முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

செயற்கை சூரியன்

149 சக்தி வாய்ந்த செனான் ஆர்க் மின்விளக்குகளைப் பயன்படுத்தி, உலகின் மிகப்பெரிய செயற்கை சூரியனை ஜெர்மனி விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இந்த ஒளி அமைப்பு, சைன் லைட் என அழைக்கப்படுகிறது. இதன்மூலம் சூரியனை விட 10,000 மடங்கு கதிர்வீச்சு வெளிவருமாம். ஆராய்ச்சியாளர்கள் ஒரு 8x8 அங்குல (20x20cm) உலோகத் தாள் மீது 350 கிலோவாட் தேன்கூடு வடிவ வரிசையில் விளக்குகளை பொருத்தி செயற்கை சூரியனை உருவாக்கியுள்ளனர். இது 3,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் தரும் எனவும் கூறப்படுகிறது. சோதனை முயற்சியில் இருக்கும் இந்தப் புதிய கண்டுபிடிப்பு சூற்றுச்சூழலை பாதிக்காத ஓர் ஆற்றல் உற்பத்தி மையமாகவும், ஹைட்ரஜன் உற்பத்தியை அதிகரிக்கச் செய்யும் முயற்சி என்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மொபைல் ஜாக்கிரதை

இந்தியாவில் நுகர்வோர்கள் பயன்படுத்தும் பேமண்ட் ஆப்ஸ்கள் அனைத்தும் முழுமையான பாதுகாப்பு கொண்டவைகள், ஆனால், பாதுகாப்பான மொபைல் பேமண்ட் ஆப்ஸ்கள் கிடையாதாம். மொபைல் பேமண்ட் சேவைகளில் பயனர் தரவு பாதுகாக்கும் மென்பொருள் நிலை பாதுகாப்பு மட்டுமே உள்ளது, வன்பொருள் அடிப்படையிலான குறியாக்கம் கிடையாது. ஆக அது பயனர் உள்நுழைவு விவரங்கள் மற்றும் தரவு ஆகியவைகளை அணுக அனுமதிக்கக்கூடும் என்று தெரியவந்துள்ளது.

முதன் முறையாக

உலகில் முதன்முறையாக கிங்ஸ்டனில் உள்ள டோனர் எனும் பொம்மை நிறுவனம் திருநங்கை வடிவிலான பொம்மைகளைத் தயாரித்துள்ளது. திருநங்கையான ஜாஸ் ஜென்னிங்ஸை மாடலாக வைத்து இந்த பொம்மைகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இதன்மூலம் திருநங்கைகள் குறித்த நேர்மறை எண்ணங்கள் மக்களிடம் ஏற்படுமாம்,

இலக்கியத்தில் அதிக நோபல் பரிசு பெற்ற நாடு எது தெரியுமா?

இலக்கியத்துக்காக வழங்கப்படும் நோபல் பரிசுதான் உலகிலேயே மிகவும் உயர்ந்த விருதாக கருதப்படுகிறது.  அதில் அதிகமான விருதுகளை குவித்த நாடு பிரான்ஸ். 1901 முதல் 15 பேர் இலக்கியத்துக்காக இதுவரை நோபல் பரிசு வென்றுள்ளனர். அந்த ஆண்டில் முதன்முறையாக நோபல் பரிசு பெற்று சாதனை பட்டியலை தொடங்கி வைத்தவர் பிரெஞ்சு கவிஞர் Sully Prudhomme. அவரை தொடர்ந்து ரெனே தெகார்த்தே, வால்டேர், சார்லஸ் பொதேலர் என பலர் நோபல் பரிசுகளை வென்றுள்ளனர்.

டி.வி.யால் ஆபத்து

25 வயதிற்கு மேற்பட்டவராக இருக்கும் பெண்கள் டி.வி. பார்க்கும் ஒவ்வொரு மணிநேரமும் அவர்களின் வாழ்நாளில் 22 நிமிடங்களை இழக்கிறார்கள் என ஆய்வு மூலம் தெரிகிறது. டி.வி பார்ப்பதால் பெண்களுக்கு உடல் உழைப்பு இல்லாமல் போவதே இத்தகைய பாதிப்புகள் ஏற்படுவதற்கு காரணம் . எனவே உடல் உழைப்பை அதிகப்படுத்தும் வேலையை செய்தால் ஆரோக்கியம் கிடைக்கும்.

அசத்தலாக 5 வண்ணங்களில் நெளிந்தோடும் அதிசய ஆறு

கொலம்பியாவின் லா மக்கரேனாவில் உள்ள கானோ கிறிஸ்டல்ஸ் நதியானது "ஐந்து நிறங்களின் நதி" மற்றும் "திரவ வானவில்" என்று அழைக்கப்படுகிறது, ஏனெனில் தெளிவான நீரின் கீழே நீங்கள் காணக்கூடிய பல வண்ணங்கள் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்துகின்றன. ஆற்றில் உள்ள நீர்வாழ் தாவரங்களின் இனப்பெருக்க செயல்பாட்டின் போது வண்ணங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன, அவை Macarenia clavigera என்று அழைக்கப்படுகின்றன, இங்கு ஓடும் தூய, தெளிவான நீரால் பொது மக்கள் ஈர்க்கப்பட்டு இப்பகுதியை பார்ப்பதற்காக ஆண்டு தோறும் ஏராளமானோர் வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 7 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 7 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 9 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 9 months ago