறிப்பிடுவார். தற்போது இரும்பு கோட்டை துருப்பிடிக்க துவங்கி உள்ளது. குடும்பத்தாரை விரும்பிய பதவிகளில் வைத்து அழகு பார்த்து கருணாநிதி அதற்கான பலனை கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு கிடைத்த படுதோல்வி மூலம் பெற்றார்.
சிறையில் கனிமொழி பற்றி கவலைப்படும் கருணாநிதி நில அபகரிப்பு உட்பட பல்வேறு வழக்குகளில் கைதாகும் தி.மு.க.வினர் பற்றி சிறிது கூட கவலைப்படாதது கட்சிக்குள் பலரையும் எரிச்சலுக்கு ஆளாக்கி வருகிறது.
கட்சி தோற்றதற்கு காரணம் குடும்பத்தார் கட்சியில் நடத்தும் ஆதிக்க அரசியல் என்று பலரும் வெளிப்படையாக பேச துவங்கி விட்டனர்.
ஒருபுறம் மு.க.ஸ்டாலின் மறுபுறம் அழகிரி இடையே நடக்கும் சண்டை மேலுக்கு மறைக்கப்பட்டாலும் உள்ளாட்சி தேர்தல் வேட்பாளர் தேர்விலும் எதிரொலித்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டு தி.மு.க.வில் இணைந்த சேகர்பாபுவுக்கு அளிக்கப்படும் அதிகப்படியான முக்கியத்துவம் வி.எஸ்.பாபுவுக்கும், பரிதி இளம் வழுதிக்கும் கடும் எரிச்சலை ஏற்படுத்தி வந்தது. ஸ்டாலினுக்கும் சேகர்பாபுவுக்கும் உள்ள நெருக்கம் காரணமாக வி.எஸ்.பாபுவின் மாவட்டச் செயலாளர் பதவி பறிக்கப்பட்டது என்று கூறப்பட்டது.
திரைப்பட நடிகர் தியாகு தி.மு.க.வில் ஆரம்பம் முதல் தி.மு.க.வில் பாடுபட்டு வந்தவர் ஆனால் அவருக்கு உரிய முக்கியத்துவம் அளிக்கப்படாததால் வருத்தத்துடன் வெளியேறிய அவர் அ.தி.மு.க.வில் இணைந்தார். இதேபோல் பல இரண்டாம் கட்ட தலைவவ்கள் கடும் ஆத்திரத்துடன் உள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் கடுமையான தோல்வியை தழுவிய கருணாநிதி அதற்கான காரணங்களை ஏற்று கொள்ளாமல் இன்றுவரை காகித அறிக்கை அரசியல் மட்டுமே நடத்தி வருவதும் தன் மகளை வெளியே கொண்டு வருவதை பற்றி மட்டுமே கவலைப்பட்டு அதற்கான வேலைகளில் மட்டும் ஈடுபடுவது தி.மு.க.வினரிடையே பெரும் எரிச்சலை கிளப்பி உள்ளது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது ஜெயித்து விடவேண்டும் என்பதற்காக பல தி.மு.க அமைச்சர்களும் பல்வேறு சித்து வேலைகளை தனது தொகுதியில் செய்தனர். வாக்காளருக்கு பணம் கொடுப்பது உட்பட பல்வேறு வேலைகளை தனது தொகுதிக்குட்பட்ட பொறுப்பாளர்களிடம் ஒப்படைத்தனர். வழக்கம் போல் ஓட்டுக்கு பணம் கொடுத்து ஜெயித்து விடலாம் என்று எண்ணியிருந்தனர்.
இதேபோல் எழும்பூர் தொகுதியில் போட்டியிட்ட பரிதி இளம் வழுதி பணத்தை தண்ணீராக இறைத்தார். தொகுதியில் வேலை செய்ய பலரை பொறுப்பாளராக போட்டிருந்தார். இதில் கட்சிக்காரர்கள் வைத்த உள்ளடி காரணமாகவும் பொதுமக்களின் கடும் எதிர்ப்பு காரணமாகவும் முதல்முறையாக போட்டியிட்ட அ.தி.மு.க கூட்டணியில் உள்ள தே.மு.தி.க. வேட்பாளர் நல்லதம்பியிடம் தோற்றுபோனார்.
தனது தோல்விக்கு எழும்பூர் பகுதியை சேர்ந்த தலைமை கழக பேச்சாளர் கு.வீராசாமி 103-வது வட்ட தி.மு.க. செயலாளர் ஜெ.கிருஷ்ணமூர்த்தி பொதுக்குழு உறுப்பினர் கே.எஸ்.எம்.நாதன் ஆகியோர் காரணம் என்று பரிதி அளித்த புகாரின் பேரில் 3 பேரும் கட்சியை விட்டு தற்காலிகமாக நீக்கப்பட்டனர்.
