எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தைப் போல் ஜம்முவை கல்வியில் மேம்படுத்த இளையோர் ஒத்துழைக்க வேண்டும் - குமரிக்கு வருகை தந்த 50 ஜம்மு காஷ்மீர் இளைஞர்களிடம் கலெக்டர் சஜ்ஜன் சிங் ரா.சவான் கூறினார். தமிழ்நாடு மாநில அளவில் நேரு யுவ கேந்திரா சார்பில் நடை பெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியின் ஒரு பகுதியாக, ஜம்மு க்ஷ காஷ்மீர் மாநிலத்திலிருந்து 50 இளையோர்கள் குமரிக்கு வந்துள்ளனர். இவர்கள் இன்றும், நாளையும் நமது கன்னியாகுமரி மாவட்டத்தின் பல இடங்களைச் சுற்றி பார்த்தும் குமரி மாவட்ட இளையோருடன் கலந்துரையாடியும் இப்பரிமாற்ற நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
பரிமாற்ற நிகழ்ச்சி
மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பாpமாற்ற நிகழ்ச்சியின்போது, ஜம்மு - காஷ்மீர் இளையோர்கள் குமரி மாவட்ட ஆட்சியரை சந்தித்து கலந்துரையாடும் நிகழ்வு மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திலுள்ள நாஞ்சில் ஹாலில் நடைபெற்றது. இந்நிகழ்சிக்கு நேரு யுவ கேந்திரா சங்கத்தின் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கர்நாடக மாநில இயக்குநர் சதீஸ் தலைமையேற்றார். காரைக்கால், நாகப்பட்டினம் மற்றும் திருநெல்வேலி மாவட்ட இளையோர் ஒருங்கிணைப்பாளர் செந்தில் குமார் முன்னிலை வகித்தார். காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை நடைபெறும் மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியாக இதுவே முதல் முறை நடத்தப்படுவதால் இது பெரிதும் வரவேற்க தக்க நிகழ்ச்சியென்றும் இதில் பங்கு பெறும் இளையோர்கள் பேறுபெற்றோர் என்றும் பாராட்டியதோடு, தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் பேசியதாவது் இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது மிகவும் வரவேற்கத்தக்க நிகழ்ச்சி. வேற்றுமையில் ஒற்றுமை காணும் நமது தேசத்தின் முக்கியத்துவத்தை இன்னும் மேம்படுத்தும் நிகழ்ச்சியாகும். இது மாநிலங்களைக் கடந்து இளையோர்களிடையே ஒற்றுமையையும், ஒமைப்பாட்டையும் ஏற்படுத்தும் ஒரு உன்னத நிகழ்ச்சியாகும். இதன் வாயிலாக இளையோர்கள் ஒருவருக்கொருவர் தமது பகுதியிலுள்ள, மாநிலத்திலுள்ள, கலாச்சாரம், பழக்க வழக்கங்கள், விவசாயம், கல்வி முறைகள், பலதரப்பட்ட வாழ்வியல் ஆதாரங்கள், சுற்றுப்புற சுகாதாரம் போன்றவற்றைப்பற்றி தெரிந்து கொள்வதற்கு வழிசெய்கிறது.மேலும், கன்னியாகுமரி மாவட்டத்தைப் பொறுத்தவரை இது தமிழ்நாட்டிலேயே கல்வியில் சிறந்த மாவட்டம். இளையோர்கள் கல்வியிலும், சுயதொழில் மேம்பாட்டிலும் மிகவும் ஆர்வம் காட்டுகிறவர்கள். அவர்களது வளர்ச்சிக்காக மாவட்ட நிர்வாகமும் தமது கடமையைச் சிறப்பாகச் செய்து வருகிறது. குறிப்பாக இளையோரின் வேலை வாய்ப்புக்காக “ஜhப் மேளா” க்கள் நடத்தி, அதன் வாயிலாக, 70-க்கும் மேற்பட்ட கம்பெனிகளிலிருந்து நிர்வாகிகள் கலந்து கொண்டு ஆற்றல் மிக்க இளையோரைத் தொpவு செய்யவும் அவர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கவும் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு செயல்படுத்தப்பட்டது. இதுபோல ஜம்முவிலும் மாவட்ட நிர்வாகம் கல்வி வளர்ச்சிக்கும் இளையோர் மேம்பாட்டிற்கும் அதிக முக்கியத்துவம் கொடுத்து செயல்படுத்துவதற்கு இளையோர்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். குமரி