முக்கிய செய்திகள்
Idhayam Matrimony
முகப்பு

சில சுவாரிஸ்யமான தகவல்கள்

பரங்கி மலை : தெரிந்ததும் தெரியாததும்

பரங்கி மலை இந்தியாவின் பழமையான வரலாற்று சின்னங்களில் ஒன்று. இந்திய நிலவியல் வரை படத்தை தயாரித்த ஆங்கிலேயர்கள் இந்த மலையிலிருந்துதான் இமய மலையை அளவு எடுத்தார்கள் என வரலாறு சொல்கிறது. கடல் மட்டத்தில் இலிருந்து 300 அடி உயரமுள்ள இந்த மலையில்தான் செயிண்ட் தாமஸ் செதுக்கிய கற்சிலுவை ஒன்று இங்கு இன்றும் புழகத்தில் உள்ளது. ஏசுவின் 12 சீடர்களில் ஒருவரான தாமஸ் கேரளா வழியே சாந்தோம் வந்து அங்கிருந்து சைதாப்பேட்டை சின்னமலைக்கு இடம்பெயர்ந்து இறுதியாக இந்த மலைக்கு வந்து சேர்ந்ததாக கிறிஸ்துவ பெருமக்கள் நம்புகிறார்கள். இந்த மலைக்குச் செல்வதற்கு, 135 படிக்கட்டுகளைக் கொண்ட பாதையை ஆர்மீனியர்கள் அமைத்தனர். புனித தோமையரின் சிறு எலும்புத் துண்டு ஒன்று பாதுகாக்கப்பட்டு வருகிறது. அதேபோல 12 திருத்தூதர்களின் திருப்பண்டங்கள் (எலும்புத் துண்டு, சதைத் துண்டு உள்ளிட்ட நினைவுச் சின்னங்கள்) உட்பட 124 புனிதர்களின் திருப்பண்டங்களும் பாதுகாக்கப்பட்டு வருகின்றன. மிக முக்கியமாக, புனித லூக்காவினால் கி.பி.50-ம் ஆண்டு வரையப்பட்டு, தோமையரால் இம்மலைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கருதப்படும் அன்னை மரியாவின் ஓவியமும் இங்கு பாதுகாக்கப்படுகிறது.

டிவியில் தெரியும் உணவின் சுவையை நாவால் வருடி உணரும் புதிய ஸ்கிரீன்

தொலைக்காட்சிப் பெட்டியின் திரையில் தோன்றும் உணவுப் பொருட்களை, நாவால் சுவைக்கும் விதத்தில் ஒரு புதிய திரையை ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர் கண்டுபிடித்துள்ளார்.ஜப்பானைச் சேர்ந்த பேராசிரியர் ஹோமி மியாஷிடா என்பவர்தான் இந்த கண்டுபிடிப்புக்கு சொந்தக்காரர். இதன் மூலம் டிவியில் தோன்றும் உணவு பொருள்களின் சுவையை டிவியின் மீது ஒட்டப்பட்டுள்ள ஒரு வகை பிலிம் மூலம் கண்டு பிடிக்க முடியும். அதை நாவால் வருடுவதன் மூலம் டிவியில் தோன்றும் உணவுப் பொருளின் சுவை தெரியும் என்கிறார். இதை தயாரிக்க இந்திய மதிப்பில் ரூ.65 ஆயிரம் வரை செலவாகும் என்கிறார். இதன் மூலம் தொலைவில் செய்யப்படும் டிஷ்களின் டேஸ்டை நம் டிவிலேயே நாவால் ருசிக்கலாம் என்றால் ஆச்சரியம் தானே..

பழந்தமிழ் பாட்டு :

பழந்தமிழர்கள் அன்றாடம் தங்களது பணியின் போது ஏராளமான இசை வகைமைகளில் பாடல்களை தாமாகவே புனைந்து பாடினர். நெடுந்தூரம் வண்டிப் பயணத்தின்போது தென்பாங்குப்பாட்டு (தெம்மாங்கு) பாடி பயணித்தனர். தொன்று தொட்டு பாடி வந்துள்ள தமிழ் இசைப்பாட்டு வகைகளில் சில : அக்கைச்சி, அச்சோ, அப்பூச்சி, அம்மானை, ஆற்றுவரி, இம்பில், உந்தியார், ஊசல், எம்பாவை, கப்பற்பாட்டு, கழல், சந்துகவரி, சாக்கை, காளம், கானல்வரி, கிளிப்பாட்டு, குணலை, குதம்பை, குயில் குரவை, குறத்தி, கூடல், கொச்சகச்சார்த்து, கோத்தும்பி, தோழிப்பாட்டு, சங்கு சாயல்வரி, சார்த்துவரி, சாழல், செம்போத்து, தச்சராண்டு, தச்சாண்டி, தாலாட்டு, திணைநிலைவரி, திருவங்கமாலை, திருவந்திகாப்பு, தெள்ளோளம், தோளேடக்கம், நிலைவரி, நையாண்டிளா, பகவதி, படைப்புவரி, பந்து, பல்லாண்டு, பல்லி, பள்ளியெழுச்சி, பாம்பாட்டி, பிடாரன், பொற்சுன்னம், மயங்கு திணை நிலைவரி, முகச்சார்த்து, வள்ளைப்பாட்டு, சிந்து, நொண்டிச்சிந்து, கும்மி, கோலாட்டம், ஆனந்தக்களிப்பு, கீர்த்தனம் முதலியன. தமிழ் நாடோடி இசைப்பாடல் வகைகள் : உழவுப்பாட்டு, ஓடப்பாட்டு, நலங்கு, ஆரத்தி, ஊஞ்சல், புதிர்ப்பாட்டு, பழமொழிப் பாட்டு, கோமாளிப்பாட்டு, ஏற்றப்பாட்டு, இறைவைப்பாட்டு, காவடிப்பாட்டு, கப்பற்பாட்டு, படையெழுச்சி, தாலாட்டு, கல்லுளிப்பாட்டு, பாவைப்பாட்டு, வைகறைப்பாட்டு, மறத்தியர் குறத்தியர் பாட்டுகள், பள்ளுப்பாட்டு, பலகடைப்பாட்டு, வள்ளைப்பாட்டு, பிள்ளைப்பாட்டு முதலியன.