இதில் எழும்பூர் கு.வீராசாமி பரிதி இளம் வழுதி டவுசர் போட்ட காலத்திலேயே தி.மு.க.வில் பேச்சாளராக இருந்தவர். இவர்கள் 3 பேரும் சேகர்பாபுவை பிடித்து ஸ்டாலினுடன் பேசி சரி செய்து விட்டதாக கூறப்படுகிறது. இதனால் தற்காலிகமாக கட்சியை விட்டு நீக்கப்பட்ட 3 பேரையும் தொடர்ந்து பணியாற்றிட அனுமதிக்கப்படுவார்கள் என்று பொதுச்செயலாளர் அன்பழகன் அறிவித்திருந்தார்.
இதனால் கடும் வெறுப்படைந்த பரிதி இளம் வழுதி தனது துணைபொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து கருணாநிதிக்கு கடிதம் எழுதி அனுப்பினர். தனது விலகல் கடிதத்தில் கட்சியில் உள்கட்சி ஜனநாயகம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.
பரிதி இளம் வழுதி ஸ்டாலினுக்கு மிக நெருக்கமானவர் கருணாநிதிக்கும் நெருக்கமானவர் கருணாநிதியை அப்பா என்று தான் அழைப்பார். அப்படிப்பட்ட பரிதி இளம் வழுதி தி.மு.க. தலைமையை விமர்சித்து விலகல் கடிதம் எழுதி அனுப்பி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
அதிகார பகிர்வுக்கான நேரமிது: காங்., எம்.பி. கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம்
05 Jan 2026சென்னை, அதிகார பகிர்வுக்கான நேரம் இது என்று காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூரின் கருத்துக்கு தி.மு.க. கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
-
மானிய விலையில் இ-ஸ்கூட்டர் திட்டம்: தொழிலாளர்கள் 100 பேருக்கு வழங்கி முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார்
05 Jan 2026சென்னை, தமிழ்நாடு இணையம் சார்ந்த கிக் தொழிலாளர்கள் நல வாரியத்தில் பதிவு பெற்ற 100 தொழிலாளர்களுக்கு புதிய இ-ஸ்கூட்டர் வாங்க மானியம் வழங்கும் திட்டத்தினை முதல்வர் மு.க.ஸ்
-
திருச்சியில் மோடி பொங்கல் விழா: மத்திய அமைச்சர் அமித்ஷா பங்கேற்பு
05 Jan 2026சென்னை, திருச்சியில் நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கலந்து கொண்டார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 05-01-2026
05 Jan 2026 -
சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகள் விடுதலை
05 Jan 2026நேபிடாவ், சுதந்திர தினத்தை முன்னிட்டு மியான்மரில் 6,134 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு வழங்கி அந்நாட்டு ராணுவ தலைவர் மின் ஆங் ஹ்லைங் உத்தரவிட்டுள்ளார்.
-
எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும்: தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் கடிதம்
05 Jan 2026கொல்கத்தா, எஸ்.ஐ.ஆர். பணிகளை உடனே நிறுத்தவேண்டும் என்று தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார்.
-
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறைக்கு ரூ.13.73 கோடி மதிப்பில் 155 புதிய வாகனங்கள் முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
05 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று (5.1.2026) சென்னை, தீவுத்திடலில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையில் பணிபுரியும் வருவாய் நிருவாகம் மற்றும் பேரிடர் மேலாண்
-
முரளி மனோகர் ஜோஷியுடன் ராம்நாத் கோவிந்த் திடீர் சந்திப்பு
05 Jan 2026டெல்லி, பா.ஜ.க. மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷியுடன் முன்னாள் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் சந்தித்து பேசினர்.
-
திருப்பரங்குன்ற மலை தீப தூண் விவகாரம்: மேல் முறையீட்டு வழக்கில் ஐகோர்ட் கிளை இன்று தீர்ப்பு
05 Jan 2026மதுரை, திருப்பரங்குன்றம் மலையில் உள் தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பான மேல் முறையீட்டு வழக்கில் உயர் நீதிமன்ற மதுரை கிளை இன்று தீர்ப்பளிக்கிறது. நீதிபதிகள் ஜி.
-
58-வது பிறந்தநாள்: அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை
05 Jan 2026சென்னை, 58-வது பிறந்தநாளை முன்னிட்டு அண்ணா, கருணாநிதி நினைவிடங்களில் கனிமொழி எம்.பி. மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
-
சமுத்திர பிரதாப் கப்பலை நாட்டுக்கு அர்ப்பணித்து வைத்தார் ராஜ்நாத் சிங்
05 Jan 2026கோவா, 6,000 நாட்டிக்கல் மைல்கள் வரை தொடர்ந்து பயணிக்கும் திறன் கொண்ட சமுத்திர பிரதாப் கப்பலை மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் நாட்டுக்கு அர்ப்பணித்து
-
தமிழகத்தில் 5 நாட்கள் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை ஆய்வு மையம் தகவல்
05 Jan 2026சென்னை, தமிழகம், புதுச்சேரியில் அடுத்த 5 நாட்கள் மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
வெனிசுலா விவகாரம்: போப் லியோ வேண்டுகோள்
05 Jan 2026வாடிகன் சிட்டி, வெனிசுலா நாட்டின் இறையாண்மை, சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என்று போப் லியோ வேண்டுகோள் விடுத்துள்ளார்.