மாவட்டத்திலுள்ள இளையோர்கள் வேலைவாய்ப்புக்காக, சென்னை, கோயம்புத்துர், பெங்களூர் போன்ற இடங்களுக்குச் சென்றும் தமக்கான வேலை வாய்ப்புகளைத் தேடிக் கொள்ளுகிறர்கள். அரசே எல்லோருக்கும் வேலை வாய்ப்பு வழங்குதல் என்பது இயலாதது. எனவே, இளையோர் ஒவ்வொருவரும் தாமாக முன்வந்து, வேலை வாய்ப்புகளைப் பெருக்கி கொள்வதற்கு அரசோடு இணைந்து செயல்பட்டால் ஒவ்வொரு மாநிலமும் விரைவில் முன்னேற்றமடைய முடியும். எனவே இம்முகாமில் கலந்து கொண்டுள்ள இளையோர்கள் ஜம்முவிலும் முன்னேற்றமான காரியங்களை மேற்கொள்வதற்கு மாவட்ட நிர்வாகத்துடன் இணைந்து செயல்பட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். தொடர்ந்து ஜம்மு - காஷ்மீர் இளையோர்களின் கேள்விகளுக்கும் நேர்த்தியான பதில்களைக் கொடுத்து அவர்களை மகிழச்சிபடுத்தினார். இம்மாதம் 6-ம் தேதி சென்னையில் தமிழக ஆளுநரால் ஆரம்பிக்கப்பட்ட இந்த மாநிலங்களுக்கிடையேயான இளையோர் பரிமாற்ற நிகழ்ச்சியானது இம்மாதம் 18-ம் தேதி சென்னையில் நிறைவு பெறுகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
வாசகர் கருத்து
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கால் பாதங்களில் எற்படும் பித்த வெடிப்பை சரிசெய்ய எளிய டிப்ஸ்1 year 3 months ago |
வயிற்றுப்புண் குணமாக இயற்கை மருத்துவம்1 year 3 months ago |
மூடி உதிர்வை தடுத்து மூடி அடர்த்தியாக வளர வேண்டுமா - அப்போ இந்த எண்ணெய்யை பயன்படுத்துங்கள்.1 year 4 months ago |
-
த.வெ.க. உடன் கூட்டணியா? ஓ.பன்னீர் செல்வம் பேட்டி
10 Jan 2026சென்னை, த.வெ.க. உடன் கூட்டணி வைப்பீர்களா என்ற கேள்விக்கு தை பிறந்தால் வழி பிறக்கும் என ஓ.பி.எஸ். தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் –10-01-2026
10 Jan 2026 -
அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்கள் என்னிடம் உள்ளது: மம்தா பானர்ஜி
10 Jan 2026கொல்கத்தா, நிலக்கரி ஊழல் பணம் தொடர்பாக அமித்ஷாவுக்கு எதிரான ஆதாரங்களை கொண்ட பென் டிரைவ் என்னிடம் உள்ளது என்று மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி தெரிவித்திருப்பது பரபரப
-
குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி, பதாகை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்
10 Jan 2026சென்னை, குறள் வார விழாவுக்கான சிறப்பு காணொலி மற்றும் பதாகையை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார்.
-
தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்த ஐகோர்ட்
10 Jan 2026சென்னை, தமிழ்நாடு வக்பு வாரியம் செயல்பட இடைக்கால தடை விதித்து ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.
-
ஜனநாயகன் பட விவகாரம்: சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்த தயாரிப்பு நிறுவனம்
10 Jan 2026புதுடெல்லி, ஜனநாயகன் பட விவகாரம் தொடர்பாக ஐகோர்ட் தலைமை நீதிபதி அமர்வு விதித்த இடைக்காலத் தடையை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தயாரிப்பு நிறுவனம் மேல்முறையீடு செய்துள்ளத
-
நாளை விண்ணில் பாயும் பி.எஸ்.எல்.வி சி-62: திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம்
10 Jan 2026ஸ்ரீஹரிகோட்டா, பி.எஸ்.எல்.வி சி-62 நாளை விண்ணில் ஏவப்படவுள்ள நிலையில் ராக்கெட் மாதிரியை வைத்து திருப்பதி கோவிலில் இஸ்ரோ விஞ்ஞானிகள் சாமி தரிசனம் செய்தனர்.