குரங்கு வடிவில் ஏலியன்ஸ் அதிர்ச்சியூட்டும் நாசா....

ஏலியன்ஸ் பற்றிய குறிப்புகளை அவ்வப்போது யு.எப்.ஓ என்ற அமைப்பு தகவலை கொடுத்து வருகிறது. அதன்படி, செவ்வாய் கிரகத்தில் குரங்கு வடிவில் ஏலியன்ஸ் இருப்பதாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. அது மட்டுமல்லாமல், பெரிய அளவிலான சிலந்தி மற்றும் நத்தைகள் வடிவில் ஏலியன்ஸ் காணப்படுவதாக கூறியுள்ளது. இந்த புகைப்படங்கள் அனைத்தும் அமெரிக்காவின் நாசா விண்வெளி ஆராய்சி மையத்திடமிருந்து பெறப்பட்டுள்ளது. சமீபத்தில் நாசா, செவ்வாய் கிரக்ததில் ஆறு இருந்ததற்கான ஆதாரத்தை வெளியிட்டுள்ள நிலையில், அங்கு ஏலியன்ஸ் இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளது, செவ்வாயில் குடியேறும் மனிதனின் ஆர்வத்தில் பீதியை கிளப்பியுள்ளது.

செவ்வாயில் உயிரினங்கள்

செவ்வாய் கிரகத்தின் மீது விண்கற்கள் மோதியதால் மிகப்பெரிய சுனாமி அலைகள் ஏற்பட்டிருக்கிறது என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர். சுமார் 300 கோடி ஆண்டுகளுக்கு முன்னர் செவ்வாய் கிரகத்துடன் விண்கற்கள் மோதியதில் உருவான மிகப்பெரிய பள்ளம் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், விண்கற்கள் மோதலில் செவ்வாயில் இருந்த பெருங்கடல்களில் சுமார் 150 மீட்டர் உயரமான சுனாமி அலைகள் எழுந்ததாக தற்போது ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் நீர் உள்ளதா என்ற ஆய்வு தொடர்ந்து வரும் நிலையில், அங்கு நீர் இருந்திருக்க வேண்டும் என தெரிவித்துள்ள ஆராய்ச்சியாளர்கள், இதன்மூலம் அங்கு உயிரினங்கள் வாழ்ந்திருக்கவும் வாய்ப்புள்ளது எனவும் தெரிவித்துள்ளனர்.

வெண்டைக்காய் பயன்கள்

வெண்டைக்காயில் உயர்தரமான பாஸ்பரசும், தாவரப்பசையும், நார்ப்பொருளும் உள்ளன. எளிதில் நமது உடலால் ஏற்றுக்கொள்ளப்படும் சிறந்த மாவுச்சத்துப் பொருட்களும் உள்ளன. இதை அதிகமாக சாப்பிட்டு வந்தால், புத்திக்கூர்மை அதிகரிக்கும். எந்த காரியத்தையும் தெளிவாக அணுகும் ஆற்றல் நமக்கு கிடைக்கும்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

மூளை பலம் பெற | ஞாபக சக்தி பெருக | மூளை சுறுசுறுப்பாக | சுறுசுறுப்பு பெற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago புண்கள் குணமாக | ஆறாத புண்களை ஆற்ற | சிராய்ப்பு புண் | மறைவிடங்களில் உள்ள புண்கள் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 5 months ago வாந்தி நிற்க | கர்ப்பகால வாந்திக்கு, குமட்டல், பித்த வாந்தி 1 year 6 months ago
இரத்த வாந்தி மற்றும் வயிற்று வலி குணமாக | கல்லீரல் வீக்கம், இருமல் வயிற்று வலி குணமாக - சித்த மருத்துவ குறிப்புக்கள் 1 year 6 months ago மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 1 year 8 months ago வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 1 year 8 months ago