-
சென்னையில் புத்தகத் திருவிழாவை ஜன 8-ல் முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்
05 Jan 2026சென்னை, தென்னிந்திய புத்தக விற்பனையாளர் மற்றும் பதிப்பாளர் சங்கம் நடத்தும் இந்த 49-வது புத்தகக் கண்காட்சி, வரும்ஜனவரி 8 முதல் ஜனவரி 21 வரை நடைபெற உள்ளது.
-
ஒரே நாளில் 2 - வது முறையாக உயர்ந்த தங்கம், வெள்ளி விலை: தங்கம் ரூ.1,280 - வெள்ளி ரூ.9, 000 அதிகரிப்பு
05 Jan 2026சென்னை, வாரத்தின் முதல் நாளான நேற்று சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை (ஜன. 5) ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 1,280 உயர்ந்துள்ளது.
-
வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்றுங்கள்: அமெரிக்காவுக்கு இடைக்கால அதிபர் ரோட்ரிகஸ் அழைப்பு
05 Jan 2026காராகஸ், வெனிசுவேலாவுடன் இணைந்து பணியாற்ற அமெரிக்காவுக்கு அந்நாட்டின் இடைக்கால அதிபராக பொறுப்பேற்றுள்ள டெல்சி ரோட்ரிகஸ் அழைப்பு விடுத்துள்ளார்.
-
கிரீன்லாந்தை எடுத்து கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும்: அதிபர் ட்ரம்புக்கு டென்மார்க் பிரதமர் பதிலடி
05 Jan 2026வாஷிங்டன், டென்மார்க்கின் பகுதிகளை இணைத்துக் கொள்ளும் உரிமை அமெரிக்காவுக்கு கிடையாது என்றும் கிரீன்லாந்தை எடுத்துக் கொள்வோம் என மிரட்டுவதை நிறுத்த வேண்டும் என்றும் 
-
உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடர் இறுதிக்கு இந்திய அணி முன்னேற பி.சி.சி.ஐ.க்கு கில் புதிய யோசனை
05 Jan 2026மும்பை, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இறுதி போட்டிக்கு இந்திய அணி முன்னேற வேண்டும் என்றால் டெஸ்ட் தொடர் ஆரம்பிப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக வீரர்களுக்கு 15 நாள் மு
-
தேர்தல் செயலியை மேம்படுத்த கருத்து கூறலாம்: பொதுமக்களுக்கு அழைப்பு விடுத்த தேர்தல் ஆணையம்
05 Jan 2026சென்னை, தேர்தல் செயலியை மேம்படுத்தும் கருத்துகளை கூறலாம் என்று பொதுமக்களுக்கு தேர்தல் ஆணையம் அழைப்பு விடுத்துள்ளது.
-
தனது அரசு மீது விமர்சிப்பவர்கள் நாக்கை வெட்ட தயங்கமாட்டேன்: முதல்வர் ரேவந்த் பேச்சால் சர்ச்சை
05 Jan 2026ஐதராபாத், தெலங்கானா சட்டமன்றத்தில், 'தனது அரசின் மீதும், விவசாயிகள் மீதான அதன் அர்ப்பணிப்பின் மீதும் கேள்வி எழுப்புபவர்களின் "நாக்கை வெட்டிவிடுவேன்"' என்று முதல்வர்&nbs
-
புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் பரபரப்பை ஏற்படுத்திய இஷா சிங் டெல்லிக்கு திடீரென இடமாற்றம்
05 Jan 2026புதுச்சேரி, புதுச்சேரி த.வெ.க. கூட்டத்தில் கவனம் பெற்ற லஞ்ச ஒழிப்புத் துறை எஸ்.எஸ்.பி. இஷா சிங், டெல்லிக்கு பணியிட மாற்றம் செய்யப்படடுள்ளார்.
-
கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி: கனிமொழிக்கு முதல்வர் பிறந்தநாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கர்ஜனை மொழி - என் தங்கை கனிமொழி முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிப்பு எதிரொலி: வங்கதேசத்தில் ஐ.பி.எல். ஒளிபரப்பிற்கு தடை
05 Jan 2026டாக்கா, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வேகப்பந்து வீச்சாளர் முஸ்தபிசுர் ரஹ்மான் விடுவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, இந்தியன் பிரீமியர் லீக் போட்டிகளை அந்நாட்டில் ஒளி
-
கனிமொழிக்கு அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்து
05 Jan 2026சென்னை, கனிமொழி எம்.பி.க்கு உள்துறை அமைச்சர் அமித்ஷா பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.
-
டெல்லி கலவர வழக்கு: உமர் காலித், இமாமுக்கு ஜாமீன் வழங்க மறுப்பு
05 Jan 2026புது டெல்லி, டெல்லி கலவர வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள உமர் காலித், ஷர்ஜீல் இமாமுக்கு ஜாமீன் வழங்க சுப்ரீம் கோர்ட் மறுத்துள்ளது.