-
வரும் சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. யாருடன் கூட்டணி..? பிரேமலதா வைத்த 'சஸ்பென்ஸ்'
10 Jan 2026சென்னை, சட்டசபை தேர்தல் கூட்டணி அறிவிப்பை மாநாட்டில் தெரிவிப்பேன் என்று பிரேமலதா கூறியிருந்த நிலையில் கடலூர் மாநாட்டில் பேசிய பிரேமலதா, "தே.மு.தி.க.
-
மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று கேரளா செல்கிறார்
10 Jan 2026கொச்சி, கேரளாவுக்கு மத்திய அமைச்சர் அமித்ஷா இன்று செல்கிறார்.
-
மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேட்டி
10 Jan 2026கடலூர், மக்களுக்கு பணியாற்றும் கட்சிகள் அனைத்தும் தி.மு.க.வுடன் உள்ளது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.
-
போக்சோ சட்டத்தில் திருத்தம் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை
10 Jan 2026புதுடெல்லி, போக்சோ சட்டத்தில் திருத்தம் வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரிந்துரை செய்துள்ளது.
-
வளர்ச்சியடைந்த இந்தியா: மூன்றாயிரம் இளைஞர்களுடன் பிரதமர் நாளை கலந்துரையாடல்
10 Jan 2026டெல்லி, டெல்லியில் நாளை (திங்கள்கிழமை) அன்று நடைபெறும் விக்சித் பாரத்(வளர்ச்சி அடைந்த இந்தியா) இளம் தலைவர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சியில், இந்தியா மற்றும் வெளிநாடுகளைச்
-
இமாசல பிரதேச பேருந்து விபத்து: பலியானவர்களின் குடும்பத்திற்கு நிவாரணம் அறிவித்தார் பிரதமர்
10 Jan 2026சிம்லா, இமாசல பிரதேசத்தில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் இதுவரை 14 பேர் உயிரிழந்துள்ள நிலையில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களு
-
அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தமா..? நயினார் நாகேந்திரன் விளக்கம்
10 Jan 2026கோவை, அமைச்சரவையில் இடம் கேட்டு அ.தி.மு.க.வுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை என்று நயினார் நாகேந்திரன் தெரிவித்தார்.
-
சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை: பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் விரைவில் தமிழகம் வருகிறார்
10 Jan 2026சென்னை, தமிழக சட்டசபை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த பா.ஜ.க. தேசிய செயல் தலைவர் நிதின் நபின் ஏப்ரல் மாதம் தமிழகம் வருகிறார்.
-
3 அம்ரித் பாரத் ரயில்களை தமிழகம்-மேற்குவங்கம் இடையே இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல்
10 Jan 2026சென்னை, தமிழகம்-மேற்கு வங்கம் இடையே 3 அம்ரித் பாரத் ரயில்களை இயக்க ரயில்வே வாரியம் ஒப்புதல் அளித்துள்ளது.
-
பியட் காரை ஓட்டி மகிழ்ந்த முதல்வர் மு.க.ஸ்டாலின்..!
10 Jan 2026சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலின் பியட் கார் ஓட்டிய வீடியோவை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.
-
நிதிஷ்க்கு பாரத ரத்னா விருது கொடுங்கள்; பிரதமர் மோடிக்கு ஐக்கிய ஜனதா தளம் வலியுறுத்தல்
10 Jan 2026பாட்னா, நிதிஷ் குமாருக்கு பாரத ரத்னா விருது வழங்கவேண்டும் என்று ஐக்கிய ஜனதா தளம் வலியுத்தியுள்ளது.
-
விஜய் பிரச்சார பேருந்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனை வாகன ஓட்டுனரிடமும் விசாரணை
10 Jan 2026சென்னை, விஜய் பிரச்சாரத்திற்கு பயன்படுத்தும் பேருந்தில் நேற்று சி.பி.ஐ. அதிகாரிகள் சோதனையிட்டனர். விஜய் பிரச்சார வாகன ஓட்டுனரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.
-
வார ராசிபலன்
10 Jan 2026 -
இன்றைய முக்கிய நிகழ்ச்சிகள்
10 Jan 2026- மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோவிலில் அஷ்டமி சப்பரம், சகல ஜீவகோடிகளுக்கும் படியளந்தருளிய காட்சி.
- மதுரை செல்லத்தம்மன் உற்சவாரம்பம்.
-
இன்றைய நாள் எப்படி?
10 Jan 2026 -
இன்றைய ராசிபலன்
10 Jan 2026


